கர்ட்டசி கிரிடிட்

சமூகச் சைக்கில்ல ஒரு கட்டத்துல எதிர்க்கப்பட்ட விசியம் பிற்காலத்துல ஏற்கப்பட்டது ஏராளமிருக்கு. ஆனா எதிர்ப்புக்கும் ஏற்கப்படுறதுக்கும் நடுவில இருக்க டைம்லைன் அதிகமாருக்கும். அதே சமயம் அந்த விசியம் டக்குனுலாம் ஏத்துக்கொள்ளப்படாது. அதீதமா எதிர்க்கப்பட்டு, பின் கம்மியா எதிர்க்கப்பட்டு, பின் திரை மறைவுல நடக்கறளவுக்கு ஒடுக்கப்பட்டு, அப்பறம் எங்க கண்ணு முன்னால வராத வரை தப்பிச்சன்னு கண்டுக்காம விடப்பட்டு, அப்பறம் நீ ஒரு புறமா வச்சுக்க, எங்கட்ட கொணாந்து நீட்டாதன்னு போகும். இந்த நிலை வரைக்குமே அந்த விசயம் அருவருப்பாவோ வெறுப்பு அல்லது எதிர்ப்புக்குரியதாவோதான் பாக்கப்படும். சமூகத்தால ஏற்கப்படுறதுன்றது பின் பல ஜெனரேசன் கடந்துதான் ஆகும். அது கொண்டாடப்படுறதுங்கறது அரிது. 

பலவற்றை உடைத்த டூகேகுஞ்சான்சும் சோசியல் மீடியாவும் இதையும் ஒடச்சுக்காட்டிருக்கு. சோமீல ஒருகாலத்துல, அதென்ன ஒருகாலத்துல? சோமீனு ஒன்னு வந்தே பாஞ்சாண்டுதான ஆவுது. சமீப காலம் வரைக்கும் சோமீக்கள்ல ஒரு சண்ட நடக்கும். என் போஸ்ட்ட திருடிட்டான், போட்டோவ காப்பி பண்ணிட்டான் இப்பிடி. சிலர் அந்தச் சண்டைய நாட்கணக்காலாம் நீட்டிச்சிருக்காங்க. நம்மளோட ஒரு போஸ்ட்டுக்கும் யாரோ காப்பி பண்ணி போட்ட எடத்துலலாம் நண்பர்கள் போயி சண்ட கட்டிட்டு இருந்தாங்க. நம்மமேல இருந்த அன்பின் வெளிப்பாடு. அப்பறம் சிலர் காப்பி பேஸ்ட் பண்ணிக்கறேன், கடேசியா ஒம்பேரயும் சேத்து போடுறேன், நொள்ள சொல்லக்கூடாதுன்னு தனக்குத் தானே அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டாங்க. அது கொஞ்ச நாள் ஓடிட்டு இருந்துச்சு. அப்பறம் புதுக் கூட்டம் கூடக் கூட இப்பிடி காப்பி பேஸ்டடிக்கிறது நார்மலைஸ் ஆகிருச்சு. ஒருத்தார் காப்பி பண்ணிப்போட்டா சண்டைக்கிப் போவலாம், ஒரு ஊரே பண்ணுச்சுன்னா? டயர்டாகுறது ஒரு புறம், முன்ன இப்பிடியான சண்டைக்கிலாம் துணைக்கு ஆள் வரும். ஆனா இப்ப இந்த மாதிரி காப்பி பேஸ்ட்டுக்கு சண்ட போட்டா, வேற வேலப்புன்னக இல்லியா ஒனக்கு, இதுக்குலாம் போயி மல்லுக்கு நிக்கிறியேனு கேலிபேச ஆரமிச்சிருச்சு சமூகம். ஜஸ்ட் ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்ன தார்மீக ஆதரவு கொடுக்கப்பட்ட விசயம் எப்புடி பொசுக்குன்னு கேலிக்குரியதா ஆச்சுங்கறது ஆய்வுக்குரியது. 

இது எழுத்து சம்மந்தப்பட்டது. அடுத்தது போட்டாக்கள். இன்ஸ்டா புரட்சியில பங்குகொள்ள கை, கால், இடுப்பு, இடுப்பு செயின், கழுத்தெலும்பு, தொடை நரம்புன்னு எல்லா அங்கவயங்களையும், சேலை கட்டுவது எப்படி, பேண்டீசில் ஹூக்கு மாட்டுவத் எப்படின்னு பயிற்சி வகுப்புகளையும் போட்டோ போட்டு வந்த ஜிகிடிகளின் போட்டோவ கைக்கொணர்ந்து வேற அக்கௌண்ட்ல போட்ட ஐடிக்கள கோர்ட்டுக்கு இழுத்தன ஏகப்பட்ட ஜடைகள் மற்றும் க்ராப்புகள். அந்த ஐடிக்களை ரிப்போட் செய்யும் தொடர் போரட்டம் நடத்துவதிலிருந்து நீயெல்லாம் சித்தப்பா சித்தி கூடப் பிறக்கவில்லை எனும் அறக்கேள்விகளாலும் துளைத்தெடுப்பதுண்டு. அரையாண்டு ஓடியிருக்கும், இப்படி காஜிப்போட்டோக்களைச் சேகரித்து ஒருமித்து சங்கமிக்கும் அக்கௌண்ட்டுகளின் பாலோயர்க்கூட்டத்தின் எண்ணுக்குப் பக்கத்தில் K என்றும் M என்றும் வரத்துவங்க, இதன் மூலம் தமக்கு ட்ராக்சன் அதிகமாவதையுணர்ந்த ஜிகிடிக்கள் இப்படித் தத்தமது புகைபோட்ட படங்கள் திருடப்படுவதை கண்டுக்காமல் விடுவதோடல்லாமல், தங்களின் சிறப்புக் காட்சிப்படங்களை அவர்களிடம் பகிர்ந்து விளம்பரம் தேடவும் உட்பட்டனர். 

வோக்குகளுக்கு உடனே வேர்க்கலாம், கன்செண்ட்டுக்கும் நோமீன்ஸ்நோவுக்கும் வித்தியாசமுண்டு என்று. அட அரக்கஞ்சிக்குப் பிறந்தவர்களே, ஒரே ஐடி ஒரு போட்டோவை புரொமோட் செய்கிறது மற்றொரு ஐடியிடமிருந்து போட்டோ கன்செந்ட் வாங்காமல் போட்டோ திருடுகிறதெனில் அது சரியாகிவிடுமா? இப்படியான காஜிசங்கம ஐடிக்களுக்கு டியெம் அனுப்பி போட்டோ பகிர்வதோடல்லாமல் போட்டோ போட சல்லியும் கொடுக்கும் பிசினஸ் மாடலும் உண்டாகியிருக்கிறது. இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு வருடத்துக்கு முன் கூட்டெதிர்க்கப்பட்ட ஒன்று எப்படி ரெவஞூ ஜெனரேட்டிங் பிசினஸ் மாடலாகும்? 

ரண்டாயிரத்து பாஞ்சு வரை, அதுவரை வயதுக்கு வந்திருந்த பலர் இதயம் முரளி மோடில்தான் இருந்திருந்தனர். மணக்க யாரும் சிக்கினால் சிரீதேவி, சிக்காவிடில் சுயீசைடுதேவி என சுத்த பத்தமாக இருந்து வந்தனர். சர்க்கிலில் உள்ள ஒருவருக்கு உடல்ரிலேசன்சிப் கிடைத்தாலேயே அவரை ஆச்சரிய வினோதமாகப் பார்ப்பது இருந்தது. ப்ரேக்கப்பாகி அவர் மற்றொரு துணையைத் தேடிக்கொள்வதே புருவமுயர்த்தும் செயலாகவும் விளங்கியது. ஒன்றுக்கு மேற்பட்டு பாடியுறவு வைத்திருந்தால் அவரை எய்ட்ஸ் நோயாளிபோல் கருதிய காலமும் ஜஸ்ட் ஏழெட்டு வருடமுன் இருந்தது. இப்போது அதையே பாடிகௌண்ட் என பேசன் swag சொல்லாக்கி, அதில் மிகப்பெரிய இண்டிஜர் வேல்யூ சொல்பவர்களை கெத்தாகவும் அது பெருமைக்குரியதாகவும் பார்க்கும் பார்வையும் பொசுக்கென்று தோன்றியுள்ளது. 

எதுவும் பக்குவப்படவோ முதிர்வடையவோவெல்லாம் காத்திருக்கத்தேவையில்லை. அனேகம் பேரால் செய்யப்படுகிறதென்றால் அந்த FOMOவிலேயே கண்கட்டித் தாமும் செய்யக் குதித்துவிடுகின்றனர் MFs. 



----


இவர்களைப் போன்ற தன்னலம் பாரா மகா ஆத்துமாக்கள் இருப்பதால்தான் மழை பெய்கிறது கடலில் மீன் கிடைக்கிறது சிக்கன் முட்டை போன்றவை மார்க்கட்டில் அவைலபிலாக இருக்கிறது. இவர்களால் தானய்யா இண்டர்நட் சர்வரே இயங்குகிறது. இல்லாவிட்டால் கருந்துளைகள் என்றைக்கோ நம்மைக் கபளீரகம் செய்திருக்கும். 









-----

W





Comments