சமீபத்தில் அயல்நாட்டு நண்பரொருவருடன் சிலபல அயல்நாடுகளைச் சுற்றி வரப்பட்டது. ஒரு ஏழு நாள் கேப்பில் மூன்று ஆசிய நாடுகளில் பயணம். ஆங்கே முடித்துவிட்டு தாயகம் திரும்பியவுடன் ஏர்போர்ட்டிலேயே பேஸ்த்தடித்த நிலைக்கு ஆளாகிவிட்டார் அயலக நட்பு. சொல்லப்போனால் பயணித்த ஏழு நாட்களிலும் ஒரு முறை கூட கார்களின், பேருந்து அல்லது பைக்குகளின் அலறல் ஒலியே கேட்டதில்லை. இங்கே ஏர்போர்ட்டில் இறங்கி கண்ணாடிக்கதவில் வெளிப்பட்டதுமே அத்தனை ஒலிப்பான்கள்.
வெளிவந்து வாடகைக்காருக்குக் காத்திருந்த நேரத்திலேயே கிட்டத்தட்ட ஆயிரம் முறை ஒலிப்பான்கள் ஒலித்திருக்கும். அதுவும் அந்த நடுநிசி வேளையில்.
சொல்லப்போனால் நானும் அந்த நட்பும் ஒரு கேமே விளையாடினோம், மெற்றாஸில் காரிலோ ஆட்டோவிலோ பயணிக்கையில் ஒரே ஒரு ஆரன் சத்தம் கூடக் கேட்காமல் எத்தனை நொடிகள் இருக்கிறது என எண்ணுவதே அது. அயம் நாட் மேக்கிங் இட் அப் அல்லது எக்சாஜரேட்டிங். இது வரை ஒரே ஒரு முறை கூட பத்து செகண்டைத் தொட்டதில்லை. கவனியுங்கள், பத்து செகண்டைத் தாண்டவில்லை என்பதல்ல, தொட்டது கூட இல்லை. ஒன்று... இரண்டு... மூன்று என எண்ணத்துவங்குவோம், அருகிலோ தொலைவிலோ ஒருவரோ இருவரோ ஆரனமுக்கி விடுவர், மீண்டும் க்லாக்கை ஒன்றிலிருந்து துவங்குவோம். இப்படி ஊரிலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் கணக்கெடுப்பது. எதனால் இப்படி ஆரன் அப்சஷன் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
மற்றொன்று நண்பர் கேட்டது, ஏன் இங்கே எல்லா டிரைவரும் எப்போதும் அக்ரெஸிவாக, கோபமாக இருக்கின்றனர் என்பது. நாங்கள் சென்ற சில ஆசிய நாடுகளும் டிராஃபிக்குக்கு பெயர் பெற்றவையே. ஆனால் அங்கெல்லாம் இப்படியான சச்சரவுகளும், ஏசுதல் பேசுதல்களும் இருந்ததில்லை. ஆனால் இங்கே ஒருவரை ஒருவர் கொஞ்சம் விட்டால் அடித்துக் கொள்ளும் அக்ரெஷன் ஏன் எனக் கேட்டார். பதிலில்லை. இப்போது புரிகிறதா ஏன் இந்த நாட்டை விட்டுப் பறந்தேன் என மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன்.
போலவே அயல் நாட்டில் அதிகக் காசு கேட்டு 'மிரட்டும்' வண்டியோட்டுனர்களைக் காண்பதரிது. இங்கே 80-20 அளவிற்கு பெரும்பான்மை ஏன் அப்படிச் செய்கின்றனர் எனக் கேட்டார். அவருக்குச் சொல்ல இங்கிருக்கும் ஒயிட் காலர் கிரிமினல்கள் முதல் பாடம் எடுக்க வேண்டும் என்பதால், அதற்கு நேரமும் இல்லை என்பதால், இங்கே இப்படித்தான் என முடித்துக்கொண்டேன்.
ஏர்போர்ட்டில் ப்லேனிலிருந்து இறங்கியது முதலே (வெளிநாட்டவருக்கான கஸ்டம்ஸ் ஃபார்ம் நிரப்புவதன் அலைக்கழிப்பில் தொடங்கி, இம்மிகிரேட்டினரின் பண்புகள் தொடர) நண்பர் பெரும்பாடு பட்டுவிட்டார்.
பொதுவாகவே இந்தியர்களின் சிவிக் சென்ஸ் குறித்து உலகப்புகழ்கள் உள்ளன. எங்கு சென்றாலும் கத்திக் கத்திப் பேசுவது (ஜப்பானிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அக்கம்பக்கத்தினர் இந்தியர்களின் இந்த லவுடு நாய்ஸ் நான்சென்ஸ்களைப் போலிசில் சொல்லி கேசானதெல்லாம் லட்சக்கணக்கில் உள்ளது). போலவே மற்றவர்களிடம் பேசும்போது மரியாதையாகப் பேசாமல் ஆண்டான் அடிமை போல ரூடாகப் பேசுவது. Literally நானே emiratesசில், வரிசையாக குடிபானங்களை அளித்தபடி வந்துகொண்டிருந்த ஏர்ஹோஸ்டசிடம், ஒரு இந்தியன், அவன் அப்போது கக்கூசுக்குச் சென்று வந்ததால் அதிகாரத்தோடு அந்த அம்மணியின் தோளைத்தட்டி எனக்கு ஒரு டீ வேணும் என்றான். இத்தனைக்கும் அவனின் வரிசை இன்னும் வரவே இல்லை. தி கிரேட் இந்தியன் கிச்சன் (மலையாளப்) படத்தை உருக்கி ஒற்றை ஆளாக ஆக்கினால் ஒரு உருவம் வந்தால் அது அவன் உருவம் தான். அவனின் அந்த அகோரி-அதிகார பாடிலேங்வேஜைப் பார்த்து நமக்கே அவ்வளவு ஆத்திரம் வந்தது. அந்த ஓஸ்டஸ் அம்மணி பொறுமையாக, தண்மையாக, உங்கள் சீட்டில் அமருங்கள் அய்யா, வரிசைக்கிரமமாக உங்களுக்கும் டீ அளிக்கப்படும் என்றார். அவர் மைண்ட்வாய்சில் சூத்தக்கொண்டு போயி உன் சீட்டுல வைடா புண்டாமனே, டீ குடிக்கலன்னா செத்துரமாட்ட என நினைத்திருக்கக்கூடும். ஆனால் அதைக் கிஞ்சித்தும் காட்டிக்கொள்ளவில்லை. எமிரேட்சைப் பொறுத்தவரை இன்-ஃப்லைட் எக்ஸ்பீரியன்ஸ் அருமையாயிருக்கும். செக்கின் கௌண்ட்டரில்தான் எச்சைவேலை பார்ப்பான்கள்.
ஆக, இப்படி சென்றவிடமெல்லாம் சிறப்பு சேர்க்க ஆரம்பித்து விட்டனர் இந்தியர்கள். இந்தியர்கள் என்று வரும் இடங்களிலெல்லாம் பெரும்பாலும் வட இந்தியர்கள் என வாசித்துக் கொள்ளவும். தென்னிந்தியர்கள் இல்லாமலில்லை, பெரும்பாலும் அவர்கள், சிறும்பாலும் இவர்கள். ஆக மொத்தம் இது ஒரு தேசிய நோய்.
காசு கொடுத்து விட்டால் ஒரு பொருளோ சர்விசோ ஆயுளுக்கும் தனக்கு அடிமை என நினைப்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஈமோக்லோபினை விட அதிகப்படியாக இருப்பது. போலவே துபாய்ல ஒரு வாட்டி குடிச்ச டீ க்லாஸ்ல மறுக்கா டீ குடிக்க மாட்டர் என்பது போல, இவன்கள் பயன்படுத்திய ஒரு விடயம், அது பஸ்சோ, ரயிலோ, பொது டாய்லெட்டோ, பார்க்கோ, அடுத்து வேறு யாருமே பயன்படுத்த மாட்டர் என்பது போல, அல்லது வேறு யாருமே பயன்படுத்தக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடனேயே அதை பயன்படுத்துவர். பயன்படுத்துவர் எனச் சொல்வதை விட, நாசப்படுத்தி நிர்மூலமாக்குவர் என்பதே சரி.
இதற்கு இணையமெங்கும் கொள்ளை கொள்ளையாய் எடுத்துக்காட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. உலக நாடுகள் விசா எல்லாம் வைக்கக்கூடாது, மாறாக, தங்கள் நாட்டின் பயணத்துக்கு அப்லை செய்யும் ஒவ்வொருவருக்கும் சிவிக் சென்ஸ் மற்றும் காமன் சென்ஸ் குறித்து டெஸ்டுகள் வைக்க வேண்டும். விசா அப்லை செய்யும் போதும் மற்றும் நாட்டுக்குள் நுழையும் முன்னும். அதில் பெய்லாவோரை கழித்து கட்டினாலொழிய அவர்கள் அவர்களின் நாடுகளை இந்த இழிநோய்மையர்களை விட்டுப் பாதுகாக்கவியலாது. இந்தியச் சுற்றுலாத்தளங்களில் வெளிநாட்டினருக்கென பத்து மடங்கு டிக்கட் விலை இருப்பது போல, அயல்நாடுகளிலும் இந்தியர்களுக்கென பிரத்தியேக அதிகப்படுத்தப்பட்ட ஃபைன் இருக்க வேண்டும். இல்லாவிடில் பீஸா கோபுரத்தில் ஏறி மூத்திரம் பெய்வான்கள் இவன்கள்.
Comments
Post a Comment
Pass a comment here...