Oddly satisfying என்றொரு வகைமையிலான விடியோக்களுண்டு. ஏன், எதற்காக அவற்றைப் பார்க்குகையில் மனமானது ஆட்லி சேடிஸ்ஃபை ஆகிறது என்ற உளவியலை அறிந்து கொள்ள ஆவலுண்டு. இந்த சேடிஸ்ஃபை வீடியோக்களிலேயே பல டைப்புகளுண்டு. அவற்றில் நமக்குப் பிடித்தவை சில. (அவை பலருக்கு வாந்திகளை வரவழைக்கலாம். எனவே வியூவர்ஸ் டிக்ஸ்க்ரிப்சன் அறிவுறுத்தப்படுகிறது.)
பாய்மக்கமார்கள் சற்று உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் நலம்.
41:51 says:
"And when We bestow favor upon man, he turns away and distances himself; but when evil touches him, then he is full of extensive supplication."
"நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால், அவன் புறக்கணித்து விலகிவிடுகிறான்; ஆனால் தீமை அவனைத் தொட்டுவிட்டால், (அவன்) நீண்ட பிரார்த்தனையுடன் (அல்லாஹ்வை) வேண்டுகிறான்."
ஸ்டேடஸ் வெறியில விட்டா அடுத்து tanglishல எறக்குவானுக போல.
41:51 says:
"And when We bestow favor upon man, he turns away and distances himself; but when evil touches him, then he is full of extensive supplication."
"நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால், அவன் புறக்கணித்து விலகிவிடுகிறான்; ஆனால் தீமை அவனைத் தொட்டுவிட்டால், (அவன்) நீண்ட பிரார்த்தனையுடன் (அல்லாஹ்வை) வேண்டுகிறான்."
ஸ்டேடஸ் வெறியில விட்டா அடுத்து tanglishல எறக்குவானுக போல.
ஆடு மேய்க்கப்போன அரேபிய இளைஞ்சன் ஒருவன் காய்களைக் கடித்த ஆடுகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து எதேச்சையாக காப்பிக்கொட்டைகளைக் கண்டடைந்தபோது போல ஒருவன் இளைஞ்சனாகவும் ஆடாகவும் ஒருசேர இருந்துகு கொண்டிருக்குகிறான். காரணம் துவையல். புதினாத்துவையல். எண்ணெய்யை வானலியிலூற்றி, அதில் நாலு பூண்டுப்பல்களையும், சிறிது உளுந்து, நிலக்கடலை, சீரகம், சோம்பு ஆகியவற்றைப்போட்டு வறுத்துக்கொண்டே இருக்கையில் சில சிட்டிகை பெருங்காயத்தூளையும் போட்டு பின் ஒன்றிரண்டு விள்ளல் புளித்துண்டையும் சேர்த்து, (சுவைக்கு உப்பு) நல்ல காட்டமான காய்ந்த மிளகாய்களைத் தூவி வறுத்தவாறு இருக்க வேண்டும். அவை சற்று பொருபொருவென வந்ததும் ஆய்ந்து வைத்துள்ள புதினா இலைகளை அதிலிட்டு வதக்கினால் சற்று நேரத்தில் வதங்கி இத்துனூண்டாக ஆகி விடும். வதங்கல், எண்ணெய்ப் பிரிகிறவரை வதக்கி, பின் அதை ஆற வைக்கவும். ஆறியவுடன், தண்ணீர் ஏதும் சேர்க்காமல் மிக்சியில் விட்டு அரைக்கவும். ரொம்ப நைசாக வேண்டுவோர் நெடுநேரம் அரைக்கவும், கொஞ்சம் மணலாக வேண்டுவோர் லேசாக அரைக்கவும். பக்குவத்தைப் பதம் பார்த்துக்கொள்ளவும். பதம் பார்க்க விரலை மிக்சி ஜாரில் விடும்போது ஜாரைத் தனியாக எடுத்து வைத்துச் செய்யவும், அல்லது மிக்சி சுச்சியை அணைத்தபின் செய்யவும். இல்லாவிடில் கிளியின் மூக்கு போல புதினாத்துவையலுக்குள் குருதி பாய்ந்துவிடும். எனிவே, தேவையான பதத்தில் எடுத்துக்கொண்டு பொடேடோ சிப்ஸ், நேச்சோஸ் இதிலெல்லாம் தொட்டுத் தொட்டுத் தின்றால் வரும் சுவை இருக்கிறதே. அடடடடா! எப்படி இத்தனை நாள் இதைக் கண்டடையவில்லை என்ற தன்-கோபம் தான் வருகிறது போங்கள்.
Comments
Post a Comment
Pass a comment here...