நெனச்சு நெனச்சு

 நெனச்சு நெனச்சு சிரிக்கிற மீம்/போஸ்ட் இது. ஜல்லிக்கட்டு போராட்ட சமயம். 




-=-=-=-=-=-=-=-=-

எதிர் வீட்டு ஜன்னல் நாம வெளிய போறப்பயும் வரப்பயும் எதோ ஏர்போர்ட்ல பேமிலி வரவேற்கறாப்ல பெருசா டாட்டா காட்டி ஹாய் சொல்லும். நாமளே குனிஞ்ச தல நிமிராம ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கோம். இதுல ஒவ்வொருக்கா கதவு தொறக்கறப்பயும் அது எதிர்ல இருந்துரக்கூடாதுனு நெனச்சுட்டேதான் தொறக்குறது. ஆளுயர கண்ணாடி ஜன்னல் வழியா எப்பிடியாச்சும் பாத்துரும். அதோட ஒர்க் ஸ்டேசன் அங்கதான். இது இப்பிடி இருக்க புத்தாண்டுக்கு வாழ்த்துக்கார்டு நம்ம போஸ்ட் பாக்ஸுல போட்டு உட்டுருந்துச்சு. நட்புடன் எதிர்வீட்டு ஜன்னல்னு. சரி நன்றிக்கி நவில் நன்றி செய்யனுமேன்னு நாமளும் கார்டு வாங்கிப்போட்டோம் (கார்டுக்கு மூனு யூரோ தண்டம். ஒரு கிலோ சிக்கன் வாங்கி ஒரு வாரம் தின்னுருக்கலாம். 😭😭😭). நமைப்போன்ற இண்ட்ரோவர்ட்டுகளுக்கு எத்தனை சோதனைகள் தான் வரும்? இப்பிடி இருக்க, போன வாரம் ஒரு டெலிவரி வர வேண்டி இருந்துச்சு. டெலிவரி வேன் வந்து நம்மூட்டு பெல்ல அடிச்சதும் நாம போயி தகதவ தொறக்கறதுக்குள்ள (அஞ்சு செகண்ட் இருக்கும்) எவீஜ அந்தாள்ட்டருந்து பார்சல வாங்கிருக்கு. நாம போயி எங்கயா டப்பான்னா அந்தாளு மறுக்கா அந்தப்புள்ள பெல்லடிச்சு (கதவு பெல்) பார்சல வாங்கிட்டு வந்து நம்மட்ட ஒப்படைச்சான். 

தௌ ஷல் லௌ தை நெய்பர்சுன்னு டென் கமிட்மண்ட்ஸுல காடு சொன்னிருக்கது என்னமோ உண்மதான். அதுக்குன்னு இவ்ளோ லௌவ்வுல்லாம் நமக்கு ஆவாது கேட்வின்ஸ்லெட். நீ வாழ வேண்டிய புள்ள, மனசுக்குள்ள இப்பிடி ஆஷாபாஷங்கள வளத்துக்காத புள்ள. அம்புட்டுத்தான் சொல்லுவேன். 

=-=-=-=-=-=-=-


பக்திப்பாடல். செவிக்கினிமை:





-

வசந்தமே... அருகில் வா... நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா? அது கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே லட்சம் பல லட்சம் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வருவாளா அவள் வருவாளா? என் உடைந்து போன நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன? ஏன் அவசரம் என்ன அவசரம் நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே வில் வில் வில் உன் விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடு தொடு எனவே வானவில் என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூவே எந்தன் கூந்தலில்
உன்னை நான் சூடிட என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம் பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் தீ மூட்டி போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசத்தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூறும் தூறல் வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்ல கண்ணனே வா திதித்-த-தை ஜதிக்குள் என்னோடு ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும். அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு தாளம் போடு நாங்க பாடாத தெம்மாங்கு ஏது போடு தாளம் போடு...




Comments