பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அழகில்
பூத்து நீ குலுங்கினாய்
ஒவ்வொரு அழகில்
பூத்து நீ குலுங்கினாய்
மொதல்ல பூத்துக்குலுங்குனது அந்தச் செடிதான பூ இல்லல்ல? அப்ப இந்த பாட்டோட ரெசிப்பியண்ட்டும் செடிக்குத்தான இருக்கணும்? எப்படி நிகழ்ந்தது இப்படிப்பட்ட பொருட்குற்றம்?
சரி பூவுன்னே எடுத்துக்கிட்டாலும் ஒவ்வொரு நாளும் எப்பிடி அது ஒவ்வொரு அழகுல பூத்துக்குலுக்கோ குலுக்குன்னு குலுங்கிருக்கும்? அதான் ஒரு நாள் பூத்தது அடுத்த நாளே ஜொய்ங்காயிரும்ல?
அப்ப அந்த லேடி பாய்ண்ட்டௌட் பண்ணி பேசுறதே தப்பான பூக்கிட்டதான?
வண்ணங்களோடு மலருகிறாய்
வாசனையோடு வாழுகிறாய்
பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்
கொஞ்சம் விட்டாப்போதுமே, பறிக்கிறப்ப அது கெக்கபெக்கேனு சிரிச்சிச்சா? இல்ல காந்தள் விரல்கள் பறிக்கையில் சிலித்துகிச்சுன்னு சொல்லுச்சா? விட்டா கோழி அறுக்குறப்ப குஷியில ரத்தத்த பீச்சியடிச்சிதும்பானுக போல. பூவ கழுத்தோட சேத்து நறுக்கறப்ப அது எப்பிடிலாம் கதறிருக்கும்? நமக்கு கேக்கலன்றதுக்காக அது அழலன்னு ஆகிருமா? எந்த ஒரு உயிருள்ள றிணையும் தாக்கப்படுறப்பவோ அழிக்கப்படுறப்பவோ ஒரு டிஃபன்ஸ் மெகானிசத்த காட்டும். இதான் எஃறிணைக்கும் பொருந்துற அம்சம். பூவப் பிக்கிறப்ப அதுலருந்து மிகமெல்லிசா ஒரு லிக்விடு வரும். அத பூவோட ரத்தம்னு எடுத்துக்கலாம். கவிச்சியா வேணாம்னா கண்ணீருன்னாச்சும். அப்பிடியாப்பட்ட நிகழ்ச்சி நடக்கறப்ப பறித்திடும்... பொழுதிலும்,,, சிரிக்க்கின்றாய்ய்ய்ய்னு சொல்ல எம்புட்டு ஏத்தமிருக்கணும்?
வாசனையோடு வாழுகிறாய்
பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்
கொஞ்சம் விட்டாப்போதுமே, பறிக்கிறப்ப அது கெக்கபெக்கேனு சிரிச்சிச்சா? இல்ல காந்தள் விரல்கள் பறிக்கையில் சிலித்துகிச்சுன்னு சொல்லுச்சா? விட்டா கோழி அறுக்குறப்ப குஷியில ரத்தத்த பீச்சியடிச்சிதும்பானுக போல. பூவ கழுத்தோட சேத்து நறுக்கறப்ப அது எப்பிடிலாம் கதறிருக்கும்? நமக்கு கேக்கலன்றதுக்காக அது அழலன்னு ஆகிருமா? எந்த ஒரு உயிருள்ள றிணையும் தாக்கப்படுறப்பவோ அழிக்கப்படுறப்பவோ ஒரு டிஃபன்ஸ் மெகானிசத்த காட்டும். இதான் எஃறிணைக்கும் பொருந்துற அம்சம். பூவப் பிக்கிறப்ப அதுலருந்து மிகமெல்லிசா ஒரு லிக்விடு வரும். அத பூவோட ரத்தம்னு எடுத்துக்கலாம். கவிச்சியா வேணாம்னா கண்ணீருன்னாச்சும். அப்பிடியாப்பட்ட நிகழ்ச்சி நடக்கறப்ப பறித்திடும்... பொழுதிலும்,,, சிரிக்க்கின்றாய்ய்ய்ய்னு சொல்ல எம்புட்டு ஏத்தமிருக்கணும்?
பூவே சிறு பூவே
உன்னை போல் வாழ்ந்திடும்
வாழ்க்கையே வேண்டுமே
நாயமா பேசணும். இது வாழ்க்கையா? இப்பிடி கேக்கறது வரமா சாபமா? எப்ப எந்த ஆடு மாடு மேயும்னு சொல்ல முடியாது. இல்ல அந்தப்பக்கம் சும்மாப்போன சிலாவலி சும்மக்காச்சுக்காச்சும் ஒரு எத்து எத்திட்டோ பறிச்சுப்போட்டுட்டோ போவானோனும் சொல்ல முடியாது. இல்ல சொறிநாய் தெருநாய் எதும் காலத்தூக்கி கஸ்முஸ் பண்ணிட்டுப்போனாலும் திட்ட முடியாது. ஒத்தக்கொரங்கா கடேசி வர கெடக்க வேண்டிதான். ஈசல் மாதிரி காலைக்கி முழிச்சு நடுராத்திரி போய்ச்சேர வேண்டிதான். ஆமா இதும் முக்கியம், நாம பாட்டுக்கும் சிங்கிலாருப்பதே சிறப்புன்னு ஒத்தக்கால்ல நின்னுட்டிருப்போம், அதப்புடிங்கிக் கொண்டி பொணத்துமேல வீசி உடுவானுக. அது ரோடெல்லாம் சிந்திக்கெடந்து ஊர்ப்பட்ட பஸ்ஸு மேல ஏறிப்போவும். இப்பிடி ஒரு வாழ்க்க வேண்டுமா மிஸஸ் ஜோ?
உன்னை போல் வாழ்ந்திடும்
வாழ்க்கையே வேண்டுமே
நாயமா பேசணும். இது வாழ்க்கையா? இப்பிடி கேக்கறது வரமா சாபமா? எப்ப எந்த ஆடு மாடு மேயும்னு சொல்ல முடியாது. இல்ல அந்தப்பக்கம் சும்மாப்போன சிலாவலி சும்மக்காச்சுக்காச்சும் ஒரு எத்து எத்திட்டோ பறிச்சுப்போட்டுட்டோ போவானோனும் சொல்ல முடியாது. இல்ல சொறிநாய் தெருநாய் எதும் காலத்தூக்கி கஸ்முஸ் பண்ணிட்டுப்போனாலும் திட்ட முடியாது. ஒத்தக்கொரங்கா கடேசி வர கெடக்க வேண்டிதான். ஈசல் மாதிரி காலைக்கி முழிச்சு நடுராத்திரி போய்ச்சேர வேண்டிதான். ஆமா இதும் முக்கியம், நாம பாட்டுக்கும் சிங்கிலாருப்பதே சிறப்புன்னு ஒத்தக்கால்ல நின்னுட்டிருப்போம், அதப்புடிங்கிக் கொண்டி பொணத்துமேல வீசி உடுவானுக. அது ரோடெல்லாம் சிந்திக்கெடந்து ஊர்ப்பட்ட பஸ்ஸு மேல ஏறிப்போவும். இப்பிடி ஒரு வாழ்க்க வேண்டுமா மிஸஸ் ஜோ?
வசந்தம் வந்த செய்தியினை
வண்டுக்கு எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா
எது? அந்த காஜியெடுத்து சுத்துற வண்டுக்கு தனியா மொறவாசல் வச்சு சொல்றாங்களா? வண்ணத்துலயும் வாசத்துலயும் சொல்லலன்னா வண்டு எல்லாத்தையும் சுருட்டிகிட்டு வ்ரதம் இருக்கும் அப்பிடித்தான? காஜியெடுத்தாப்ல ஓயோ ஓயோவா விசிட்டடிக்கிற வண்டு, வசந்த மாளிகை பிட் நோட்டீச பாத்துதான் வந்துருக்கும்? அப்பிடித்தான?
வண்டுக்கு எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா
எது? அந்த காஜியெடுத்து சுத்துற வண்டுக்கு தனியா மொறவாசல் வச்சு சொல்றாங்களா? வண்ணத்துலயும் வாசத்துலயும் சொல்லலன்னா வண்டு எல்லாத்தையும் சுருட்டிகிட்டு வ்ரதம் இருக்கும் அப்பிடித்தான? காஜியெடுத்தாப்ல ஓயோ ஓயோவா விசிட்டடிக்கிற வண்டு, வசந்த மாளிகை பிட் நோட்டீச பாத்துதான் வந்துருக்கும்? அப்பிடித்தான?
-=-=-=-=-
இல்ல புரீல... என்னய நாயின்றியா?
சிந்திக்க:
Comments
Post a Comment
Pass a comment here...