இதுதான் ஒரிஜினல் GOAT
-
Pravinkoodu Shappu
தமிழ்ப் Pizzaவை மலையாளப்படுத்தி எடுத்த பழம்பூரி
-
மைக்ரேசன்கள் எந்த நாட்டை நோக்கி நடக்கின்றன என்பதை அறிய இது ஒரு எளிய சாம்பில். டச்சைவிட அதிக பா(போ)லிஷ் இருப்பது உள்ளபடியே ஆச்சரியம். போலவே உலகளவில் மைக்ரேசன்கள் உச்சத்தில் இருக்கும் இக்காலக்கட்டத்தில், இந்த மைக்ரேட்டினரால் ஏற்படப்போகும் மைக்ரேன்கள் என்னவென்பது இன்னுமொரு தசாப்தத்தில் அவ்வந்த நாடுகளில் தெரியும். ஊஎஸ், அவுஸ்திரேலியா, கேனடாவுக்குச் சென்ற சாணித்தண்ணிக்குடி இந்தியர்களால் என்னென்ன அக்கப்போர்கள் என்பது ஆல்ரெடி வெளிவந்துவிட்டது. அடுத்து ஐரோப்பாவிலும் இது நிகழும். அம்பேத்கர் குறிப்பிட்டது நிச்சயம் நடக்கும்.
நம் பிலாகை வாசிப்போர் அவர்களது குழந்தைகளையோ, அல்லது அவர்களோ, அல்லது அவர்களின் உற்ற சுற்றத்தினரையோ (நல்ல ஓபன் மைண்டட் உள்ள நபர்களுக்கு) இதிலுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்றையோ இரண்டையோ கற்றுக்கொள்ள அறிவுறுத்தி (பூமர் என அழைக்கப்பட்டாலும்) அவர்களை மேல்தூக்கி விடுமாறு...
துவலிங்கன்:
எதையும் நியாயமாகப் பேச வேண்டும் நண்பர்களே. புது இடத்தில் புது மொழியை, வகையைக் கற்பதெல்லாம் சரிதான். லர்னிங்கின் முக்கிய அம்சம் அன்லர்னிங் என்பார்கள். அதையும் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனாலதேசமயம், மொழி என்பது என்ன? ஒரு கருத்தை, எளிமையாக, தெளிவாக, சுருக்கமாக, விரைவாக அடுத்தவருக்குப் புரியும் வண்ணம் எடுத்துரைப்பதுதானே?
இங்கே இந்த செண்டன்சைப் பாருங்கள்:
Het is tien voor half zeven - இதை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால், it is ten for half seven என வருகிறது. இதில் எங்கேயாவது லேசாகவாவது ஆறு என்பதோ, இருபது என்பதோ மருந்துக்கேனும் வருகிறதா எனப் பாருங்கள். இப்படி கழுதையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்குப்பதில் ஆறிருவது என்று பொட்டிலடித்தாற்போல் சொல்வதற்கு எங்கே வலிக்கிறதாம்? இதெல்லாம் டூகே கிட்சுகள் தான் வந்து கட்டுடைப்பு செய்ய வேண்டும் நண்பர்களே. அவன்கள் தான் இவன்களுக்குச் சரி.
ஆறிருவது எனக்கூறுவது விசுவலாக ஈசியாகப் புரிகிறதா அல்லது ஏழு மணியாக அரமணி இருக்கும்ல அப்பிடி ஆக இன்னும் பத்து நிமிசம் இருக்குது என்பது ஈசியாக இருக்கிறதா? வசம்ப வச்சுத்தேய்க்கனும் வக்காலி.
பல்மொழி பயில்வதால் ஏற்படும் நன்மைகளில் சில, நமக்கு நாமே எண்டடெய்ன் செய்துகொள்ள ஏராள வாய்ப்புகள் கிடைக்கும். இதோ கீழிருக்கும் ஐசுகிரீமைப் பாருங்கள். வெறும் தமிழ் மட்டும் தெரிந்தவருக்கு இதில் எந்த சல்லாபமும் உண்டாகாது. தமிழும் டச்சும் தெரிந்திருக்கும் பட்சத்தில், இந்த ஐசுகிரீமைப் பார்த்ததும்...
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா எனும் வரி ஔட்டோமேட்டிக்காக மைண்டில் ஓட ஆரம்பிக்கும். இதற்குத்தான் சொல்கிறோம் பல்மொழி பயில்களடா பயல்களா என்று...
------
ஏன் சைகை மொழியையும் விடுவானேன்...
Comments
Post a Comment
Pass a comment here...