ஒலி


ஆராய்ச்சிக்கூடத்தின் வர்ணனை, ஆராய்ச்சி செய்பவன் குறித்த வர்ணனை, அங்கிருந்த குப்பைகள், பேப்பர்கள், புத்தகங்கள், மேலும் புத்தகங்கள், அணைக்கவேபடாத mac book, விநோத முள்ளம்பன்றித் தோற்ற மெஷினையெல்லாம் கழித்துவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தால், அது ராகவனின் ஆராய்ச்சிக்கூடம். 

"இத வெச்சு என்னண்ணே பண்ணுவீங்க?" முள்ளம்பன்றியைக் காட்டிக் கேட்டான் அச்சு. 

"ஃபீலிங்ஸ மாடிஃபை பண்ணலாம்." - ராகவன் 

"ஃபீலிங்ஸ்னா?" 

"லைக், மனுஷனோட மூட்." 

"மூடா?..ஹெஹெ… இதுல எப்பிடிண்ணே மூடு வர வெப்பீங்க?" 

ஒரு workaholic ஆராய்ச்சியாளனாக இருந்தாலும், தனது atmosphereருக்கு முற்றிலும் contrastடான அச்சுவை அவன் கூடத்தினுள் அனுமதித்திருந்தான். அதற்கு முதல் காரணம், எல்லா 30k கிட்சும் அவனை அங்கில் எனக்கூப்பிடுகையில், இவன் மட்டும் அண்ணன் என அழைத்தது ஆசுவாசத்தை அளித்தது. இரண்டாவது, இரண்டாவது காரணமெல்லாம் இல்லை. முந்திய வரியில் முதல் காரணம் என்பதை ஒரே காரணம் என மாற்றி வாசித்துக்கொள்க. 

"ஜஸ்ட் இந்த மிஷின வச்சு ஒருத்தரோட மூட மாத்திர முடியுமாண்ணே?" 

"உணர்வுகள abstractடாப் பார்த்தா முடியாது. But அதோட லேயர்ஸ் என்னனு வெளங்கிட்டம்னா ஈசியாகிடும். மொதல்ல நமக்கு ஒடம்புல இருக்குற உணர்வு, வலி எல்லாமே மூளைக்குள்ள நடக்குற chemical and electrical reactions தான். ஆதியில பகவன் படார்னு வெடிச்சப்பவே இந்த designs, details & reactions எல்லாமே pre-written. சைன்ஸ் உலகம் அத இயற்கை விதின்னு சொல்லும். Non-சைன்ஸ் உலகம் இயற்கைய கட் பண்ணிட்டு விதின்னு மட்டும் சொல்லும். எல்லாமே ஒரு பயோகெமிக்கல் ரியாக்சன்றதால அத கட்டுப்படுத்த முடியும். Pain killers சாப்புடுறோமே, எதுக்கு?" 

"வலிய மறக்கடிக்க." 

"Exactly, வலி மரக்க & மறக்க. ஒடம்பு மரத்துப் போச்சுன்னா ஃபிசிக்கல் வலி எதும் தெரியாது. மனசு மரத்தும், மறந்தும் போனா மெண்டல் வலி எதுமே இருக்காது." 

"வாட்டே தத்வமஸி. சரி, இப்ப ஃபீலிங்ஸ கன்றோல் பண்ண மருந்து குடுக்கப்போறீங்களா?" 

"ஒரு ரியாக்சன பல வகைல உண்டாக்கலாம். நான் try பண்றது mass reactionனுக்கு. அதுக்கு மருந்துலாம் சரிப்படாது. வேற மெத்தட்." 

"எப்டி?" 

"ஒலி. சவுண்ட்." 

"எதுக்கு ரெண்டு வாட்டி சொல்றீங்க?" 

"அட ஒரு பேச்சுல வந்துருச்சுடா." 

"சரி, ஒலிய வச்சு என்ன பண்ணுவீங்க?" 

"ப்ச், என்ன பண்ணுவேன்னு கேக்கக்கூடாது. ஏன் ஒலிய வச்சு பண்றேன்னு கேக்கணும்." 

"சரி, எதோ ஒன்னு யோசிச்சிருக்கீங்க, சொல்லித்தொலைங்க." 

"நம்ம ஒடம்புல, input எடுத்துக்குறதுன்னு பாத்தன்னா நாலு வழி. கண்ணு, காது, வாய், மூக்கு." 

"…ம்ம்ம், அஞ்சாவதா ஒன்னும் இருக்குல்ல, லேடிஸ்க்கு?" 

"அதப்பத்தி பேசற வயசு இன்னும் ஒனக்கு வரல." 

"ஆமா, எல்லாத்துக்கும் ஒரு ஸ்கேல் வச்சு அளந்துட்டே இருங்க." 

"சரி கேளு, டீவியேட் பண்ணாத" 

"ம்ம் சொல்லுங்க." 

"கண்ணு, வாய், மூக்கு இது மூனையும் நீ இறுக மூடினா பாக்குறது, சுவாசிக்கிறது, சாப்புடுறத தடுத்துட முடியும். ஆனா காது மட்டும் இதுல ரொம்ப டிஃபரண்ட். காத நீ எவ்ளோ இறுக்கி மூடினாலும் அப்பவும் ஒனக்குக் காது கேட்டுட்டுதான் இருக்கும். வேணும்னா try பண்ணிப்பாரு. நீ இறுக மூட மூட, இன்னும் தெளிவா ஒனக்கு எதோ ஒன்னு கேட்டுட்டே இருக்கும்." 

செய்து பார்த்து, "அட, ஆமா..." என்றான் அச்சு. 

"ஆதியில தேவனாகிய கர்த்தர், let there be lightடுன்னார்." 

"ஒடனே லைட்டர் வந்துருச்சா?" 

"டேய்…" 

"சரி கோவிக்காதீங்க, சொல்லுங்க." 

"let there be lightடுன்னதும் லைட் உண்டாச்சு. ஆனா, லைட்டுக்கும் முன்ன இருந்தது கர்த்தரோட அந்த ஒலி. அதுதான் ஆதி. அவரோட அந்த ஒலியில இருந்துதான் ஒவ்வொன்னா உண்டாச்சு." 

"ஏன் எங்கள்துலயும்தான் சொல்லுவாங்க, மொதல்ல ஓம்ம்ம்னு அந்த ஓங்காரம் மட்டும்தான் இருந்துதுன்னு. நாங்க மட்டும் என்ன சப்பையா?" 

"Whatever, so, மொதல்மொதல்ல ஒலிதான், அது மட்டுந்தான் இருந்துருக்கும்னு புரியுதுல்ல?" 

"ஆமா." 

"பொறந்த குழந்தைல இருந்து எல்லா உயிரினமும் என்ன பண்ணும்? ஒலியெழுப்பும். நமக்கெல்லாம் ஒவ்வொரு மொழி இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவானது ஒலிதான். ஒரு வகைல உயிர்களுக்கு ஆதாரத் திறன் இதுதான்." 

"மனுசன எடுத்துக்கோ, அவன் அபாயத்துல இருக்கப்ப, அழறப்ப, சிரிக்கிறப்ப, சந்தோசமா இருக்கறப்ப, இப்டி எல்லாத்துக்கும் அவனுக்கு ஒலி வேணும். பாராட்டனும்னா கூட அவன் என்ன பண்றான்? கைதான் தட்டுவான். அது மூலமா ஒலியெழுப்பி தன்னோட ஆமோதிப்பையும் சந்தோசத்தையும் அறிவிக்கிறான். ஒலிதான் அவனோட ஆதித் தொடர்பு." 

"ஒலிங்குறது சும்மா வெறும் ஒலி இல்ல. அதுல existentialismமும் இருக்கு. Bats எல்லாம் அல்ட்ரா சானிக் ஒலிய வச்சுத்தான் தன்னோட இரைய, பறக்குறப்ப எதும் தடங்கல் இருக்கான்னுலாம் கண்டுபுடிக்கும்." 

"ஒலிங்குறதுக்குள்ள அரசியலும் இருக்கு." 

"வெய்ட்டீஸ்... ஒலிக்குள்ள எப்டி அரசியல்? கேட்டுட்டே இருக்கேன்னு, குத்திட்டே போவாதீங்க." 

"சொல்றேன் கேளு. தோண்டிப்பாத்தா, எல்லா மொழியோட syllablesசுலயும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ இருக்கும். இது தவிர ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தனி ஒலிகள் கொண்ட எழுத்து இருக்கும். எழுத்துங்குறது என்ன, ஆக்ச்சுவலா அது ஆரம்பத்துல வெறும் ஒலிப்புதான். பிற்பாடு நமக்குள்ள தொடர்பு முறைகள் மாறினதால ஒலிப்புக்கு ஒரு உருவம் குடுத்து அத எழுத்தாவும் மாத்தி வெச்சோம். So, எல்லா மொழிலயும் சில தனித்துவ ஒலிகள், அப்பறம் மற்ற மொழிகள்ல இருக்க ஒரே மாதிரி ஒலிக்கற எழுத்தும் இருக்கும். For example, தமிழ்ல 'ல' இருக்கு, englishல 'L' எல், அரபியில 'ل' லாம். எழுத்துதான் வேறயே தவிர அதோட ஒலிப்பு என்னவோ ஒன்னுதான்." 

"ஏன் இவ்ளோ பெரிய எஸ்ஸே சொல்றீங்க?" 

"காரணமிருக்கு." 

"இப்டி ஒலிப்புகள்லாம் ஒன்னுக்கொன்னு சேம் தான்னாலும், கோயிலுக்குப் போனா எல்லாமே ஒலிப்புதானன்னு நீ வேற ஒரு மொழிய ஒலிக்க முடியாது. அததான் சொன்னேன், ஒலியில அரசியலும் இருக்குன்னு." 

"அரசியல்லாம் வேணாம், நீங்க சைன்ஸ்லயே சொல்லுங்க." 

"சரி. So, நம்ம லைஃப்ல ஒலியோட part ரொம்ப significant." 

"சரி நீங்க அத வெச்சு என்ன பண்ணப்போறீங்க?" 

"ஒலிய வச்சு மனுசங்க மைண்ட மாடிஃபை பண்ணப்போறேன்." 

"எப்டி? மந்திரம் மாதிரி எதும் ஓதப்போறீங்களா?" 

"haha… சொல்லப்போனா அப்டிதான், ஆனா கொஞ்சம் ஹைப்பர்டெக் மந்திரம்." 

"சரி, அதெப்டி ஜஸ்ட் ஒலி மனுசங்க மனச மாத்த முடியும்னு நெனைக்கறீங்க?" 

"அதெப்டின்னா.." 

"அலோ, மறுபடியும் எஸ்ஸே இல்லாம குட்டியா சொல்லுங்க." 

"சரி, straight forward ஆன்சர் இருக்கு. பிச்சக்காரங்க சிக்னல்ல காசு கேக்கறப்ப எப்டி கேப்பாங்க?" 

"எங்கிட்டலாம் கேக்கமாட்டாங்க, பதிலுக்கு நானும் கேட்ருவேன்னு பயப்புடுவாங்க." 

"டேய்..." 

"சரி, அம்மா…சா…ர்னு கெஞ்சிக்கேப்பாங்க." 

"ரைட். அப்பா ஒன்ன திட்றப்ப?" 

"ஒரேய்ய்னு கத்தி மெரட்டுறவாரு." 

"அப்பறம்...ஊ.." 

"இருங்க இன்னொன்னும் நானே சொல்றேன், saturday nightsலாம் அம்மா கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசுவாரு." 

"ரொம்பப் பேசற நீ. அதவிட ரொம்பக்கேக்கற நீ." 

"நீங்கதான சொன்னீங்க, கேக்கறத தடுக்க முடியாதுன்னு. இத்துனூண்டு வீட்ல ஒரு ரூம்ல பேசறது இன்னொன்னுல கேக்குது, நா என்ன பண்ணட்டும்?" 

"ஏர்பாட் போட்டுக்கோ." 

"ஆமா, நா ஏர்பாட் போட்டுக்கறேன், அவரு நெக்ஸ்டுக்கு ஏற்பாடு பண்ணட்டும்." 

"அடங்கமாட்டியா நீ?" 

"சரி புரியுது. ஒவ்வொரு emotionனுக்கும் ஏத்த மாதிரி வாய்ஸ் modulation இருக்கும்." 

"ஆமா. நாமளும் சந்தோஷமா இருக்கணும்னா ஒரு டைப் பாட்டு கேப்போம். எக்சர்சைஸ் பண்ணனும்னா அதுக்கு ஒரு ஜானர். தூங்கணும்னா ஒரு ஜானர். இதுல ஜானர்ங்குறது என்ன? வெவ்வேற டைப் ஒலி தான். பேய்ப்படத்துலலாம் முக்காவாசி பயம் எதனால வரும்? சவுண்ட்தான்." 

"ஏன் சவுண்டே இல்லாமயும்தான் சீன் வெப்பாங்க. அதுவும்தான பயமாருக்கும்." 

"You got it right. அங்கயும் பயம் தரது absence of sound தான். So, in a way அதுக்கும் ஒலிதான் மூலக்காரணம்." 

"ஓஓ… ஆமால்ல." 

"Trainனுக்கு ஏன் அப்டி யான பிளிர்ற மாதிரி ஹார்ன் இருக்கு? soothingகா வச்சிருக்கலாம்ல? அதக்கேட்டா அவனவன் அடிச்சு புடிச்சு வெலகிப்போகனும். அதுக்கு கண்ணே மணியேன்னுலாம் ஹார்ன் வெச்சா ஆகாது. ஒரு அலறல்ல ஊரே தெறிக்கணும்." 

"கரெக்டு." 

"Yes, இதுவரைக்கும் சொன்னதெல்லாம் ஒலியினால நேரடியா நம்ம emotions பாதிக்கப்படுறது. இப்ப நாம யூஸ் பண்ணப்போற ஒலி அப்டி இல்ல, அத கேக்க முடியாது. But மக்களுக்குள்ள அது எமோஷன மாத்தும்." 

"ஓ... 'ரோஜாப்பூமால' லாஜிக்கா? 

"hahahaha. Almost yeah. ஆனா அங்க விசுவலாவாச்சும் தெரியும். இங்க அதுவுமில்ல." 

"ஓகே. இன்விசிபில் ஒலியால எப்டி எமோஷன்ஸ மாத்த முடியும்?" 

"முன்னாடி வலி மறந்து போறதப்பத்தி பேசினோம்ல." 

"ஆமா." 

"மனுசனுக்கு ரொம்ப முக்கியமான விசயம் மறதி. எப்டி மரணம் வெளியில கொடூரமாத் தெரிஞ்சாலும், அது ஒரு கிஃப்டோ, அதே மாதிரி மறதியும் ஒரு கொடை. மறதிதான் மனுசன மனுசனா வச்சிருக்கு." 

"அப்டி சொல்ல முடியாதே… அப்டின்னு எனக்கு சில கேள்விகள் இருக்கு, ஆனா அதக்கேட்டா மறுபடியும் லெக்சருக்குப் போயிருவீங்க. அதனால நீங்களே சொல்லிருங்க." 

"கேலிக்கு இல்ல. இது கொஞ்சம் முக்கியமானது." 

"ஒவ்வொரு மனுசனும் என்னவாகுவான்றது அவன் எத ஞாபகம் வெச்சிருக்கான், எத மறக்குறான்றதப் பொறுத்துதான். கொழந்தைகல்லாம் கவலையில்லாம இருக்கறதுக்கு என்ன காரணம்?" 

"வேளா வேளைக்கு ப்ரெஸ்ட் ஃபீடிங் கெடைக்குறதாலயா?" 

"நீ என்னவாகப் போறன்றதுக்கான சான்றுகள் தெளிவாத் தெரியுது." 

"ஒடனே கோச்சுக்காதீங்க, சும்மா பன் பண்ணேன், மேல சொல்லுங்க." 

"கொழந்தைக டக்குனு மறந்துடும். வளர வளர, அதுங்க மெமரில விசயங்கள சேமிக்க சேமிக்க எல்லாத் துன்பமும் ஆரமிச்சுடும். நாமளும் ஒருத்தன எதிரினு எத வச்சு சொல்றோம்? அவன் செஞ்ச தப்பு. அத மைண்ட்ல இருக்கறதாலதான்." 

"அப்ப எல்லாத்தையும் மறந்துடணும்னு சொல்றீங்களா?" 

"அப்டி இல்ல. எத வெச்சுக்கணும், எத விட்டுடணும்னு சூஸ் பண்ணிக்கற ஆப்ஷன் நமக்கு இருக்கு. அதுதான் நமக்கிருக்க ஆறாம் அறிவு. பகுத்து வச்சுக்கலாம் எல்லாத்தையும். இது மத்த உயிர்களுக்கு இல்ல." 

"சரி, இப்ப ஒலிய வச்சு மக்களுக்கு தேவை இல்லாதத மறக்க வெக்கப்போறீங்க, ரைட்?" 

"Almost correct. ஆனா எல்லா மெமரியவும் அழிக்க முடியாது. அது ஆபத்தும் கூட. நம்மளோட பழக்க வழக்கம், செயல்பாடு எல்லாமே ஒவ்வொரு லேயர் of memoryல இருக்கும். மல உச்சிலேந்து குதிக்க மாட்டோம், ஏன்னா செத்துருவோம்னு ஒரு பேசிக் இன்ஸ்டிங்க்ட் நமக்குள்ள இருக்கு. அதனால அத அழிக்க முடியாது. அதே மாதிரி நாம கத்துக்கிட்ட மொழி. அத அழிக்கக்கூடாது. ஆண்களுக்கு பொண்ணுங்களப்பாத்தா பாலியல் ஈர்ப்பு வரும். ஒலகத்துல எல்லாப்பொண்ணுக கிட்டயும் வரும். ஆனா அவனவன் அம்மாகிட்டயோ, கூடப்பொறந்தவங்க, மகள் கிட்டயோ வராது. அது வேற லேயர் of memory. Sex Basic instinctனாலும் இன்னது restrictedனு ஒரு டிசைன் பண்ணிக்கிட்டாங்க மனுசங்க. So, அதுலையும் கைவெக்கக்கூடாது, it will lead to chaos." 

"வேற என்னதான் பண்ணப்போறீங்க?" 

"நம்மளோட பெரும்பாலான ப்ரச்சனைக்குக் காரணம் டெம்பரரி மெமரீஸ். Like, டாஸ்மாக் லைன்ல நிக்கறப்ப கால மிதிச்சவன், இண்டர்னல் மார்க் கம்மியாப்போட்ட வாத்தியார், ஆன்சைட்லேந்து டார்ச்சர் பண்ற மேனேஜர், இண்டிகேட்டர் போடாம சட்டுனு கட் பண்ற ஸ்க்யூட்டி இப்டி இவங்க தர்ற immediate and short to mid term எரிச்சல்லாம் மத்த விசயத்துல hamper ஆகி ஒருத்தருக்கொருத்தர் சண்ட போடுறோம். Butterfly effect அப்ளை பண்ணிப்பாத்தம்னா உலகப்போருக்குக் காரணம் எங்கயோ ஒருத்தன் வாய கர்ச்சீஃபால மூடாம பப்லிக்ல தும்மினதாக்கூட இருக்கலாம்." 

"So… இந்த முள்ளம்பன்றி மிஷின வச்சு, ஒலிய அனுப்பி, partial memory loss வரவெச்சு, emotions control பண்ணி எல்லாரையும் புத்தராக்கப்போறீங்க." 

"புத்தராவாங்கன்ற நம்பிக்கைலதான் செய்யப்போறேன். ரிசல்ட் எப்டி வருதுன்னு பாப்போம்." 

"WHAT!!! அப்போ இன்னும் இத டெஸ்ட் பண்ணவே இல்லையா?" 

"பண்ணிருக்கேன். ஆல்ரெடி தாமினினு ஒரு பொண்ண வச்சு டெஸ்ட் பண்ணேன், அது ஒரு சீரியல் கில்லரையே தன்னோட கொழந்தயா அடாப்ட் பண்ணிக்கிறேன்னு சொல்லிருச்சு. So இந்த தடவ mass levelல try பண்ணப்போறேன்." 

"எதும் malfunctionனாகி பிரச்சனையாகிட்டா?" 

"இது மனுசனோட இயல்ப இன்னும் அமைதியாக்கதான் செய்யும். அதனால கலவரமாக சான்ஸ் இல்ல." 

"பாத்து, இங்க பசுவ கொல்லாதன்றவன்தான் அத சொல்லிட்டே கூட்டமா மனுசன கொல பண்றானுக. எதும் எழவக்கூட்டிடாதீங்க." 

"அப்டிலாம் ஆகாது. I trust my work." 

"நானும் உங்க workகல்லாம் trust பண்றேன்தான். மனுசப்பசங்க மேலதான் நம்பிக்கையில்ல. Anyways, எப்போ எக்ஸ்பரிமெண்ட்?" 

"நாளைக்கு காலைல டீ சாப்ட்டதும்." 

"ஓகேஸ்…" 

~ மறுநாள் அதிகாலை, டீ சாப்பிட்ட பிறகு ~ 

தன் வீட்டு மொட்டமாடியிலிருந்து அந்த முள்ளம்பன்றியை ஆன் செய்தான் ராகவன். 

எல்லா முள்ளின் நுனியிலும் மைக்ரோ விளக்கொன்று எரிந்தது. 

"இந்தா இத பாக்கெட்ல வெச்சுக்கோ" என அவனின் பையில் ஒரு கார்டைத் திணித்து, தன் பாக்கெட்டிலும் ஒன்றை வைத்துக்கொண்டான் ராகவன். 

"என்னது இது?" 

"இந்த மிஷின்லேந்து வேவ்ஸ் ஊர் முழுக்க transmit ஆகி, அதனால மக்களோட மனசுல மாற்றம் வரும். இந்த கார்ட் அந்த வேவ்ஸ அரஸ்ட் பண்ணும். So we both won’t be affected by this experiment." 

சற்று நேரத்தில், உலகம் முழுக்க வேவ்ஸ் transmit ஆகி முடித்ததை பச்சை விளக்குகளை எரிவித்து அறிவித்தது முள்ளம்பன்றி. 

"சக்சஸா?" ஆச்சர்யமாகவும், ஆர்வமாகவும் கேட்டான் அச்சு. 

"இது பினாப்தலின் எக்ஸ்பெரிமெண்ட் இல்ல. கலர் மாறுச்சானு ஒடனே தெரிய. நம்ம வேல முடிஞ்சது. இனி மக்கள் என்ன பண்றாங்கன்னு பாக்க வேண்டியது தான்." 

இருவரும் கடைத்தெருவுக்குச் சென்றனர். கடைகள் திறக்கப்பட்டு, வாசல் கூட்டப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டு, காய்கறிகள் அடுக்கப்பட்டு, பூக்கள் முழமிடப்பட்டு, இன்றைய ஸ்பெஷல் டிபன்கள் எழுதப்பட்டு, எந்த நாளையும்போலவே அந்த நாளும் இருந்தது. 

"என்ன, எதுமே வித்தியாசமா இல்ல? முள்ளம்பன்னிய ஆன் பண்றப்ப பேட்டரி செக் பண்ணீங்களா?" 

"டேய்…டைமெடுக்கும். தாமினிக்கே அஞ்சு கொல தேவப்பட்டுச்சு." 

"ரைட்டு." 

"கடைத்தெருவில் எந்த மாற்றமுமில்லாததால் வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியைப் போட்டனர்." 

டார்கெட் அச்சீவ் செய்வதற்காக அலைந்து கொண்டிருந்த இண்டர்ன் ஜர்னலிஸ்ட், சமீபத்தில் மறைந்த நடிகையின் மகள் குட்டைச்சட்டியைப் போட்டுக்கொண்டு ஜிம்முக்குப் போனதை பாப்பராசி செய்து அறிவித்துக்கொண்டிருந்தார். 

அப்போது ஒரு நியூஸ் ஃப்லாஷ் ஆனது. 

ECR: அதிவேகத்தில் சென்ற  கார் இடித்து ஆட்டோடிரைவர் பலி 


பொதுமக்களும், ஆம்புலன்ஸும், போலிசும், ஏனைய ஆட்டோக் காரர்களும் சம்பவ இடத்தை மொய்த்துக் கொண்டிருந்தனர். 

"குடிச்சதால ஓவர்ஸ்பீடா வந்தேன், இடிச்சுட்டேன்" எனச் சொல்லிக் கொண்டிருந்தான் அந்த மில்லினியர் வாரிசு. 

அங்கிருந்த மக்களெல்லாம், வண்டியை ஓரங்கட்டி, வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

அப்போதுதான் அந்த விநோதத்தைக் கவனித்தான் ராகவன். 

மக்களோ, சேராட்டோக்காரர்களோ இடித்தவனைக் கடிந்து கொள்ளவோ, அடிக்கவோ, ஏன் இப்படிச்செய்தாய் என்றோகூடக் கேட்கவில்லை. 

போலிஸ் அந்தப்பையனை வண்டியில் ஏற்றிச்சென்றனர். அவனும் ஆட்டுக் குட்டியாய் சென்றான். 

~~~ 

ஒரு நாள் கடந்தது. 

~~~ 

அக்கம் பக்கத்தில் விசாரித்த வகையிலும், செய்திகள், சோசியல் மீடியாவில் பார்த்தவகையிலும், மக்கள் தத்தமது வேலைகளைப் பார்த்தவாறு இருந்தனர். வழமை எல்லாமே தொடர்ந்து நடந்தது. எங்கெல்லாம் தவறு நிகழ்ந்ததோ அதை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். 

~~~ 

மாநில அளவிலான அரசுப்பணி தேர்வு ரிசல்ட் வந்த அடுத்த அரை மணி நேரத்தில், லஞ்சம் கொடுத்தவர்கள் மட்டுமே செலக்ட் ஆன செய்தி ஆதாரப்பூர்வமாக வெளி வந்தது. 

"பாவம், எவ்ளோ கஷ்டத்துல இருந்தாங்களோ, காசு குடுத்தாச்சும் வேலைக்கு சேரணும்னு சேந்துருக்காங்க" எனக்கூறி, அடுத்த வருடத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டனர் தேர்வுபெறாதோர். 

~~~ 

ஆக்சிஜன் சிலிண்டர் வாங்காததால் ஆஸ்பத்திரியில் ஆயிரம் குழந்தைகள் ஒரே நாளில் இறப்பு என்ற செய்தி அடுத்த சில தினங்களில் வந்தது. 

"இவ்ளோ சீக்கிரமா அதுகளுக்கு நேரம் முடியும்னு நெனைக்கல", எனக்கூறி நகர்ந்தது மக்கள் கூட்டம். 

~~~ 

வகுப்புகளில் மார்க் குறைவாக எடுத்த மாணவர்களிடம், “இப்டிலாம் மார்க் எடுத்தா கஷ்டம்ப்பா, நல்லாப்படிங்க” என்பதோடு நிறுத்திக் கொண்டு அடுத்த பாடத்தைத் துவங்கினர் டீச்சர்கள். 

~~~ 

டாஸ்மாக்கில் கூட்டம் சற்று குறைந்தது. ஆனால் எந்த பாரிலும் ஒரு சண்டையோ சச்சரவோ நடக்காதது யாருக்கும் ஆச்சரியம் கூட அளிக்கவில்லை. அதை இயல்பாகவே எடுத்துக்கொண்டனர். 

~~~ 

சமூகத்தில் எல்லா வினைகளும் தொடர்ந்து நிகழ்ந்தன. செய்ன் அறுப்பு, விபத்து, கொள்ளை, படுகொலை என அத்தனையும் நிகழ்ந்தது. ஆனால் மக்கள் inert ஆகத் துவங்கினர். எதற்கும் எதிர்வினையாற்றாது, அப்படியே ஆற்றினாலும் அது வாழ்த்தாகவோ, சாதாரண சொல்லாகவோ மட்டுமே இருந்தது. 

ஒரு கட்டத்தில் எல்லோருக்குமே அந்த இயல்பு விநோதமாகப் பட்டது. ஆனால் அது ஏன் நடக்கிறது என்ற சிந்தனையோ, எண்ணமோ இல்லாது இயங்க ஆரம்பித்தனர். எல்லோருக்கும் ஏதோ நடக்கிறது எனத் தெரிகிறது. ஆனால் என்னவென்று புரியவில்லை. அது குறித்து எதுவும் செய்யவும் முடியவில்லை. அதப்பற்றிப் பேசவும் முடியவில்லை. பேசினாலும் பேசி முடித்தபின் அதை மிகச் சாதாரணமாகக் கடந்து போகவே அவர்களால் முடிந்தது. 

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சங்கிலி அத்தனை பேரையும் கட்டிப் போட்டிருக்கிறது என்று தெரிகிறது. அதை அறுத்தெரிய முடியுமா என்பதும் புரியவில்லை. அறுக்க இயலுமா என்பதும் புரியவில்லை. எங்கிருந்து துவங்க என்பது குறித்தும் யாருக்கும் உணர்வில்லை. 

~~~ 

சில வாரங்களில், மக்கள் அதிகமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். முதலில் காரணமின்றி, பின் ரணமின்றி. பின் ரணமிருந்தாலும். 

எல்லாவிடத்திலும் பேரமைதியும் இருந்தது, ஒவ்வொருவருக்குள்ளும் கொந்தளிப்பும் இருந்தது. அந்தக்கொந்தளிப்பின் வெளிப்பாடாய் வெடிச்சிரிப்பு மட்டுமே இருந்தது. 

~~~ 

தலைதெறிக்க ஓடி வந்து, "என்னய்யா பண்ணி வச்சிருக்க? The world has gone insanely insane. எதாச்சும் பண்ணு" என்றான் அச்சு. 

"தெரியும். I’m observing closely. எல்லாவனும் எல்லாத்தையும் ஆமோதிச்சுட்டு, diplomaticகா ஆகிட்டிருக்கானுக." 

"DO SOMETHING." 

~~~ 

முள்ளம்பன்றியை ஆன் செய்தான் ராகவன். வேறொரு ஃப்ரீக்வன்ஸியைத் திருகினான். சற்று நேரத்தில், ஆரஞ்சு நிற பல்ப் முள்ளின் நுனியில் பளிச்சிட்டு, 'கம்ப்ளீட்' என சமிக்ஞை செய்தது. 

~~~ 

சில நிமிடங்கள் கழித்து, தெருவில் இரண்டு சிறார்கள் எதையோ பேசிக்கொண்டு நடந்து போனது கேட்டது. 

எட்டிப்பார்த்தான் ராகவன். 

அதிலொருவன் கையில், இன்னதென்று வரையறுக்கவியலா ஓர் உருவமற்ற உருவம் கொண்ட அரையடி நீளமுள்ள கற்சிலை போலொன்று இருந்தது. 

"...டே இல்லடா, இதுக்குப் பேரு ஜூனோதான்" என்றான் ஒருவன். 

"போடா, இத வெஸ்டானுதான் கூப்புடணும்" என்றான் மற்றவன். 

"ஒனக்கென்ன தெரியும்? பெருசா பேச வண்ட்ட, இது ஜூனோதான்." 

"இவுருக்குதான் எல்லாமே தெரியும்னு ஆட்டிட்டு வண்ட்டாரு, இது வெஸ்டாதான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜூனோ என்றவன் வெஸ்டா என்றவனை மூக்கில் ஒரு குத்து விட்டான். 

வெஸ்டானுக்கு மூக்குடைந்து, ரத்தம் வழிந்து, அந்தச் சிலையில் சிந்தியது.
                                                    ~~~


Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂