Posts

Showing posts from November, 2013

விஸ்-வரா-வன் | சினி-சிரி-சிறு கதை

முன்குறிப்பு : இதில் வரும் சம்பவம், பெயர் , கதை யாவும் கற்பனையே   உயிரோடிருப்பவரையோ இறந்தவரையோ இனி பிறக்கப்போபவரையோ குறிப்பிடுவன அல்ல . பின்முன்குறிப்பு : இதுல சிலருக்கு டபுள் , ட்ரிபுள் & எக்கச்சக்க ரோல் விஸாம் கஸ்மீரியை உமர் பாய் குடோனுக்குள் அழைத்துச்சென்றார் . அப்போது அங்கே நோயாளி போல் தோற்றமளித்த சிலர் இருந்தனர் . " இவங்களுக்கெல்லாம் என்ன ?" என விஸாம் கேட்க , " வாதம் , தீவிர வாதம் . டீரிட்மென்ட் குடுக்க டாக்டர கூட்டிட்டு வர சொன்னா அப்சல் இப்படி சொதப்பிட்டான் , அதான் உங்கள கூப்டேன் ." என்றார் உமர் . " ஏன் என்ன ஆச்சு ?" என்று விஸாம் கேட்டுக்கொண்டே உள் குடோனுக்குள் நுழைய ,   ".... ண்ணா " என்றொரு அபலக்குரல் கேட்டது . " தளபதி ... நீங்க என்ன இங்க ?" " ஒருத்தர் வந்து இந்த ஜில்லால யார் டாக்டர்னு கேட்டாரு . என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே சொல்லிட்டாங்க ... அது நான்தான்னு சொன்னேன் . கட் பண்ணி பாத்தா என்ன இங்க கட்டிப்போட்டு வெச்ச

கரப்பாம்பூச்சி!

அலுவல் அலுப்பு முடித்து வீடு திரும்பையில் என் முன் ஓடியதொரு கரப்பாம்பூச்சி. மலிவு விலை பேரீச்சம்பழ நிறம் , பச்சை விழுமுன் பறக்கத்துடிக்கும் பைக் - காரர்களின் அவசரம், இரண்டும் கொண்டிருந்தது இந்தக்கரப்பாம்பூச்சி . விண்ணிலிருந்து மண் சேர்ந்த மழைத்துளி தாழ்வாரம் நோக்கி விரைவது போல் இடைவிடாது இயங்கிக்கொண்டிருந்தது இந்தக்கரப்பாம்பூச்சி . அதைக்கொன்றுவிட காலைத்தூக்கும்போது எங்கெங்கோ படித்த கரப்பான்கதைகள் கண்முன் விரிந்தன . பல ஆயிரம் ஆண்டுகளாக பரிணாமம் மாறாததாம் இந்தக்கரப்பாம்பூச்சி . அணுகுண்டு போட்டு அகிலமே மாண்டாலும் அடைப்புக்குள் புகுந்து ஜீவித்திருக்குமாம் இந்தக்கரப்பாம்பூச்சி . எரிமலைக்குழம்புகள் வெடித்துச்சிதறியபோதும் எம்பிக்குதித்து எதிர்த்து வாழ்ந்திடுமாம் இந்தக்கரப்பாம்பூச்சி . உலகையே ஆட்டுவிப்பது ஆண்கள் அந்த ஆண்களை ஆட்டுவிப்பது பெண்கள் அந்தப்பெண்களின் உலகையே ஆட்டுவிக்குமாம் இந்தக்கரப்பாம்பூச்சி. என்ன காரணத்தினாலோ தூக்கிய காலை கீழிறக்கி கரப்பானை