மனோஜ் குமார்

மனோஜ் நடித்த தாஜ்மஹால் நமக்குப் பிடித்த படங்களிலொன்று (நிஜமாகவே). அதிலும் அதில் வரும் காமடி சீன்கள் நமக்கு ஒர்க்கௌட் ஆகியிருந்தன என்பதாலும் அது விருப்பமான படம். பதினாறு வயதினிலே ஆல்பத்தில் இருக்கும் நடிகை மீனா பாடிய "பதினா...று வயதினிலே, முதன்முதலாய் இதயத்திலே வந்தானே பே.....ரழகன்" எனும் பாடல் அப்போது விஜை டிவியில் அடிக்கடி வரும். போதெல்லாம் உட்கார்ந்து கேட்பதுண்டு. எத்தனையோ நடிகர்களில் இவரும் ஒரு நடிகர் என்பதாகவே இருந்த அவரை, தொடர்ந்து ஃபாலோ செய்ய ஆரம்பித்தது யூடூபு வந்ததும்தான். அதிலும் அவர் பேட்டிகளை ஒன்று விடாமல் தேடித்தேடிப் பார்ப்பது. சில பேட்டிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் கூட பார்த்திருக்கிறேன். 

ஒரு மக்கள் அப்சர்வராக, மனோஜ் நமக்கு ஆகப் பெரும் கேஸ்டடியாக இருந்தார். அவரின் பர்ஸ்பக்டிவ், சைக்காலஜி, உடல்மொழி, பேச்சு என எல்லாமே கவனிக்கப்படவேண்டிய கச்சாப்பொருளாக நமக்கு அமைந்தது. அவரின் பேட்டியைத் தேடித் தேடி ப்லேலிஸ்டாகப் போட்டு மணிக்கணக்கில் watch செய்துகொண்டிருப்பேன். அவரின் பேட்டிகள் அப்படி ஒன்றும் பெரும் திறப்பாகவோ, informativeவாகவோ இராது. In fact, ஒரே பேட்டியைக் காப்பி பேஸ்ட் செய்ததாகத்தான் இருக்கும். 

உண்மையை உடைத்துச் சொல்லப்போனால் அவரின் பேட்டிகளைப் பார்த்தபோது மனோஜின் மீது உள்ளூர ஒரு வெறுப்பு இருந்தது. One of the most privileged nepo-kids in the film industry. அப்படி இருந்தும் எப்படி ஒருவரால் தன் ப்ரிவிலேஜை உணராமல் (அல்லது அதைத் தவறாக உணர்ந்து) தனக்கு நேரமே சரி இல்லை, அதனால் தான் எதுவுமே நடக்கவில்லை எனக் கூற முடிகிறது என்ற ஆச்சர்யமும் ஆத்திரமும் வரும். 

தன்னை நடிக்கச் சொல்கிறார் அப்பா, இல்லை தான் டைரக்சனுக்குத் தான் செல்வேன் என வெள்ளிக்கிழமை வீட்டில் பெரும் சண்டை நடக்கிறது. The immediate திங்கள் கிழமை காலை மணிரத்னத்திடம் அசிஸ்டெண்ட்டாகச் சேர்ந்துவிட முடிகிறது. பம்பாய் ஸ்க்ரிப்டைக் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு அதே படத்தில் அசிஸ்டெண்ட்டாகச் சேர்ந்து விட்டார். தமிழ் சினிமாவில் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடத்தில் அசிஸ்டெண்ட்டாக வேலை செய்த ஒரே நபர் இவராகத் தான் இருக்க முடியும். அப்படி அத்தனை பேரிடம் இருந்தும் இவர் கற்றுக் கொண்டது என்னவென்பதை இவரின் பேட்டிகளும், அவர் இயக்கிய, தேர்ந்தெடுத்த பல படங்களே சொல்லும். 

எதற்கெடுத்தாலும் டைம் செட்டாவல என்பதும், தந்தையின் நிழல் பெரும் சுமையாக இருப்பதாகவும் அடிக்கடிக் குறிப்பிடுவார். அவரிடம் நமக்கிருந்த கோபம் அவர் நெபோ கிட் என்பதால் அல்ல, எத்தனையோ அரிய வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றைத் தவறவிட்டது மட்டுமில்லாமல் உதாசீனப்படுத்துவதுதான். 

டைரக்சன் சரி வரவில்லை என்றதும் அமெரிக்காவுக்குச் சென்று நடிப்புப் பயிற்சி பெற்றுத் திரும்பி வந்து great grand intro. படம் சரியில்லையாதலால் அது செல்ஃப் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவரின் படத் தேர்வுகளும் தவறாகவே அமைய எல்லாம் இருண்டது. 

யாருக்கு யாரோ, கௌண்டம்பாளையம், முதல் மாணவன் போன்ற சோப்லாங்கிப் படங்களை ஊர்கூடிக் கேலிபண்ணிச் சிரித்து பங்கம் பண்ணுகிறதல்லவா, அது போல இவரின் பேட்டிகளையும் தொடர்ந்து பார்த்து, look! such a loser என மனம் நினைத்துக்கொள்ளும். அது என்னவோ இவரின் பேட்டியைப் பார்த்து நகைப்பது ஒரு குரூர திருப்தி அளித்தது. Binge watching என்பார்களே, அது போல இவரின் பேட்டிகளை பிஞ்சு வாட்ச் செய்வேன். இது போலவே தேடித் தொடர்ந்து பார்க்கும் இன்னொருவனின் பேட்டி டைரக்டர் பிரவீன் காந்தி. பேட்டி மட்டுமின்றி அவனின் நியூஸ் சேனல் கலந்துரையாடல்களையும் விடுவதில்லை. கேஸ்டடிக்கு கொள்ளையாய் உதவும் ஒரு வீண்விந்து யுனீக் பீஸ் அது.

ஒரு வியூவராக அல்லாமல், கேஸ்டடி எனும் பார்வையில் மனோஜின் படங்களையும் பேட்டிகளையும் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். 

அவரின் நடிப்பே அப்படித்தானா இல்லை மனோஜின் மேல் எனக்கிருந்த prejudiceசா தெரியவில்லை. அவரின் பின்னாட்களிலான படங்களிலெல்லாம் நா எப்பிடி நடிக்கிறேன் பார் எனக் காட்டும், தன் நடிப்பைத் தானே நடித்தும், மெச்சிக்கொள்ளும் ஒரு உடல்மொழி நடிப்பே அவரிடம் வெளிப்படும். மனோஜின் பல்லவன், கதிர்வேல் காக்க, வாய்மை ஆகிய படங்களைப் பாருங்கள். 

டிப்ரசனும், தற்கொலை எண்ணங்களும் ஒருவரை தரையில் முட்டச் செய்து, உரிய சப்போர்ட்டுக்கள் மூலம் bounce back ஆகுகையில் வேறொரு அப்கிரேடட் ஆளாகச் சிலரை மாறச் செய்யும். அது போல ஒரு மிரக்கில் மனோஜுக்கு நடந்துவிடும் என எதிர்பார்த்தேன். காலம் முந்திக்கொண்டது. மனோஜைக் குறித்து ஒற்றை வரியில் என்ன சொல்வது என்பது பல காலமாகவே என் மனத்தினுள் ஓடிய கேள்வி. அவரின் மறைவையொட்டி கானா பிரபா எழுதிய வரி சாலப் பொருந்தும். "இன்னும் அவர் ஒரு செல்லப் பிள்ளையாக இருக்கும் குழந்தைத்தனம் தான் மேலிட்டது".

Rest In Peace Manoj!

வல்லூறு மீடியாத்தேவடியாப்பயல்களின் வெறிக்கு மனோஜும் விதிவிலக்கல்ல. அவன்கள் செய்த இழி செயலை இன்னதென்று வரையறுக்க முடியாது. 


மீவிடியாப்பயல்கள் துக்க வீட்டுக்குக் கொடுத்திருக்கும் கேப்சனைப் பாருங்கள். 


ஒரு மீவிடியாப்பயல் funeral வேனில் ஏறி தலைமாட்டில் கேமரா வைத்து லைவ் ஸ்ட்ரீம் தொடர்ந்தான். 


பப்லிக்கை என்ன சொல்லி நோவது எனத் தெரியவில்லை. தகன இடத்தில் இருந்து ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். 



=====================================================================

நான் என் வாழ்க்கையில் அதிக முறை கேட்ட ஒரே பாடல் தாஜ்மஹால் படத்தில் வரும் குளிருது குளிருது தான். ரஹ்மானின் உச்சமது. அது ஒரு போதை. கேட்டதும் உங்களைக் கிறங்கச் செய்யாது. அதிவீரிய மதுவைப் போல. உங்களுக்குள் செல்லச் செல்ல அது செய்யும் மாற்றம், உங்களைத் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளும் ரசவாதம்... அதை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது. மனோஜின் இறப்புச் செய்தி வந்ததும் குடும்ப குரூப்பில் இந்த மெசேஜ் வந்ததே நமக்குக் கிடைத்த பெரும் validation.  



காலேஜ் விட்டு மாலையில் வருவேன். ஆறரை முதல் ஏழுக்குள் இருக்கும். தாஜ்மஹால் கேசட்டில் குளிருது பாட்டைப் போடுவேன். பாட்டு முடியும், மீண்டும் ரீவைண்ட் செய்து குளிருது பாடல். இப்படி இரவு ஒன்பதரை மணி வரை செல்லும். கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் தினமும் வீட்டில் நடக்கும் இது. பைத்தியம் போல் நம்மைப் பார்ப்பார்கள். இந்தப் பாடல் மட்டுமே ஓடும். கேசட்டின் டேப் தேய்ந்து, மேக்னெட் வலுவிழந்து பாடல் குழறிக் கேட்க ஆரம்பித்து விட்டதும்தான் இப்பழக்கம் ஓய்ந்தது. பிறகு சிடிக்கு மாறியபின் ரீவைண்ட் செய்யும் வேலை மற்றும் நேரம் மிச்சமானது. ஒரு அமுக்கில் மீண்டும் பாட்டுப் படிக்கும்.

இந்தப் பாடல் எத்தனை நம்முள் ஊறியிருக்கிறது என்றால் அதை வைத்து ஒரு குறுநாவல் எழுதும் அளவிற்கு. (இந்தப் பாடல் குறித்து ஏஆர் ரஹ்மானுக்கு மெய்ல் அனுப்பும் கிறுக்குத் தனமும் செய்திருக்கிறேன்.)



Thanks Manoj! 






Comments