Posts

Showing posts from April, 2013

நானாக நானில்லை

மகனாய்  அண்ணனாய்  ஒன்று விட்ட தம்பியாய்  தாய் மாமனாய்  பேரனாய் மச்சானாய்  சித்தப்பனாய்  நண்பனாய்  தூரத்து உறவினனாய்  யாருக்கும் தெரியா வழிப்போக்கனாய்  இருந்து அலுத்துப்போய் முதல் முறை நான் நானாய்  இருக்க எண்ணி  எழ எத்தனித்தேன்  படுக்க வைத்தான் வெட்டியான், முட்டிகளைத்தட்டி. உணருமா இதை? எரியூட்டப்பட்ட என்  சிதை?