Posts

மாடர்ன் கேப்

 அவ்வூரை டவுன் எனச்சொன்னால் டவுன்கள் கோபித்துக்கொள்ளும் . கிராமம் எனச் சொன்னால் அவ்வூரே கோபித்துக்கொள்ளும் . இப்படி இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு ஊர் . இலக்கணச் சுத்தமாக , ஓர் ஊர் .   பத்திரிகைகளிலும் செய்திகளிலும் வரவே வராத சில ஊர்கள் இருக்குமல்லவா ? ஊடக வெளிச்சம் மறைக்கப்பட்டதால் அல்ல , குறிப்பிடத்தகுந்த எந்த நிகழ்வுமே நிகழாததால் . அப்பேர்ப்பட்ட ஊரது .   அண்மையில் அரும்பு மீசை விடத்துவங்கியவர்கள் , அம்மீசையையே தங்களுக்கு முளைத்த சிறகாகக் கருதிச் செய்யும் முதல் தாக்குதலே “ இதையல்லாம் ஊர்னு இழுத்து சொல்லாதிங்கடா , வேணும்னா உர்னு சுருக்கமா சொல்லிக்கோங்க ” என்பது தான் .   அத்தனை வசவுகளையும் பழிப்புரைகளையும் வாங்கிக்கொண்டு ( ம் ), தன்பாட்டுக்கு யார் வம்புக்கும் போகாமல் தேமேயெனக் கிடக்கும் அவ்வூர் . சிறிது வசதி வாய்ப்புகள் வந்ததும் அதுவரை கும்பிட்டு வந்த குலசாமியைச் சற்று ஓரம்கட்டிவிட்டு posh- ஆன பாபாக்களுக்கு மிடில்க்ளாஸ்கள் மாறுவதுபோல , அவ்வூரில் கொஞ்சம் வளர்ந்ததும் மக்கள் செய்யும் முதல் காரியம் அவ்வூரைக் காலி செய்த