கொல கொலயாம்...
இரண்டு கொலைக்கேசுகள் என் மீது இந்நேரம் இருந்திருக்கும். அதுவும் ஒரே நபரைக் கொன்றதற்காக. ”இந்தக்கோழி சின்னதா இர்க்கசொல்லோ உர்ச்சதே, அதே கோழ்யீ பெர்சா இர்க்கசொல்லோ உர்ச்சதே இதே” என்று Universal Hero என ஆங்கிலத்திலும் அதற்கிணையான மொழிபெயர்ப்பாய் உலக நாயகன் எனத் தமிழிலும் அழைக்கப்படும் கமல்ஹாசன் (கம’ல’ஹாசன் இல்லை) கூறியிருக்கிறாரல்லவா, அதே போல என் தங்கையை இருமுறை கொல்லப்பார்த்தேன். சம்பவம் : 1 இடம் : எங்கள் அறை ஊர் : சர்க்கார் தோப்பு, திண்டிவனம் எதும் கொசுவத்தி? : ஆம் என்ன? : கூட்டுக்குடும்பம். பெரிய வீடு, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா மற்றும் பலர் & குழந்தைகள் அவ்வீட்டில் இருந்தனர் நேரம் : கருவாடு & ஆம்லேட் பொரிக்கும் வாசனை வந்தது. அதனால் மதியமாகத்தான் இருக்கும். எல்லா அம்மாக்களும் மும்முரமாய் அடுப்பங்கரை வேலையிலிருக்க, அப்போதுதான் மதிய உணவுக்கு எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார். இங்கு எங்க தாத்தா குறித்து சில வார்த்தைகள் சொல்லியே ஆகணும். நாலு சுவத்துக்குள்ள குழந்தைகள் கீச்மூச்னு சத்தம் போட்டுட்டு இருந்