ரைலு
எச்செம் சார் காலை ப்ரேயர் கூட்டத்தில் அந்த அறிவிப்பைச் சொன்னதிலிருந்து காத்தூன் பாத்திமாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ”அடுத்த வாரம் மானாமதுர ரயிலடிக்கு பள்ளியிலிருந்து ஒரு நாள் சுற்றுலா போகப்போறோம். விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வகுப்பாசிரியரிடம் பெயரைப்பதிவு செய்துகொள்ளவும்” என்றதும், மகிழ்ச்சியில் மாணவர் கூட்டம் “ஏஏஏஏ” என ஆர்ப்பரித்தது. உற்சாக மிகுதியில் சீட்டி அடித்த சிற்சில சில்வண்டுகள் பீட்டி வாத்தியின் மெல்லிய பிரம்படிக்கு இலக்காயின. மெற்றாஸிலிருந்து, ஊருக்கு வரும்போதெல்லாம் ரயிலைப்பற்றி கதை கதையாய்ச் சொல்லும் ரபீக் மாமுவின் சுவாரசியப்பேச்சில், ரயிலைக் காணாமலேயே தன் கற்பனையில் ஒரு ரயில் செய்திருந்தாள் காத்தூன். “நீள்ள்ள்ள்ளமா இருக்கும். முன்னாடி இழுவ இஞ்சின்லருந்து பொஹ பொஹையா வரும்.வெள்ளச்சட்ட போட்டு நைட்டு பெட்டில ஏறி உக்காந்தா காலைல கறுப்புச்சட்டையோடதான் எறங்குவோம். அம்புட்டுப் பொஹ. ரயிலு அப்பப்ப வீல் வீல்னு கத்தும். தடக்கு தடக்குனு சத்தத்தோட ஆடிக்கிட்டும் குலுங்கிக்கிட்டும் வரும். நம்மூரு டௌன்பஸ்ஸு இருக்குல்ல, அதுல போறதவிட கொள்ளப்பேரு போவாங்க.” ரபீக் மா