பகவதிபுரம்

 நம்மூருல ரைல்வே கேட்டுகள ரயில் வரதுக்கு ஒரு முப்பது நிமிசம் முன்னாடியே மூடிருவானுகள்ல, அப்பிடி மூடினாலும், ரயிலே வந்தாலும் அடில பூந்தும் மாக்கள் க்ராஸ் பண்ணிட்டுத்தான இருப்பானுக?


இங்க ரயில் வரதுக்கு ஒரு இருவது செகண்டுலருந்து அர நிமிசம் முன்னாடிதான் கேட்ட மூடுறானுக. நாம டேசனுக்கு வர அப்பிடி ஒரு ரைல்வே கேட்ட கடந்துதான் வரணும். அப்ப பலவாட்டி ரயில் பக்கத்துல வந்துருக்கும், ஆனாலும் கேட்டு மூடிருக்காது.  அத்தாப்பெரிய ஃ லைட்டு ஜொலிக்க ரயிலோட முகப்ப பாத்தாலே நமக்கு கெதக்குனு இருக்கும். அதுவும் அது நம்மள நோக்கித்தான் வருதுங்குறப்ப இன்னும் திகிலாருக்கும். அதென்னமோ எவ்ளோ தூரத்துல அது வந்தாலும் திடீர்னு நம்ம மேல வந்து மோதிரும்னு ஒரு இர்ரேஷனல் பயம். 

யானையும் ரயிலும் ஆசை. ஆனா அது நம்மகிட்ட வரப்பவோ கடந்து போறப்பவோ ஒரு இனம்புரியாத பயம் வரும். 

நம்ம டேசன்ல இருவது நொடிக்கும் குறைவான தூரத்துல இருக்கப்பதான் மணியடிச்சு கேட்ட மூடுவானுக. எல்லாமே ஆட்டோமேடிக். 



இதுல கவனத்த ஈர்த்த ஒன்னு என்னன்னா, நம்மூர்ல ரோட்டோட ரெண்டு சைடும் அடைக்கிறாப்ல நீ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ள செக்போஸ்ட் கம்பி இருக்கும்ல. நடந்து போனும்னாக்கூட சைடுலலாம் போக முடியாது, அடியாலதான் நொழஞ்சு போவனும். ஆனா இங்க ரோட்டுல பாதி கவராகுறாப்லதான் இருக்கும். மொதல்ல இங்க வந்தப்ப இத பாத்தப்ப வினோதமா இருந்துது. சொல்லப்போனா ஆபத்தானதாவும் தோணுச்சு. சப்போஸ் கேட் மூடிருக்கப்ப அந்த கேப்ல யாரும் போய்ட்டா என்ன பண்றதுன்னு. 


அப்பறந்தான் மூளைக்கி ஒரைச்சது. அந்த கேட்டு மூடுறது ஒரு சிக்னலுக்காக. அதாவது ரயில் வருது, யாரும் கடக்காதீங்கனு ஒரு அலர்ட்டுக்காக. அதையும் மீறி ஒருத்தன் போறான்னா அந்த மூதேவி பூமிக்கி பாரமா இருக்கவே தேவ இல்லதானனு பட்டுச்சு. ஆக்ச்சுவலா ஆறறிவு மனுசங்களுக்கு இந்த கேட்டு கூட தேவை இல்ல. ஜஸ்ட் செவப்பு சிக்னல் மட்டும் இருந்தாலே போதுமே, அது இருந்தாலே கடக்கக்கூடாதுனு தான பொருள். ஆடு மாடுக்குனா தடுப்பு வக்கிறதுல அர்த்தமிருக்கு. மனுசனுக்கு வெறும் சிக்னலே போதும்ல. May be ஒரு extra cautionனுக்காகனு வேணும்னா இப்பிடி ஒரு தடுப்பு மாதிரி வெக்கலாம். அதுவே மனுசங்களுக்கு இனஃப்தானனு பட்டுச்சு. அப்பத்தான் இவங்க இப்பிடி அரக்கம்ப சைசுல ரைல்வே கேட் போட்டதே சரி, அதுதான் அறிவு வளந்த நாடு பண்ணும்னு தோணுச்சு. அப்டியே அப்ரப்ட்டா கட் பண்ணி இந்தியத்திருநாட்ட மனசு யோசிச்சது, அதாவது அங்க அது ஒன்ன்ன்னுதான் ப்ரச்சன இல்லனு மறுகேள்வி கேட்டு மைன்டே சுயசமாதானப்படுத்திகிச்சு.



---

வரலாறு முக்கியம் அமைச்சரே!








Comments