பன்னீரில்
ஒரு கதைய எப்பிடி வேணாலும் ஆரமிக்கலாம். இந்தக் கதைய… 1. அப்போது மாமாவுக்கு கல்யாணமாகிற வயசு, எனக்கு, ‘ஸ்கூலுக்கு ப்போமாட்டேன்’ என டவுசர் மாட்டாமல் அடம் பிடிக்கிற வயசு. 2. வழக்கம்போல் அன்றும் மாமா வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். நான் படுக்கையில் அரைக் கண் விழித்தவாறு சீசனுக்கு வாங்கிய ஒருபா கோழிக்குஞ்சை நெஞ்சில் அணைத்தபடி படுத்திருந்தேன். இப்பிடி பல்வகைகளில் ஆரம்பிக்கலாம். ஆகவே கீழ்க்கண்டவாறு… ஒருத்தரோட பரிட்சயமோ ஞாபகமோ முதல் முதல்ல எப்படி ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் ஆறமர உக்காந்து யோசிச்சதுண்டா? உசேன் (கூப்பிட: ஒசே(ன்)) மாமான்னதும் சட்டுனு தோணுற விசயம் என்னன்னு யோசிச்சா ரெண்டே ரெண்டுதான் நெனவு வருது. அ, ஃபேரன்லவ்லி கிரீம் வாசன ஆ. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல பாட்டு. இப்ப க்லோ&லவ்லினு பொலிடிகல் கரக்ட்னஸுக்காக பேரு மாத்திட்டாலும் அடுத்த ஒரு ஜெனரேசனுக்கு அது ஃபேரன்லவ்லிதான். If I had a dollar everytimeனு சொல்லுவாங்க, அந்த மாதிரி ஒவ்வொருக்கா ஃபேரன்லவ்லி வாங்கறப்பவும் மாமாவுக்கு ஒரு டாலர் கிட்டியிருந்தா இன்னேரம் ஒரு சங்கர் படத்துல ரஜினி விஜய் ரெண்டு பேரையும் சேத்து