விறகு வெட்டி

 நெஜமாவா சொல்ற? ஓலுடாத என்றான் கக்கன்.


அட உண்மயாதாண்டா சொல்றேன். உங்கிட்ட பொய் சொல்லி என்ன ஆகப்போவுது. வேணுமின்னா சாந்தரமா வீட்டுக்கு வா மூனு கோடாரியும் காட்றேன்.


என்னால நம்பவே முடீலடா. இத்தின் நாளா நானும் அந்தக்காட்லதான் மரொன்வ்வெட்றேன். அந்தக் கொள்த்த தாண்டிதான் எப்பவும் போவேன். ஒருதடவகூட அதுல நீ சொல்றாப்போல லேடீச பாத்ததில்லியே.


அதான் மச்சான் எனக்கும் புர்ல. கொள்த்தாண்ட இருக்கற மரத்த ஓங்கி வெட்னுருக்கசொல்ல கைஸ்லிப்பாகி கோடாலி கொள்த்துல உழ்ந்துட்ச்சி. இத்த நம்பிதான பொழப்பு ஓடுது, இது போய்ச்சின்னா என்னா செய்றதுனு பெஜாராகிடுச்சு. கொள்த்து உள்ள நெரிய்ய சேறு வேற இருக்குதா, எறங்கர்துக்கும் யோசன. எல்ப்புக்கு ஆள யார்னா கூப்புல்லான்னா அங்க யாரிமே இல்ல. அய வந்துட்ச்சி. கொள்த்த பாத்துனே வக்காய்ஞ்சிருந்தேன். திடீர்னு பொலொபொலொனு தண்ணிலருந்து காத்து கொப்புள்ச்சினு வர்து. திக்குனு ஆய்ப்போச்சு. மொதலகிதல எதனா வர்தாண்ட்டு. பாத்தா உள்ளாரந்து ஒரு லேடிஸ். கையில ஒரு கோடாலி. தங்கத்துல தகதகதகன்னு மின்னுது. இந்தா உன் கோடாரின்னுச்சு. எனுக்கு மொதுல்ல பயோ(ம்). மோகினி டைப்ல எதுவும் பிசாசான்னுட்டு. நாபாட்டுக்கு கிட்டப்போயி அத்து என்ன உள்ள இழ்த்துகுனு போய்ச்சின்னா? பய்ந்துனு இல்ல இது என்னோட்து இல்லன்னுட்டேன். அப்பவும் அது உடல மச்சான், தண்ணிக்குள்ளார போயி வேற ஒரு கோடாரி கொணாந்துச்சு. இந்த தடவ அது கொணாந்தது மின்னுது மச்சான். கண்ணுலாம் கூசிப்போச்சு. வைரத்துல செஞ்சதாம். இந்த்தத்தடவ மனஸ்ல லைட்டா ஆச வந்துதுதான். இர்ந்தாலும் ஒரு பயம். இல்ல இத்து என்னோட்தில்லன்னுட்டேன். மறுபடிக்கா கொள்த்துள்ள போயி இந்தவாட்டி கரெட்டா என்னோட்து எட்த்துனு வந்துது. இத்தானா உன்னுதுனு கேட்டுது. ஆமா இத்தான்னேன். வாங்கிக்கோனு நீட்டுச்சு. கைலலாம் வாணாம், கரைல வச்சுடு எட்த்துக்குறேன்னேன். அது வெச்சிது. நா எட்த்துனு திரும்பசொல்ல, உன்னோட நேர்மைய பாராட்டுறேன்னுட்டு மீச்ச ரெண்டு கோடாரியும் கொணாந்து குட்துட்ச்சு. என்னால நம்பவே முட்ல மச்சான்.

கக்கனுக்கு அதை நம்பமுடியவில்லையெனினும் மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு.

சரிமாமா நானும் நாளிக்கி பண்ணிப்பாக்கறேன்.

* * *

மறுநாள் அந்தக் குளத்தருகே இருந்த மற்றொரு மரத்தை இரண்டு வெட்டி வெட்டிவிட்டு, வேண்டுமென்றே தன் கோடரியைக் குளத்துக்குள் வீசினான்.


சற்று நேரத்தில் நீர்க்குமிழ்கள் பொங்க, உள்ளிருந்து குளதேவதை தோன்றியது.

* * *

அதெப்டி மச்சான் உனுக்கு மட்டும் ப்லாஸ்டிக்ல குட்த்துது? எதும் ராங்காயிட்ச்சா?


அதில்லமாமா. நீ கொள்த்துள்ளருந்து மோகினு வர்துன்னதும் அம்மன்ல அந்த அம்மா வருமே, அப்பிடி இருக்கும்னு நென்ச்சுட்டேன். இது பாத்தா தண்ணில நன்ஞ்சு தொபதொபான்னு வந்துது. சேலவழியா அந்த தொப்புள பாத்ததுமே எனக்கு சட்டுனு டெம்ப்பராயிட்ச்சி. எனக்கும் பஸ்ட்டு தங்கொந்தான் கொணாந்துச்சி. நா எங்க அத்தப்பாத்தேன்? ஈரத்துணி வழ்ய்யா… அது பாடி மாமா. ன்னாமா இருக்கு தெரிமா? நீ இத்தல்லாம் சொல்லவே இல்ல எனாண்ட.


அடப்பாயி. அப்பறம் ன்னாதான் பண்ண?


அது என்னிதில்லன்னா இன்னோன்னு கொணாரும்னல்ல, அத்தேமேரி சொன்னேன். நீ சொன்னமரியே அட்த்து வைரத்துல எட்த்தாந்துது. அத்தோட இடுப்பு இருகுது பாரு மாமா, எனக்கு கொள்த்துள்ள குத்ச்சிட்லாமானு ஆகிப்போச்சி. சரி இன்னொருதபா பாடிய பக்கலாம்னு அதுவும் என்னோட்தில்லன்னேன். அட்த்து கர்ட்டா என்னோடுது எட்த்தாந்துது. இத்தான் என்னுதுன்னா குட்த்துட்டு போய்டும்ல, எனுக்கு இன்னொருவாட்டி அத்த ஈரமா பாக்கணும்னு காஜாய்ட்ச்சு. அதுவும் இல்லன்னதும் உள்ள போயி இந்த ப்லாஸ்டிக்க கொணாந்துது. லாஸ்ட்டா ஒரு  தர்ஸ்னம் கெட்ச்ச சந்தோஷத்தோட இத்த வாங்க்கினு வண்ட்டேன். கோடாரி கெடக்குது மாமா இப்டி சீன் கெடைக்குமா? இனிமே டெய்லி போயி உள்ளார போடப்போறேன் என அவன் கூறியதும்

சட்டென்று அவர்களின் பின் தோன்றி,

விஜய்வரதராஜ் குரலில் "நெனச்சேண்டா ஓத்தா" எனக்கூறி கோடரியால் அவன் மண்டையைச் சரிபாதியாய்ப் பிளந்தது குளதேவி.

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி