ஆணென்ன பெண்ணென்ன...
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிக்கும் முந்தைய குடியை லைட்டாக எட்டிப்பார்த்தால் அங்கும் சிதறிக்கிடக்கும் சண்டையில் பிய்ந்த சடைமுடி. என்னதான் "அவ இல்லாம எனக்கு வாழத்தெரியாதா" எனவும், "இவனில்லாட்டி சூரியன் உதிக்காதா" எனவும் இரு சாரார்களும் விசுப்பட க்ளைமாக்ஸ் டயலாக் அடித்தாலும் ஒரு சோம்பேறி ஞாயிறு மதியமோ, மழை நாளின் குளிர் நிறைந்த காலை ஏழு மணியோ அல்லது பின்னிரவின் பேரமைதியில் 3பாய்ண்ட் வால்யூமில் ஒலிக்கும் இளையராஜாவின் வயலினோ இவர்களின் உறுதியை, அழுத்தைத்தை டபுல் ஆம்லேட்டாக கலைத்துவிடும். பெரும்பான்மையான சண்டைகளில் திரும்பத்திரும்பப்பேசுற நீ என வருவது "என்னப்புரிஞ்சுக்கவே மாட்டியா?" முப்பது வருசம் ஒன்னாச்சேந்து குப்ப கொட்னவனும், குட்டி கொட்னவளும் அதத்தான் சொல்றாங்க, முந்தா நேத்து காதோல் மலர்ந்த கன்னிக்காதலர்களும் அதயேதான் சொல்றாங்க. இவங்க சொல்ற வார்த்ததான் ஒன்னே தவிர சொல்ல வர மேட்டர் வேற. பெண்கள் எதிர்பார்ப்பது தன்னை உணரும் ஒருவரை. ஆண்கள், தன்னைப்புரிந்துகொள்ளும் ஒருவரை. தலைபோற காரியமா இருந்தாலும் பெண்ணுக்கு பேசிட்டா போதும், அந