விசிறி

இணையத்துல நடக்கற ரசிக சண்டைகள பாக்கறப்ப எவ்ளோ சொகுசுக்குண்டியான வாழ்க்கை வாழறானுகனு அவனுக மேல பொறாம வருது. Imagine the only thing you gotto worry or fight for is some shitty delusional fan war, that too in social media. எவ்ளோ சுகவாசியா இருந்தா இதெல்லாம் ஒரு ப்ரியாரிட்டியா இருக்கும். 

நமக்கும் அப்பிடிப்பட்ட அனுபவங்கள் இருந்துது, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்னாடி. அப்ப நமக்கு இருந்த சர்க்கில்ல இண்டர்னல் ஃபைட் மட்டும் போட்டுக்கறது. அப்பவும் சண்டையெல்லாம் எறங்கிப்போடுறதில்ல. நாம வெறும் ஆடியன்ஸ் தான். விசியம் ரசிக சண்டையில இல்ல, யாருக்கு ரசிகரா இருந்தோங்கறதுலதான். வெளிய சொல்லவே வெக்கெக்கேடு. அப்பிடி ஒரு அறுவர் கொண்ட வினோத ரசிக பட்டாளம் அது. 

நடிகர்னு எடுத்துக்கிட்டா ஒருத்தனுக்கு அஜித் புடிக்கும். இன்னொருத்தனுக்கு விஜய்னு தான நெனப்பீங்க? அதான் இல்ல. இன்னொருத்தனுக்கு மாதவன் புடிக்கும். இவனுக ரெண்டு பேரும் கசினண்ணன் தம்பிகள். அஜித் மாதவனுக்காக குத்துப்புடிப்பானுக. இதுல மாதவன் ரசிகன் கடைசியா வச்ச பிரம்மாஸ்திரம் என்னன்னா, மாதவன் அஜித் பொண்டாட்டி கூட நடிச்சுட்டான், அஜித் மாதவன் பொண்டாட்டி கூட நடிச்சிருக்கானான்றது. எப்பிடிப்பட்ட சண்டைகள் பாருங்க. இதுல அஜித் ரசிகன் கல்ஃபுல பெரிய எஞ்சினியரா இருக்காப்டி. மாதவன் ரசிகன் அமெரிக்கால டாக்டர்.

அடுத்து இசைனு வந்தா யுனானிமசா எல்லாரும் ஏ ஆர் ரஹ்மானியர்கள். ஒருத்தர் மட்டும் (அந்த அறுவர் கூட்டத்துலயே மூத்தவரு) ராஜா ஃபேன். இத்தாண்டா இசை, இத இப்பிடித்தான் கேக்கணும்னு எல்லாருக்கும் லைப்ல ஒருத்தர் முன்னின்று வழி காட்டிருப்பார்ல. அப்பிடி நமக்கு அவரு. பொதுவா நாம ரஹ்மான் பாட்டு மட்டுந்தான் கேக்கறது. ராஜா பாட்டுக்களும் ஓர் உலகம், அது வேற மனோநிலைக்கி கூட்டிட்டுப் போறதுனு காமிச்சு குடுத்து ராஜா பாடல்கள அறிமுகமும் செஞ்சு வச்சாப்டி. If my memory is correct, அவர் குடுத்த மொத ராஜா பாட்டு ஒரு ஜீவன் அழைத்தது. 

அதுகாறும் அய்யிய்ய இது சோகப்பாட்டு, இத எவன் கேப்பான்னு ஒதுக்கி வச்சிருந்தவன, இது சோகமில்ல, சோகத்துக்குள்ள இருக்கற வேற ஒரு உணர்வுன்னு புரிய வச்சாப்டி. வரிகள கேளு, அது என்ன சொல்ல வருதுங்கறது கவனி, அதுகூட இந்த வாய்சும் இசையும் சேந்து மனசுக்குள்ள குடுக்குற உணர்வ புரிஞ்சுக்கனு சொன்னாப்டி. அப்பத்தான் நமக்கும் ஒடம்புல ஆர்மோன்கள் அத்லெட்டிக்ஸ் வெளாண்ட காலமென்பதால இசையத் தாண்டி வரிகளும் உள்ளுக்குள்ள போக ஆரமிச்சது. 


அதே அண்ணன் ரஹ்மான் இசையப்பத்தி சொன்னப்ப, இசைங்குறத விட ரஹ்மான் பாடல்களோட வெற்றி எதனாலனு சொன்னாப்டி. ரஹ்மான் பாட்டு ஹிட்டாவறதுக்கு காரணமே வைரமுத்து தான். அந்தாளோட வரிகள்லாம் இல்லாட்டா யாருமே ரஹ்மான் பாட்ட சீண்ட மாட்டாங்க, இவ்ளோ ஃபேமசும் ஆகிருக்காதுன்னாப்டி. அன்றோடு அவர்ட்ட கருத்துருவாக்கம் குறித்த கேள்விகள்லாம் கேக்கறத நிறுத்திட்டேன். இயர்போன தாண்டி வந்து செய்ய ஆரமிச்சிட்டாப்ல. 


இது ஒரு பக்கம்னா பாடகர்கள் சண்ட ஒரு சைடு ஓடும். தட் அஜித் ரசிகருக்கு உன்னி க்ரிஷ்ணன் தான் ஃபேவரிட். ஆளு பாக்கவும் அப்பத்தைய உன்னி மாதிரி தான் இருப்பாப்டி. பாடுனாலும் அதே மாதிரினு சொல்லக் கேள்வி. பாடிக்கேட்டதில்ல. அதுக்கு ஆப்போசிட் பாடகர் யாரும் இல்ல. ஆனா என்னோட ஃபேவரிட்டுக்காக என்னய புடிச்சு ஓட்டுவானுக. நமக்கு என்ன காரணத்துனாலயோ ஸ்ரீநிவாஸ் குரல் புடிக்கும். மெலடியாவும் சாஃப்ட்டா பாடுவாப்டி, அதே சாஃப்ட்ல உச்சஸ்தாயிலியும் பாடுவாப்டி. ஒரு மாதிரி ஆம்பள சுஜாதா வாய்ஸுனு சொல்லலாம். ஆனா பாடுறப்ப அந்தாள் போடுற எஃபர்ட் அப்பிடியே மூஞ்சில எதிரொளிக்கும். அந்த ஃபேஸ்கட் போற போக்கப்பாத்து என்ன நசுக்கி விட்டுட்டே பாடுறானானு ஓட்டுவானுக. அந்தளவுக்கு கௌண்ட்டர் வராதுங்கறதால (அப்ப), கம்முனு சைலன்சராகிடுறது. பூவெல்லாம் மாலைகளாகும்லருந்து இனி நானும் நானில்லை, ஈஸ்வரி... ஒன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்றேன், மின்சாரப்பூவே, வினோதனே, முதல்முறை கிள்ளிப்பார்த்தேன்... இப்பிடி அடுக்கிட்டே போவலாம். செவிடனுக ரசனையில்லாம ரசாபாசத்துல ஈடுபடுவானுக. 


இதுக்கு நடூல சொல்ல மறண்ட்டனே. அந்த அமரிக்கா டாக்டர், அவன் ஒரு வெறித்தன ரஹ்மான் ரசிகன். ரஹ்மான் வெறியன்னு சொல்றதவிட non rahman வெறுப்பாளன். அதுலியும் ஹாரிஸ் மேலலாம் என்ன காண்டுனே தெரியல. அவ்ளோ வன்மத்த கக்குவாப்ல. அந்தாளு பொறந்ததே மிடிலீஸ்ட்டுங்கறதால அப்பப்ப அங்க போயி வருவாப்டி. யூஜி இங்க படிச்சாப்ல. அப்ப ஒருக்கா அபுதாபி ஏர்போர்ட்ல ஹாரிஸ பாத்ததாவும், ஹாரிசுக்கு முன்னால இந்தாளு நின்னுட்டிருக்க, அந்தாள கடந்து போக வேண்டிய ஹாரிஸ், ஆ யூ கோன கோ?னு கேட்டாப்ல, அதுக்கு நோ, அய்ம் கோன சிட்டுன்னு மூஞ்ச கோவமா வச்சுட்டு சொன்னேன், ஹாரிஸ் மூஞ்சி செத்துப்போச்சுனு சொன்னாப்ல. உன் வாயி உன் உருட்டு, உருட்டு உருட்டுனு நெனச்சுகிட்டோம். அலைபாயுதேல மாதவன் கூட வருவானுக பாத்துருக்கீங்களா? தட் மாம்பலம் பாய்ஸ். அவனுக குரூப்பா போயி ஹார்ஷா மொறச்சா எப்பிடி இருக்கும்? அப்பிடியாப்பட்ட கதை இந்த அபிதாபி ஏர்போட் கத. 


அந்தக்காலத்துல சங்கர்சார் மேல அவ்ளோ மேனியாக் நமக்கு. அப்பலாம் அம்பலம் டாட் காம்னு ஒரு சைட் இருக்கும். வார வாரம் அதுல சுஜாதா சார் வாசகர்களோட உரையாடுவாப்ல. அப்ப ஒரு தடவ சுஜாதா சார்கூடவும் இன்னொரு நாள் சங்கர் சார் கூடவும் குரூப் சாட்ல பேசிருக்கேன். அப்ப அன்னியனுக்கு கொஞ்சம் முன்னால காலம். ரஜினிகூட எப்ப படம் பண்ணுவீங்கனு கேட்டதுக்கு, ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி, டைம் வரப்ப பண்ணுவேன்னாப்ல. (ஏற்கனவே அந்த கேள்விய எவனோ கேட்டுட்டான் போல. நாம மறுக்கா கேட்டதும் இந்த பஞ்ச் வந்துச்சு. அதெல்லாம் வசந்த காலம். அவர அடியொற்றி அட்மையர் பண்ண காலம். பின் லைஃப் ஏப்பண்டு.)


***

சிரீனிவாஸ் மற்றும் மற்றொரு பேவரிட் குரலான சுஜாதாவின் குரல்களில் பாடல்களில் ஓர் மரகதம்



Comments