இடிப்பாரை...

2000க்கு முன்னாடி வரை வெளியூர்களுக்கு ரயில் பயணம் போகணும்னா சில மாசங்களுக்கு (கொறஞ்சது வாரங்களுக்கு) முன்னமே திட்டமிடணும். ரயில்வே ஸ்டேசனுக்குப் போயி பழுப்பு காயிதத்துல பயணிகள் பேர எழுதிக்குடுத்து பயணத்துக்கான முன்பதிவு டிக்கட் கைல வாங்குறதே ஒரு பெரிய குஷியாகும். ரெண்டாயிரம் வாக்குல irctc சைட் வந்துது. அந்த சைட் சுலோவா இருக்குங்குற புகார்ல இருந்து தத்கல் புக் பண்ற வெற்றி வரைக்கும் அதுக்கப்பறம் பிரபலமாச்சு. 

முந்தி டயல் அப் மாடம் இருக்கும். அந்த நெட் கனெக்சன்ல வெள்ளப்பேப்பர் கூகுல் ஓபனாகவே ஒரு நிமிசமாகும். அதுக்கப்பறம் ப்ராட்பேண்ட் வர ஆரமிச்சதும் சுலோ இண்டர்நெட் பிரச்சினைகள் கொஞ்சங்கொஞ்சமா சால்வ் ஆக ஆரமிச்சிது. 

வேக, அதி வேக, அதி உயர் வேக இணையச் சேவை ஒரு பக்கம் எல்லா இணையத் தேவைகளையும் fastஆ தீர்த்த அதே வேளை, கண்ணுக்குத் தெரியாத இன்னொரு psychological / behavioral disorderரையும் உண்டாக்கிருச்சு. இங்க behavioral disorderருங்குற சொல் சிலருக்கு அதீதமா தெரியலாம். Behavioral disorders என்னென்னனு ஒரு எட்டு பாத்தீங்கன்னா அந்த சொல் சரிதான்னு ஒத்துப்பீங்க.

2010கள்ல கணினி வரை இருந்த இணையச்சேவை நம்ம கைகளுக்கு வந்துது. மொதல்ல 2G ஸ்பீடுலயே survive ஆன நாம 3G வந்ததும் 2G வேகத்த திட்ட ஆரமிச்சோம். பலருக்கு (or அனைவருக்கும்) ஃபோன்ல E(dge)னு வந்தாலே எரிச்சலாகும். பின்னால 4G வந்து அதுக்குப் பழகியதும் 3Gயோட வேகம் ஆத்தரத்த வரவச்சுது. 5G வந்ததும் 4G வேகத்த வேகம்னு சொல்லாம slowனு சொல்ல ஆரமிச்சோம். இந்த 5G பழக்கத்துல போன் தப்பித்தவறி 3g/E போச்சுன்னா ஃபோன ஒடச்சுகூட போட்டுடுறவங்க கூட இருக்காங்க. 

இணையத்துல வேகம் சுலோவாகுறப்ப அது தர்ற கோபம் ஒரு பக்கமிருக்கட்டும். பர்சனலா நம்ம லைஃப்லயே இது பல உளவியல் பிரச்சனைகள உண்டு பண்ண ஆரமிச்சிருச்சு. நூத்துக்கணக்கான எடுத்துக்காட்டு சொல்லலாம். ஒண்ணே ஒண்ணு சொல்றேன். 

நாம ஒருத்தருக்கு மெசேஜ் போட்டுருக்கோம். அவங்க அந்த மெசேஜுக்கு ரிப்லை பண்ணாம இருக்கறதக்கூட விடுங்க, ரிப்லை பண்ணிட்டிருக்கப்ப ரொம்ப நேரமா typing… அப்டின்னு வந்தாலே நம்மள்ல எத்தன பேருக்கு anxiety / கோபம் வரும்னு யோசிங்க. “எவ்ளோ நேரமா டைப்பிங்னு வருது. சொல்றத சீக்கிரம் சொல்லேன்”ங்குற வார்த்தைய கேட்காதவங்க நிச்சயம் கம்மியாதான் இருப்பாங்க. 

இது மேலோட்டமா பாக்கறதுக்கு சாதாரண நிகழ்வா இருக்கலாம். ஆனா இந்த hyper behavior தொடர்ந்து இருந்துச்சுன்னா அது உடலுக்கும், உள்ளத்துக்கும், உறவுக்கும், பணியிடத்துலயும் எத்தன பிரச்சினைகள் உண்டு பண்ணும்னு ஏகப்பட்ட ஆராய்ச்சிப் பேப்பர்கள் கொட்டிக்கிடக்கு. தேடி வாசிங்க. 

Individualலாவும் societal அளவுலயும் இந்தப் பொறுமையின்மை, கடந்த 10 வருசங்களா அதிகரிச்சுட்டே வர்றத உணர்ந்திருக்கீங்களா? இல்ல உணர்ந்ததில்லன்னா ரொம்ப கஸ்டம். நம்மளச் சுத்தி இருக்கற எல்லாமே ஒரு அவசரத்துலயும் பதைபதைப்புலையுமே இருக்குறத இனிமேயாச்சும் நோட் பண்ணுங்க. 
எடுத்துக்காட்டுக்கு மீடியாவ சொல்லலாம். கடல் குதிரை குட்டி போட்டாப்ல வதவதன்னு அத்தன மீடியா இருக்கு. இத்தனை பெரிய கூட்டத்துல அவனுக சர்வைவ் ஆகணுங்கற கட்டாயமிருக்கு. இதுக்காக அவனுக போடுற எல்லா நியூசும் நம்மள ஒரு கொந்தளிப்போடவே இருக்கறாப்ல செய்தி டிசைன் பண்றத பாத்துருக்கீங்களா? முந்திலாம் மாசத்துக்கொருக்கா அல்லது ரெண்டு வாரத்துக்கொருக்கா BREAKINGனு நியூஸ் வரும். இப்ப நியூஸ் நிறுவனங்கள் போடுற எல்லா நியூசுமே ப்ரேக்கிங்னு போட்டேதான் வருது. இதுவே தமிழ்லன்னா ‘அதிரடி’ங்கற சொல். 

ஒரே ஒரு சாம்பில் சொல்றேன்: ரீசண்ட்டா சசிகலா அதிரடி அறிவிப்புன்னு தினத்தந்தி ஒரு வீடியோ போட்டுருந்தான். அந்தம்மா சாதாரணமா எதோ சொல்லிருக்கு போல அதுக்கு அதிரடின்னு கேப்சன் போட்டுருக்கான்னு நெனச்சு அந்த நியூச பாத்தேன், I’m not making it up, அந்த நியூஸ் லிங்க் இங்க குடுத்துருக்கேன். செக் பண்ணிக்கலாம். அந்த வீடியோஅ அவங்க ஒரு வார்த்தை பேசல. இதுல ஒரு வார்த்த பேசலன்றது கலோகியலா சொல்லல, literally she hasn’t uttered a word. இதுதான் ஊடகவியலோட லச்சணம் இன்னைக்கு. இதத்தான் அவன் அதிரடின்னு பொட்டலம் கட்டி நம்ம தலைல கட்டிருக்கான். மக்கள் இன்னைக்கு காலைல கண் விழிக்கறதே சோசியல் மீடியால இப்டியாப்பட்டவனுக சொல்ற நியூஸ்லதான். 



குளிர்காலத்துல போர்வை கொஞ்சம் விலகினா அனிச்சையா கை அதத்தேடி இழுத்துப் போத்திக்கும்ல, அதே மாதிரி காலைல கண் விழிக்க ஆரமிக்கிறப்பவே எல்லாரும் ஃபோனத்தான் தேடுறோம். எடுத்ததும் நோட்டிபிகேசன பாக்கறது அல்லது அவங்கவங்க அடிக்சனுக்கேத்தாப்ல ஒரு சோசியல் மீடியா ஆப்ல லேண்டாவறது. 

காலைல பீச் / பார்க்குகள்ல குழு குழுவா நின்னுட்டு யோகா, சிரிப்புப்பயிற்சி, பிலாட்டேன்னு பண்ணிட்டிருப்பாங்க. சோசியல் மீடியா patternன கவனிச்சிருக்கீங்களா? இங்கயும் அதேதான் நடக்கும் 

தெனமும் எந்திரிச்சதும் எதாச்சும் ஒரு கருத்து சொல்லியே ஆவணும்னு urgeஜோட ஒரு க்ரூப் சுத்தும், ஒரு கூட்டம் யாரயாச்சும் புடிச்சு கேன்சல் பண்ணிட்டிருக்கும், இன்னொரு குழு அண்டர்ரேட்டட்னு எதாச்சும் படம், பாட்ட புடிச்சு திவசம் பண்ணிட்டிருக்கும், இன்னொரு குரூப் எதயாச்சும் ஓவர் ரேட்டட்னு சொல்லி கல்லெறிஞ்சுட்டு இருக்கும். 

90கள் வரை ஒரு செய்தி வரும், எல்லாரும் கூடி இருக்கப்ப அதப்பத்தி பேசுவோம், ஒபீனியன்ஸ் ஷேராகும். கூடிக் கலையுறப்ப அது அத்தோட ஓஞ்சுரும். சோமீல ஒரு செய்தி அல்லது கருத்து வரும். ஒவ்வொருத்தர் அவங்கவங்க சோமீக்கு உள்ள வரப்ப அதப்பத்தி ஒரு கருத்த சொல்லுவாங்க. அந்தக் கருத்துக்கு மறு கருத்து வேறொருத்தர் வேறொரு டைம்ல சொல்லுவாங்க. அத மறுத்தோ ஏற்றோ கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் சிலர் வருவாங்க. இப்பிடி ஒரு ஒன்றையணா பெறாத விசயம் நாள் பூரா நம்ம நேரத்தையும் வாழ்க்கையவும் ஆக்ரமிச்சு வீணடிச்சுட்டு இருக்கும். 

வேணும்னா ஒருநாள் “சாம்பார்ல மஞ்சள் பொடி போட்டே ஆகணுமா” இப்பிடி ஒரு கேள்வி கேட்டுப்பாருங்க. உங்கள் ஆயுளின் ஒரு நாள் சோசியல் மீடியாவினால் மிக எளிதாகத் தின்னப்படும். 

நிற்க. 

ஒரு சாதாரண வெப்சைட் லோடாக எடுத்துக்கற நேரத்தப் பொறுத்துக்கமுடியாத இந்தப் பொறுமையின்மை, வாழ்க்கைல நம்மச்சுத்தி இருக்கற எல்லாத்துலையும் அதிவேகம் இருக்கணும்னு டிமாண்ட் பண்ற மனநோய்க்கு கொண்டு வந்து விட்டுருச்சு. ஒரு societal level mass மனநோய்க்கு ஆட்பட்டுருக்கு சமூகம். 

எல்லாமே உடனுக்குடனே நடக்கணும். ஜொமாட்டோ டெலிவரியில இருந்து குறிப்பா அரசியல் வரைக்கும். மக்கள் எல்லாருக்கும் எல்லாத்துலயும் அதிரடி தேவைப்படுது. சங்கர் படம் மாதிரி. இந்த நோய்க்கூறு நிலையின் உச்சமே இப்பிடி ஒரு நோய்க்கு சிக்குண்டு இருக்கோம்னு தெரியாமயே இந்த சமூகம் இருக்கறதுதான். பலர் பலமுறை ஜோக்காவும் சீரியசாவுமே சொல்லி பாத்துருப்போம், இது சோசியல் மீடியாவா இல்ல மெண்டல் ஆஸ்பத்திரியாடான்னு. சட்டைய கிழிக்காம போட்டுட்டுருக்கோம், சோத்த கையால எடுத்து வாயால சாப்புடுறோம்ங்குற ஒரே காரணத்துனால பெரும்பான்மையினர் தங்கள மெண்டல் இல்லன்னு வகைமைப் படுத்தி தப்பிச்சிட்டு இருக்காங்க. 

ஜொமாட்டோ 30 நிமிசத்துல டெலிவரி பண்ணலன்னா கொதிநிலைய அடைஞ்சு சோமீல டான்சாடுற மக்கள் அதையே அரசாங்கத்துட்டையும் அப்லை பண்றாங்க. Govt Protocolனா என்ன, ஒரு விசயத்த செய்றதுக்கு முன்ன அரசு என்னென்னலாம் யோசிக்கணும், எதன் அடிப்படையில முடிவுகள் எடுக்கப்படணும், அத எப்பிடி அறிவிக்கணும், எப்பிடி செயல்படுத்தணும்னு ஏகப்பட்ட ப்ராசஸ் இருக்கு. இதுபத்தின எந்த அறிவுக்கூறும் இல்லாது, இங்க இன்னது நடந்ததா இந்த நியூஸ் சேனல் கார்டு போட்டுருக்கான் (முந்தி சசிகலாவின் ஊமைச் செய்திக்கு அதிரடினு போட்டானே, அப்பிடியாப்பட்ட நியூஸ் சேனல்), அது எப்பிடி இப்பிடி நடக்கலாம். இதுக்கு - இப்ப - ஒடனே - முதல்வர்லருந்து - தலைமைச் செயலர் வரைக்கும் - எனக்கு - இங்க - என்முன்ன வந்து நின்னு - பதில் சொல்லியாகணும். அத நான் என்னோட 32 ஃபாலோயர்சுக்கு ஷேர் பண்ணியாகனும்னு துள்ளி குதிச்சுட்டு மக்கள் ரமணா கேப்டனாட்டம் வருதுங்க.(ரீசண்ட்டா ஒன்னு பாத்தேன், சோசல் மீடியா டீம், சீயெம்ம டேக் பண்ணுங்கன்னுட்டு - அதாவது அவங்க இன்புலுயன்சர் ஆகிட்டாங்களாம்.)

இன்னொரு வகைமை இருக்கிறார்கள். இதுவே அவர்கள் ஆட்சி இருந்துருந்தா அப்பிடி ஆகியிருக்குமா? சித்தப்பா இருந்துருந்தா மூக்கு சிந்த விட்டுருப்பாரா என்று ஒரு கூட்டம். 

இவர்களைப் பொறுத்தவரையில் எல்லாமே அதிரடியாக இருக்க வேண்டும். 130 கோடி மக்களிருக்கும் ஒரு நாட்டில் வெறும் 4 மணி நேர இடைவெளியில் மொத்த நாட்டுக்கும் லாக்டௌன் அறிவிக்கலாம். கோடிக்கணக்கான விளிம்பு நிலை மக்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் ஏப்ரல் வெய்யிலில் நடந்து செல்வதோ, செல்லும் வழியில் பிணமாய்ச் செத்து விழுவதோ குறித்து இவர்களுக்குக் கொஞ்சமும் கவலை இல்லை. அது டீமானியோ லாக்டௌனோ, அனைத்திலும் அதிரடி இருக்க வேண்டும். ஆனால் ஒரு வகையில் சங்கிகளைப் பாராட்ட வேண்டும். இந்த மெகா மெண்டலாஸ்பத்திரிக்கு இந்த வகை அரசியல் தான் மேய்க்க எளிதாக இருக்கும் என்று அதைக் கையிலெடுத்திருப்பதை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

மீடியாக்கள், அவரவர்களின் வெப்சைட் டிராஃபிக்குக்காகவும், யூடூப் ஹிட்சுக்காகவும் க்லிக் பெய்ட்டாக பெரும்பான்மை (அல்லது மொத்தமுமே) பொய்ச்செய்திகளாகவும், twisted செய்திகளாகவும், வெற்றுச் செய்திகளாகவும் போட்டபடி இருக்கின்றன. மீடியாக்களின் இந்த இழி செயல் அனுதினமும் நிரூபிக்கப்பட்டாலும் மக்கள் இந்த மீடியாவை கண்மூடித்தனமாக நம்புவதை நிறுத்தினாற்போல் தெரியவில்லை. படிப்பவற்றை ஒரே ஒரு நொடி பகுத்தறிய முற்படும் முனைப்புகூட பெரும்பான்மைக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. பார்த்ததும் பகிர வேண்டும், பகிர்ந்ததும் பொங்க வேண்டும். இப்படி ஒரு urge / addictionனுக்கு உட்பட்டே இருக்கிறது பெருங்கூட்டம். 

ஒரு அரசின் motive, vision, செயல்பாடு, transparency இவற்றை பார்க்க வேண்டும். Whether they are open to learn and improve என்பதை கூர்நோக்க வேண்டும். ஒ(வ்வொ)ரு விஷயத்தை(யும்) அரசு எவ்வாறு கையாள்கிறது, அந்தச் செயலுக்குப் பின்னுள்ள thought process என்ன, எதனால் அச்செயலை அவ்வாறு செய்கிறது, அவர்களின் motive என்ன என்பதை அறிய முற்பட வேண்டும். ஒரு அரசின் mission and objective சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களோடு இணைந்து மேலெழ வேண்டும். 

அரசைக் குறைகூறவே கூடாது என்று கூறவில்லை. எதை, எதற்கு, எப்படி, எப்போது சொல்ல வேண்டும் எனும் முறைமை இருக்கிறதல்லவா. அதை அறிய கொஞ்சமேனும் நேரத்தை செலவு செய்யலாம். மக்களுக்கு உண்மையிலேயே ஏதேனும் செய்ய நினைக்கும் அரசை, ஜெண்டில்மேனாக நடந்து கொள்ளும் அரசை, வாகாக இருக்கிறது என்று தினமும் பிடித்துக் கடித்துக் கொண்டிருந்தால் 13 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அதை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் எனும் அரசுதான் அமையும். பிறகு கூப்பில் இருக்கப்போவது யாரென்று மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். 

இறுதியாக, ஜொமாட்டோவின் operational model வேறு அரசாங்கத்தின் operating system வேறு எனும் புரிதல் வரவேண்டும். அரசின் ஒரு கையெழுத்து லட்சக்கணக்கானோர் வாழ்க்கையில் impact ஏற்படுத்தும். அதற்கு எவ்வளவு கவனம் தேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். பைக்ல போறப்ப நாயி குறுக்கால வந்தாலே எத்தன பேரு சில்ற பொறுக்கறோம், யான வந்தா என்னாகும்னு யோசிக்கணும். அப்பேர்ப்பட்டது அரசாங்கம் ஒரு சிக்னேச்சர் என்பது. 
அரசாங்கம்ங்குறது TVS-50 ஓட்றது இல்ல, நெனச்ச குறுக்கு சந்துல மனம் போன போக்குலலாம் சட்டு சட்டுனு ஒடிச்சு ஓட்ட. It is flying a Boeing 747-400 plane. 

இல்லை, எங்களுக்கு சோசியல் மீடியாவின் feedடுகள் போல உடனடியாக நொடிக்கு நொடி அதிரடி காட்டும் அரசியல் தான் வேண்டும், we want மசாலா அரசியல் என்போர், அத்தகைய அரசினால், அதன் so called அதிரடியினால் பாதிக்கப்பட்டு, நடு ரோட்டிலும் ரயில்வே டிராக்கிலும் அநாதையாய் செத்து விழுந்தார்களே migrant workers, கொரனாக்காலத்தில் கொத்துக்கொத்தாய்ச் செத்து அழுகிக் கிடந்தனவே பிணங்கள், அவற்றைப் பார்த்து நன்றாக, இப்போதே சிரித்துக்கொள்ளட்டும், இந்த அரசியலின் அடுத்து வரும் அதிரடிகளால் பாதிக்கப்பட்டு இவர்களின் வீட்டிலும் பிணங்கள் விழும், it’s just a matter of time.

Comments

  1. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்ற வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது நியாயம் தானே.

    ReplyDelete
  2. Unga twitter id link kudu bro

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂