கடன்
பரந்து விரிந்த அந்தக் களம் கடும் போர்க்களமாகக் காட்சியளித்தது. காரணம் அங்கு போர் நடந்திருந்தது. ஒரு போரை நடந்தது என்றா சொல்வது? போர் என்பது நடப்பதா? அல்லது நிகழ்வதா? அது மனிதக்குலம் தத்தமையே இகழ்வதன்றோ? எங்கு நோக்கினாலும் குருதி. துண்டுகளாக்கப்பட்ட கரங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டதால் அரையான கால்கள். உருவப்பட்ட குடல்கள், முனகிக்கொண்டிருக்கும் குற்றுயிர்கள். அது சாதாரண களமல்ல, ரணகளம். ஆங்காங்கே சில சிப்பாய்கள் தத்தமது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் உச்ச வலியிலும் இறக்கவியலாத பலர், ஒரே மூச்சாகத் தங்கள் உயிரும் போய்விட்டால்தான் என்ன என அரற்றிக்கொண்டிருந்தனர். தண்ணீர் தண்ணீர் என கேவிக்கேவி அழும் குரல்கள் அந்தப் பிரதேசமெங்கும் கேட்டன. அத்தனை பாலைக் களத்தில் எதைக் கொண்டு மோப்பம் பிடித்தனவோ, அதுகாறும் எங்கு ஒளிந்திருந்தனவோ தெரியவில்லை, ஓநாய்களும் நரிகளும் இன்னும் சில காட்டுவிலங்குகளும் குருதி தோய்ந்த சிப்பாய்களின் எஞ்சியிருக்கும் உடல்களைக் குதறிக்கொண்டிருந்தன. அத்தனைப் பெரிய போர் புரிந்து வீழ்ந்து கிடந்த மனித உடல்களை எந்தச் சண்டையும் சச்சரவுமின்றி தங்களுக்குள் பகிர்ந்துண்டு கொண்டிர