நானாக நானில்லை
மகனாய் அண்ணனாய் ஒன்று விட்ட தம்பியாய் தாய் மாமனாய் பேரனாய் மச்சானாய் சித்தப்பனாய் நண்பனாய் தூரத்து உறவினனாய் யாருக்கும் தெரியா வழிப்போக்கனாய் இருந்து அலுத்துப்போய் முதல் முறை நான் நானாய் இருக்க எண்ணி எழ எத்தனித்தேன் படுக்க வைத்தான் வெட்டியான், முட்டிகளைத்தட்டி. உணருமா இதை? எரியூட்டப்பட்ட என் சிதை?