நாகராஜண்ணே... நல்லாருக்கியாண்ணே?
"ச்சை என்ன ஒலகமோ என்ன வாழ்க்கையோ. ஏன் பெரும்பாலும் ஏறுக்குமாறாவே நடக்குது? நல்லவனுக்கெல்லாம் சோதனை வருது. அடுத்தவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுறான். மனசாலகூட கெட்டது நினைக்காதவனுக்கு எல்லா கெட்டதும் நடக்குது. எங்க திரும்பினாலும் பாவம், கெட்டது, அசிங்கம். இது எல்லாம் இல்லாத, மழை பேஞ்ச அடுத்த நாள் பளிச்சுன்னு இருக்க மர இலைமாதிரி சுத்தமான உலகமே அமையாதா? கடவுளே, என்னை உன் பிரியத்துக்குரியவனா நினைச்சா எனக்கு ஒரு பதில் தருவியா" மனத்தில் நினைத்தான் நாவராஸ் (நாகராஜ்). எங்கும் தன் ஆட்சியைக்குத்த வைத்திருக்கும் கடவுளாச்சே, மெசேஜ் அனுப்பி ஊதா டிக் வருமுன் வந்து நின்றார், அவன் முன். "என்னதாம்ப்பா ஒனக்கு ப்ரச்சன?" "எல்லா எடத்துலயும் ப்ரச்சன, அதான் என் ப்ரச்சன. என்ன சுத்தி நடக்குற அசிங்கம், அநீதி, எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் எதையும் என்னால பொறுத்துக்க முடியல. Do something and stop them." படபடவெனப்பேசி முடித்தான். "இதெல்லாம் இல்லன்னா சுவாரசியமிருக்காது. சீரியஸ்லி. ப்லீவ் மீ" என்றார் இவர். "அதெல்லாம் சால்ஜாப்பு. ஒனக்கு நலந்தானா வாசிக்கத்தெரிய