காதல்...
(நேரம் பகல் சுமார் 11:30ish) "எங்கப்பா எது சொன்னாலும் அத நம்பாத, சீரியசா எடுத்துக்காத." "எத்தனவாட்டிடா அதையே சொல்லுவ? இன்னும் எத்தன ஃப்லோர் ஏறனும்?" "நாலாவது மாடின்னு சொன்னன்ல." அந்த 7G ரெயின்போ காலனித்தோற்ற கட்டடங்களில் ஒன்றில் படியேறினர் இருவரும். நான்காம் மாடியில் ஒரு அரக்கு நிறக்கதவுக்கு முன் போடப்பட்டிருக்கும் கருப்பு இரும்புக் கேட்டைத் திறந்து கதவைத் தட்டினான் சரவணன். "இரு நாம்போறேன்" என உள்ளிருந்து அவனின் அப்பாவின் குரல் கேட்டது. (Imagine படவா கோபி) ஒரு கதவைத் திறந்தார் கோபி. வெளியே மகன் சரவணன் நின்றுகொண்டிருந்தான். கோபியின் கையில் காய் நறுக்கிக்கொண்டிருந்த கத்தி. 'என்ன?' எனக்கேட்பதைப்போல் தலையை (மற்றும் புருவத்தை) மட்டும் அசைத்தார். இவர் வழியை மறித்துக்கொண்டிருக்க, "ம்மா" என சற்றே கடுப்பில் வெளியிலிருந்தே சத்தமாக அழைத்தான் சரவணன். "ஏ வசு, எதோ பிச்சக்காரன் வந்துருக்கான் பாரு. எதாச்சு பழசு இருந்தா போடு" எனக்கூறியபடி அங்கிருந்து நகர்கிறார். ஒரு பழுப்பு நிற ரௌண்ட் நெக் பனியன், நீல நிற லுங்கி சகிதம் நடு ஹாலில