விறகு வெட்டி
நெஜமாவா சொல்ற? ஓலுடாத என்றான் கக்கன். அட உண்மயாதாண்டா சொல்றேன். உங்கிட்ட பொய் சொல்லி என்ன ஆகப்போவுது. வேணுமின்னா சாந்தரமா வீட்டுக்கு வா மூனு கோடாரியும் காட்றேன். என்னால நம்பவே முடீலடா. இத்தின் நாளா நானும் அந்தக்காட்லதான் மரொன்வ்வெட்றேன். அந்தக் கொள்த்த தாண்டிதான் எப்பவும் போவேன். ஒருதடவகூட அதுல நீ சொல்றாப்போல லேடீச பாத்ததில்லியே. அதான் மச்சான் எனக்கும் புர்ல. கொள்த்தாண்ட இருக்கற மரத்த ஓங்கி வெட்னுருக்கசொல்ல கைஸ்லிப்பாகி கோடாலி கொள்த்துல உழ்ந்துட்ச்சி. இத்த நம்பிதான பொழப்பு ஓடுது, இது போய்ச்சின்னா என்னா செய்றதுனு பெஜாராகிடுச்சு. கொள்த்து உள்ள நெரிய்ய சேறு வேற இருக்குதா, எறங்கர்துக்கும் யோசன. எல்ப்புக்கு ஆள யார்னா கூப்புல்லான்னா அங்க யாரிமே இல்ல. அய வந்துட்ச்சி. கொள்த்த பாத்துனே வக்காய்ஞ்சிருந்தேன். திடீர்னு பொலொபொலொனு தண்ணிலருந்து காத்து கொப்புள்ச்சினு வர்து. திக்குனு ஆய்ப்போச்சு. மொதலகிதல எதனா வர்தாண்ட்டு. பாத்தா உள்ளாரந்து ஒரு லேடிஸ். கையில ஒரு கோடாலி. தங்கத்துல தகதகதகன்னு மின்னுது. இந்தா உன் கோடாரின்னுச்சு. எனுக்கு மொதுல்ல பயோ(ம்). மோகினி டைப்ல எதுவும் பிசாசான்னுட்டு. நாபாட்டுக்கு