சின்னச்சிறுமி
சிறுமி ______க்கு கதை வரிப்பதில் மிகுந்த ஆர்வம். அவள் கற்பனை வரிகளில் அமைத்த கதையை அவளின் பெற்றோர் இருவரிடமும் காட்டினாள். அவளை வாரி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட பெற்றோர், அக்கதையை பள்ளியில் அனைவரிடமும் சென்று காட்டும்படி கூறினர். கதையின் முதல் வரி இப்படித் துவங்கியது. காடுகளில் கடும் வறட்சி நிலவ, அருந்த நீர் கிடைக்காத பல விலங்குகள், யானை, கவரிமான், புலி, மாடு, வரிக்குதிரை உள்ளிட்ட எண்ணற்ற விலங்குகள் நீர் தேடி ஊருக்குள் படையெடுத்தன. சாரிசாரியாக வந்த அந்த விலங்குகளை விரட்டி விட வேண்டுமென மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு விரைந்தனர். அவர்களில் முதல் ஆளாய் நின்று விலங்குகளை விரட்ட நின்றவள் ஈசுவரி. அவளின் இந்த வீர பராக்கிரமத்தை எத்தனை வரிகளில் வடித்தாலும் அடங்காது. ஆனால் ஒரு கட்டத்தில் விலங்குகளின் கூட்டம் அபரிமிதமாகப் பெருக, அவற்றைப் பார்க்க, அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வரும் மக்களின் வரிசையானது அதிகமாக, ஒரு பக்கம் விலங்குகள், மறுபக்கம் மனிதத்தலைகளென அந்த இடமே உவரிபோலத் தோன்றியது. மக்களில் சிலர் இந்த விலங்குகள் படையெடுப்பை வெறுத்தாலும் சிலர் யானைகளின் பின் சென்று அவை போடும