ஒரு பழக்கம். அனேகமா பாட்டனார்ட்டருந்து ஒட்டியிருக்கக்கூடும் என்கிறது பட்டறிவு. எங்கயேனும் ஓசில எதும் குடுத்தா கூட்டம் கும்மும்ல அங்க போயி நிக்காம இருக்கறது. இப்பிடி இருன்னுலாம் அவர் எதும் சொன்னதா ஞாபகமில்ல. ஆனா சில பழக்கங்கள வழமைல கத்துப்போம்ல, அப்பிடிக் கத்துக்கிட்டதுதான் இதுவும். எல்லாருக்கும் கெடைக்கும்னாலும் சிலத grabபிக்க லைன்ல நின்னாலும் அடிச்சு புடிச்சு நிப்பானுகல்ல, கியூவே அப்ப கூட்டமாட்டம் தான் தெரியும். அதுலாம் நமக்கு பேரலர்ஜி. பொறுமையா இருந்து கடைசியா வாங்கிக்கலாம், சப்போஸ் அது காலியாகி கெடைக்காமப் போனாலும் பரவால்லங்குற ஆட்டிட்யூட் சின்ன வயசுலருந்தே ஒட்டிக்கிருச்சு. இது பர்சனாலிட்டி அளவில பெரிய தாக்கம் ஏற்படுத்திருக்கு.
ஆரம்ப நிலை ஸ்கூல் டைம்லகூட பசங்கல்லாம் கும்மலாருந்து வெளாட்டுக்காச்சும் எதுக்காச்சும் அடிச்சுப்பம்ல, அத கூட பண்ணதில்ல. அப்பிடி பண்றது அநாகரிகம்ங்கறாப்லலாம் தோணல அப்ப. அய்யிய்ய என்னதிதுன்றளவுக்குத்தான் புரிதல்லாம். வளர வளர இப்பிடி அலையாம இருக்கறது ஒரு கெத்துன்னும் தோணினதுண்டு பெசல் ஆர்மோன்கள் அலையடிக்கிற வயசுல.
இதுக்கு ஒரு அட்வர்ஸ் எஃபக்ட்டும் உண்டானது லேட்டாத்தான் புரிஞ்சது. கோ-கெட்டர்னு சொல்லுவாங்கல்ல, அப்பிடி ஒரு தன்மை இல்லாம போயிருச்சு. கெடச்சா கெடைக்குது, கெடைக்காமப் போனா பரவால்ல, அதான் விதினு எடுத்துப்போம்னு ஆகிருச்சு. இதனால அடஞ்ச இழப்புகள் ஏராளம். சண்ட செய்யனும். இருக்கறத தக்கவெக்கறதுக்காச்சும் சண்ட செஞ்சே ஆவனும். இல்லன்னா நமக்கு கெடைக்க வேண்டியது கெடைக்காமப் போறது வேற, உள்ளதையும் கூட உருவி உட்டுருவானுக சண்ட போடலனான்றதே புரிய லேட்டாகிருச்சு. அதுக்குள்ள பலது உம்பிட்டு போயிருச்சு.
ஆனா it was late by the time it came to realization. சரி ஆப் தி டாப்பிக் போகுது. ஆப் த டிவி. இத ஏன் சொல்ல ஆரமிச்சன்னா, ஓசிக்கி அடிச்சிக்கிடாததன் பழக்கத்தின் ஓர் உபப்பழக்கமுண்டு. அது கீழ கெடக்கறத எடுக்காதது. அதாவது ரோட்ல போறப்ப காசு கெடந்தா பொதுவா எடுப்பாங்கல்ல. சிலர் அத அதிர்ஷ்டம்னு கூட சொல்லுவாங்க. அதென்னமோ நமக்கு அப்பிடிக் கெடக்கற காசுகள எடுக்கற வழக்கமில்ல. அது அநாகரிகம்னு கடந்துடுறது. வேற யார்னா எடுத்துக்கடும்னு. இப்பிடி கீழ கெடந்த ஏகப்பட்ட அஞ்சு ரெண்டு ரூபாய்க்கள கடந்து போனதுண்டு. ஓசிடியும் ஒரு காரணமா இருக்கலாம். ரோட்ல கெடக்குற காச எடுத்துட்டா அடுத்து கைய எங்க, எப்ப கழுவறது?
இந்த பழக்கம் இங்க வந்தும் தொடருது. அப்பப்ப கீழ யூரோக்கள் கெடக்கும். க்ரேடில் பழக்கம் க்ரிமேஷன் வரைக்கும்ங்கறாப்ல இங்கயும் கண்டுக்காம போயிர்றது. அப்பறந்தான் ஒருநாள் ஒன்னு உதிச்சது. நம்மூர்ல பாத்தது ஒத்தருவா ரெண்ருவ்வாக்கள். கடந்து போனது ஓக்கே. இங்க ஒரு யூரோ கெடந்தா அது ஜியோட அபார உழைப்பின் காரணமா நூறு ருவ்வாய்க்குச் சமம்.
ஒன்னு ரெண்டு கெடந்தா ஓகே, இதே ஊர்ல நூர்ருவ்வா கெடந்தா ஓடிப்போய் பொறுக்க மாட்ட? போய் பொறுக்கு நாயேனு பல்புதிச்சது. அப்பதான் உணரப்பட்டது. அடடே ரெண்டு யூரோ இருந்தா மூனு நாள் டீக்கான பால வாங்கிரலாமேனு. அப்ப ஆரமிச்சது, இனி ரோட்ல கெடக்கற ஒத்தக்காச விடக்கூடாதுன்னு. அன்னிலேந்து குனிஞ்ச தல நிமுராமத்தான் நடக்கறது.
எப்பிடி இருந்த நாம இப்பிடி ஆகிட்டமே எதனாலனு ஒரு ஞாயிறு மதியத்தில் யோசிச்சப்ப புரிஞ்சது, இந்த இடைப்பட்ச காலத்தில்தான் life happenedடுன்னு.
---------
நம்மைப்போலொருவன்
Comments
Post a Comment
Pass a comment here...