யுகப்புருஷர்

தன் ஆசைநாயகி மிளகுப்புலால் கேட்டனளே என வாங்கி வரச்சென்ற சந்துரு, தன் குடிலுக்குத் திரும்பியபோது, அவள் அங்கே இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடையவில்லை. 


"எதையேனும் என்னிடம் வேண்டிக்கேட்பதுவும், அதை நான் வாங்கி வருமுன் மாரீசனாய்  மறைவதுவும் உனது வாடிக்கையாகிவிட்டது ஜானு" என்று அவளிடம் கூறுவதுபோல் தனக்குத் தானே கூறியபடி அவளை அக்குடிலுக்குள் ஒவ்வொரு இடமாகத் தேடினான். 


அவ்வப்போது அவளை அழைத்தும் பார்த்தான். பதில் குரல் வரவில்லை. குடிலின் வாயிலில் அவளின் பாதுகை அங்கேயேதான் இருந்தது. அப்படியென்றால் அவள் எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை எனக் கருதி மீண்டும் ஒவ்வொரு அறையாய்த் தேடினான். 


ஒருவேளை தன்னிடம் ப்ராங்க் செய்கிறாளோ? என்றெண்ணி, "போதும் நின் விளையாட்டு, சில்லிபீஃப் ஆறிவிடின் சவச்சவ என்றாகிவிடும். எங்கே மறைந்திருக்கிறாய்? வா என் அகமுடையாளே" என்றான்.


அப்போது அங்கு பதட்டத்தோடு, வியர்த்து மூச்சு வாங்கியபடி அவனின் உடன்பிறந்தான் ஓடி வந்தான். 


'அண்ணாஅண்ணா…' <பலமான மூச்சு>


'என்ன லக்கி? ஏனிந்தப் பரபரப்பு? எதற்கிந்த மூச்சிரைப்பு? முதலில் சாந்தி கொள், பின் சொல்.'


'அண்ணா ஒருவன் அண்ணியைக் கடத்திக்கொண்டு போய்விட்டான்.'


"என்ன சொல்கிறாய் லக்கி??? ஜானுவின் பாதுகை கூட இங்கேதானே இருக்கிறது? பின் எப்படி?"


"அண்ணா, கடத்திக்கொண்டு செல்பவன் பாதுகை, சார்ஜர் கேபில் எல்லாமா பார்த்துக் கொண்டிருப்பான்? பாதுகையிருக்கிறது, ஆனால் கால் மிதியடி இல்லை பாருங்கள். அதில் நின்றுகொண்டிருந்த அண்ணியை மிதியடியோடு பெயர்த்துச் சென்றுவிட்டான் ஒரு அரக்கன் 10.0"


ஒரு நொடி அத்தனையும் சூன்யமாவதுபோல் தோன்றியது சந்திரனுக்கு. தொப்பென்று தன் ஆசனத்தில் மயங்கி விழுந்தான். 


பின் தெளிவு பெற்றெழுந்ததும், "யார் தம்பி இதைச் செய்தது? எப்படி நடந்ததிது? விவரமாகக் கூறு." 


"நீங்கள் வெளியே சென்றிருந்தபோது யாசகன் போன்ற தோற்றத்தில் ஒருவன் யாத்திரை போகிறோமெனக் கொடை கேட்டு வந்திருக்கிறான். இல்லை என்று வந்தோர்க்கு இல்லை எனக் கூறாத அன்னை ஜான்சி அவர்கள், பேய்டிஎம் அளிக்கையில் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டிருக்கிறான்." 


"இதைக்கண்ட குடிற்காவலன் உங்களிடம் அறிவிக்கும் பொருட்டு தங்களை அழைத்தபோது தங்களிடமிருந்து மறுமொழி கிடைக்காததால் என்னை அழைத்தான். நான் வாயுவைப்போல் விரைந்து வந்து பார்க்குமுன் பறந்து விட்டான் அப்படுபாதகன். என் அன்னையைப் பாதுகாக்கவியலா மாபாவி ஆனேனே" எனத் தேம்பித்தேம்பி அழுது புலம்பினான். 


சந்திரன் தன் தமையனை ஆற்றுப்படுத்தி, "அல்லலுறாதே லக்கி, நாம் இருவரும் சென்று அவளை மீட்டு வருவோம். அல்லேல் அங்கேயே வீழ்ந்து மாய்வோம்" எனச் சோகமும் கோபமும் கலந்து கொப்பளிக்க வீறுகொண்டெழுந்தான். 


நீ செல் மனிதா, ஏன் நான்?” என வடிவேல அதிர்ச்சியோடு அண்ணனைப் பார்த்த லக்கிகாவலாளியிடம், “வந்தவன் எப்புறம் சென்றான்?” எனக் கர்ஜித்தான். 


தாங்கள் ஏன் திடீரென்று சிங்கக்குரலில் கர்ஜிக்கிறீர்கள் எனப் புரியவில்லையே என்ற காவலாளியிடம், எரிச்சலுற்று மனிதக்குரலில், “அடே காவலாளி, வந்தவன் எப்புறம் சென்றான்?” என்றான்.


“அத்தெய்வத்தை அவன் தூக்கிச்சென்ற திசை தெற்கு, நீவீர் இன்னும் இங்கு நிற்பதெ தற்கு?” எனக் கேட்டான் காவலாளி. 


அப்போது சந்துருவின் அலைபேசி அழுதது. வழமையாய் சிணுங்கும் பேசி, அப்போது திடீரென அழுததையடுத்து, அதுவும் அறிந்ததோ தம் அன்பிற்கினியவளின் அவலநிலையை என மனவேதனை கொண்டான்  சந்துரு.


அழைப்பை ஏற்றதும் கேட்டது அவள் குரல்.


“ சந்துரு நீர் எங்கே இருக்கிறீர்? மிகுந்த தொலைவிலிருக்கிறீரா? மிகுந்த தொலைவிலிருக்கிறீரா?” என விசும்பியபடி கேட்டாள்.


“ஜானு உன்னை எங்கே இழந்தேனோ அங்கேயேதான் நிற்கிறேன்.” 


இருவரும் விக்கித்தபடி இருந்தனர். 


சந்துருவிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கி, "அண்ணிஅண்ணிஎங்கிருக்கிறீர்கள்?" எனக் கேட்டபோது அலைபேசியின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.


மீண்டும் முயற்சித்தபோது, 




"அண்ணா, இது ஏதோ புரியாத மொழியில் பேசுகிறது" என்றான் லக்கி.


அப்போது அங்கிருந்த காவலாளியிடம், "இங்கே இந்தி தெரிந்தவர் யாரும் உளரா?" எனக்கேட்டான் சந்துரு. 


"ஏன் அண்ணா இந்தியைக் கேட்கிறீர்கள்?" 


"புரியாத மொழி என்றாயேநமக்குத்தான் #இந்திதெரியாதேடா" என்றான் சந்துரு. 


"அண்ணா இல்லை, இம்மொழி முற்றிலும் வேறாக இருக்கிறது" என்று அந்த ஒலித்துண்டை அலெக்குவாவிடம்  ஒலிக்க விட்டான். அது அம்மொழியைக் கேட்டு, சின்ஹள என்றது. 




இலங்கையைச் சேர்ந்தவனொருவனே அண்ணியாரைக் கவர்ந்து சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தபோதே அவர்களின் தலைக்குமேல் விமானம் பறந்தது. அதன்மேல் ஓர் மயில் படம் பதிந்திருந்தது.





"அவனே தான்" என ஆத்திரங்கொண்டு உரக்கக் கத்தினான் லக்கி. 


உடனே அடுத்த விமானமேறி அண்ணியை மீட்டுக்கொணருவோம் எனப் புறப்பட்டபோது, அங்கிருந்த இல்லத்திரையரங்குத் திரையில், "மைத்ரேயர்காள்" என்ற குரல் ஒலித்தது. அக்குரல் கேட்டதும் சுற்றுப்புறத்தில் ஏனைய குடில்களிலிருந்த மக்கள் அனைவரும் அலறியபடி தத்தமது குடுவைகளை எடுத்துக்கொண்டு ஔடதக் கடைகளுக்கு ஓடினர். 


திரையில் ஒலித்த குரல், “திடீரெனப் பரவி வரும் கோரணாசுரனிடமிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, மறு அறிவிப்பு வரும்வரை அத்தனை ஸ்தாபகங்களும், ஸ்தலங்களும் காலவரையின்றி அடைக்கப்படுகின்றன, மேலும், அனைத்து வகைப் போக்குவரத்தும் தடை செய்யப்படுகின்றன. மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் மைத்ரேயர்காள்” என்று மனத்திலிருப்பதை ஒலித்துவிட்டு ஒளிந்துகொண்டது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளிக்கொள்ள  கடைவீதிகளை மொய்த்தனர். 


"அண்ணா? இப்போது என்ன செய்வது? போகும் வழியும் தடைபட்டதே" என உளச்சோர்வோடு அமர்ந்தான் லக்கி. 


"என் காலெனும் வாகனம் தேய்ந்தழிந்திடினும் நம் தெய்வத்தை மீட்காமல் ஓயமாட்டே"னென உறுதிபூண்டு புறப்பட்டான்  சந்துரு. அண்ணனுக்கு உறுதுணையாய் லக்கியும் உடன் சென்றான். 


போகும் வழியிலெல்லாம் கூட்டம் கூட்டமாய் மக்கள் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தனர். 


"தமையா, இத்தனை பேருமா தங்கள் துணை தேடிப்புறப்பட்டனர்? இது எதுவும் மாஸ் அப்டக்சனா?" எனக்கேட்டான்.


தமையன் தன்மையாக, "அங்கணம் இல்லை தம்பி, இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். தற்போது வாழ்வாதாரம் பறிபோனதால் தங்கள் ஊர்களுக்குத் திரும்புகின்றனர்" எனப் பதில் பகன்றான்.


இரவுபகல் பாராது நடந்துகொண்டே இருந்தனர் இருவரும். வழி முழுமைக்கும் எதிரில் வந்தோர், யாரடா இவர்கள், ஆஜானுபாகுவாக ராஜகளையோடு இருக்கின்றனர், எல்லோருக்கும் மாற்றமாக தென் திசை நோக்கிச் செல்கின்றனர் என வினோதமாகப் பார்த்தனர்.  


சகோதரர்கள் இருவரும் இரண்டு வாரங்களுக்குப் பின், பூமியின் எல்லைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு கடல் இருந்தது. 


“கடல் தாண்டினாலொழிய அண்ணியை அடைய முடியாது லக்கிஎனும் போது அங்கு ஒரு குரல் கேட்டது. அக்குரல் கொண்ட புஷ்டியான உருவம், அவர்களிருவருக்கும் வந்தனம் செய்து, தங்களுக்கு உதவவே நான் வந்தேன் என்றதுஅப்பேருடல் முழுவதும் பொன்னிற முடி 

வழுவழுப்பாக இருந்தது.


அவரின் காக்கித் தோற்றத்தைக் கண்டதும், தானியோட்டுநர் என நினைத்து, “இல்லை, தானி எதுவும் தேவையில்லை. நாங்கள் கடல் கடக்க வேண்டும், அதற்கு எதுவும் உதவ முடியுமா?” எனக்கேட்டனர். 


“கொரணாசுரனின் காரணமாக கடல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதால் கடலைத் தாண்டித்தான் போக வேண்டும்” என்றது அவ்வுருவம். 


அதைக்கேட்டதும் லக்கி, கடல் கரையில் சற்று பின்னோக்கி நகர்ந்து, ஒரு காலால் பூமியைத் தேய்த்துத் தோண்டி, ஓடித்தாவ ஆயத்தமானான்.


"ஐயன்மீர், தாண்டுவதென்றால் அங்கணமல்ல, கடலைக் கடப்பது. ஜொய்ங்கென்று தாவுவது உங்களால் முடியாது, அதற்குச் சிறப்பான பயிற்சி வேண்டும், அது என்னால் மட்டுமே முடியும் என்றது."


"உன் பெயர் என்ன?" எனக்கேட்டான் லக்கி.


"மருதன்" என்றும் அழைக்கலாம். 


"எங்களுக்கு கடல் தாண்ட உதவ முடியுமா?" 


"அதற்குத்தான் நான் வந்துள்ளேன். உங்களைக் காப்பது என் கடமை" எனக்கூறி, அங்கிருந்து அவர்கள் செல்லும் திட்டத்தைக் கூறினான். 

 

"இங்கிருந்து செல்ல பாலம் எதுவுமில்லையா?" எனக்கேட்டான் லக்கி.


"இல்லை, கடலில் நடந்தே சென்றுவிடலாம். வெறும் இடுப்பளவிற்குத்தான் ஆழம். 

ஒருகாலத்தில் இலெமூரியாக் கண்டமாக எல்லாம் ஒன்றாய் இருந்தவைதானே. பிறகு 

கண்டங்களின் நகர்வால் நிலங்கள் பிரிந்தன." என்றான் மருதன்.




மூவரும் கடலுக்குள் சென்றனர். மருதன் சொன்னதுபோலவே இடுப்பளவுக்கான ஆழம்தான் இருந்தது.  சந்துரு தன் இடுப்பில் பாதுகாத்து வைத்திருந்த எதையோ அணைத்தபடி அலையில்லா நீரைப் பிளந்து சென்றான். 


அப்போது அங்கே பெரிய திருவோடு போன்ற தோற்றமுடைய பசும் நிறப்பரிசல்கள் மிதந்து சென்றன. 



"மருதா, இவை யாவன?" எனக்கேட்டான் லக்கு.


"ஓ இவையா, இப்பகுதி ஆழமில்லாக்கடல் பகுதி என்பதால் கப்பல்களோ பெரும்படகுகளோ சென்றுவரவியலாது, ஆகையினால் இப்பகுதி மீனவர்கள் இத்தகைய சிறு பரிசல்களைச் செய்து அதில் மீன் பிடிக்கச் செல்வர்."


"ஓ.. பச்சை நிறத்தில் இருக்கவும் ஒருவேளை இவை ஆமையின் ஓடுகளோ எனச் சந்தேகப்பட்டேன். இங்கே இருக்கும் சிலர் அதிலேறிப் பயணம் செய்வர் என்று நம்மூரில் ஒருவர்..." என லக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்தான் மருதன்.


"இப்பகுதியில் வலைவீசி மீன்பிடிக்கவியலாது. எனவே பரிசல்களில் பாசியை ஒட்டி வைத்திருப்பர். அதை உண்ண மீன்கள் வரும், அப்போது அவற்றை மிகச் சுலபமாகப் பிடித்துவிடுவர் என்றுகூறி அப்போது ஒரு பரிசலில் பாசியை உண்டுகொண்டிருந்த மீனைப்பிடித்து, இதோ இப்படி" எனக்காட்டினான் மருதன். "மீனுக்காக ஒட்டப்பட்ட பசும் பாசியை வைத்து இதை ஆமை ஓடு என்றெல்லாம் கதையளந்த ரீகம் களைந்த தாமரை" எவன் எனக்கேட்டான். 

இப்படியே அவர்கள் ஒவ்வொரு கதையாகப் பேசியபடி கடலைப் பிளந்தபடி செல்லும்போது, "சந்துரு, தங்கள் நிவேதிதையைப் பற்றிக்கூறுங்களேன்" என்றான் மருதன். 


என்ன வென்று சொல்வதப்பா

வஞ்சி யவள் பேரழகை

சொல்ல மொழி இல்லையப்பா

குஞ்சி தனின் கார்நிறத்தை எனப்பாடவே ஆரமித்தான்.


"வேந்தே!!!" என அதிர்ச்சியுற்ற மருதனிடம், "பொறுமை, பொறுமை, இது சங்க இலக்கியக்குஞ்சி, கூந்தலென்று பொருள்" என்றான். 


"இல்லை பா-விலெல்லாம் வேண்டாம், பாராவாகவே கூறுங்கள்" என்று நடுக்கடலில் நின்று வணங்கினான் மருதன். 


"என் உளத்துக்கினியாள் ஜான்சி. என் ராணி. அவள் தந்தை ஓர் அரசன், அவரின் ஒரே மகளிவள். வெயிலோ மழையோ புயலோ தீண்டாது வளர்க்கப்பட்டவள். ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், தந்தையின் சிற்-றிளவரசியவள். அப்பேர்ப்பட்டவளை இந்த அரக்கன்…" என்று கோபம் கொண்டான்  சந்துரு. 


"குளிர்ச்சி குளிர்ச்சி" என அவனை ஆற்றுப்படுத்தினான் மருதன்.


ஓரிரவு இரு பகல்கள் நடந்து கடலைக் கடந்தனர். அவ்வப்போது அங்கு தென்பட்ட மணல் திட்டுக்களில் ஓய்வெடுத்தும் கொண்டனர். சந்துருவின் மனதோ அமைதியுறாமல் தாங்கள் சேரவேண்டிய கரையின் திசையிலேயே கண்குத்தி நின்றது. 


ஆர்ப்பாட்டமில்லாக் கடலைக் கடந்து கரையைச் சேர்ந்ததும், அவர்களிருவரையும் அங்கே ஓரிடத்தில் ஒளிந்து கொள்ளச் செய்தான் மருதன். நீங்கள் யார் கண்ணிலும் பட்டுவிடாதீர்கள். மறைந்தே இருங்கள். நான் ஊருக்குள் சென்று நிலமை எவ்வாறென்று பார்த்து வருகிறேனெனக்கூறிப் புறப்பட்டுச் சென்றான். 


சற்று தூரம் சென்றதும் ஓர் காவலன் மருதனை நிறுத்தி, 


ஏய், தமுசே கௌத? கொஹெந்தலா ஆவே?” என்றான்.


பதிலுக்கு, “மம மருதன்.  மங் ரஜயாட்ட உம்பலக்கட கண்ண ஆவா. மங் தமய் ரஜுங்கே மாலு சபயும்கருஎன்றான் மருதன்.



அப்படிக்கூறியதும் மருதனை விட்டுவிட்டான் அக்காவலன். மருதன் அவ்வூரிலுள்ள சூழல்களை நோட்டம் விட்டபோது, அவ்வூரிலும் கொரணேசுவரனின் தாக்கம் துவங்கியிருந்தபடியால் கூட்டமேதுமின்றி காலியாகவே இருந்தது. ஜானு இருக்குமிடம் எதுவாக இருக்குமென ஒவ்வொரு இடமாகத் தாவியோடித் தேடினான்.

 


எங்கும் பார்த்தாலும் தேங்காயும், தேயிலையும், மலையும் மாலிஷ் ஸ்தலங்களுமாய் வளமாக இருந்த அந்நாட்டில், ஒரே ஒரு அரண்மனையிலிருந்து மட்டும் இருண்மை வீசியது. அந்தச்சூழலுக்கே பொருந்தாத ஓரிடமாக அவ்வரண்மனை திகழ்ந்தது. 




மெதுவாகப் பக்கவாட்டுச் சுவர்களிலேறி, அவ்வரண்மனைக்குள் குதித்தான் மருதன். எங்கும் இருள், எதிலும் இருள் என்று பட்டொளி வீசிப்பறந்தது இருள். 


அங்கு ஒவ்வொரு அறையாக நோட்டம் விட்டுக்கொண்டே வந்தபோது ஒரு அறையிலிருந்து வினோத விசும்பல் சத்தம் கேட்டவாறு இருந்தது. அதை ஓலமென்பதா அல்லது அலறலென்பதா என வரையறுக்கமுடியாத வகையில் அவ்வழுகை இருந்தது. அந்தச் சூழலில் இருந்த அத்தனை இருளுக்கும் ஊற்று இவ்வழுகையே என்பதைக் கண்டுகொண்டான் மருதன். 


யார் அழுவது என்று எட்டிப்பார்க்கையில், தூசும் அழுக்கும் மண்டிப்போனதால் மிகுந்த பழுப்பேறிய உடையணிந்து ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள். கடலைக் கடக்கையில்  சந்துரு கூறிய அங்க அடையாளங்கள் அனைத்தும் பொருந்திப்போகும் பெண். ஒடிசலான தேகம், நீண்ட நாடி, குறிப்பாக, தொலைந்துபோனபோது அணிந்திருந்த மஞ்சளுடை. 


ஆனாலும் இது ஜான்சிதானா என எங்கணம் உறுதிப்படுத்துவது எனக் குழம்பிய மருதன்,    சந்துரு அவளைப்பற்றிக் கூறிய தந்தையின் சிற்-றிளவரசி விடயம் நினைவுக்கு வந்தது. அவளைக் கண்டுபிடிக்க அதுதான் சரியான வழி எனக் கைக்கொண்டான். சுவற்றுக்கு வெளியே நின்று கொண்டு, 





அந்த அசரீரியைக் கேட்டதும் உடனே உள்ளே பாய்ந்து, "அன்னையே" எனக்கூறி வணங்கி நின்றான் மருதன்.


அங்கு திடீரெனத் தெரிந்த அந்த ஆஜானுபாகுவான உடலைக் கண்டதும் அதிர்ந்த 

ஜான்சி, கோபத்தோடு வெகுண்டெழுந்துயார் நீ?” என அவனிடம் சீறினாள்.


நிலமையைப் புரிந்துகொண்ட மருதன், தாம் யாரென்பதையும், தாம் வந்த நோக்கத்தையும் அறிவித்தான். 


அவனை நம்பாத ஜான்சி "யாரை ஏமாற்றப்பார்க்கிறாய்? இக்கணமே வெளியேறு" என்றாள். 


அப்போது தனது சட்டையைப் பிளந்து தனது நெஞ்சின் திரையைக் காட்டினான் மருதன். அப்போது அவன் சந்துரு, லக்கியுடன் கடல் கடந்து வந்த காணொலி தெரிந்ததுஜான்சியைப் பற்றி வருத்தத்தோடு சந்துரு கூறியவையும் அதில் இருந்தது. உடனே அகமகிழ்ந்த 

ஜான்சி கண்ணீர் வடித்தாள்


"நாங்கள் உங்களை மீட்டுச்செல்ல வந்துவிட்டோம் எனக்கூறவே நாம் இங்கு வந்தோம்" எனக்கூறி பணிந்து நின்றான்.


"என் நாயகன் வரட்டும். என் அகத்தோனின்றி இவ்விடத்தை விட்டும் நான் அகலேன்" என மறுமொழி பகன்றாள் ஜான்சி . 


"இதோ, உடன்" என்று அவ்விடத்திலிருந்து விரைந்து மறைந்தான் மருதன். 


தாங்கள் இருக்கும் இடத்தில் ஏற்கனவே சண்டை மூண்டு, பலரைக்  கொன்று குவித்திருந்தனர் அண்ணன் தம்பி இருவரும். 



அவர்களைப் பார்த்ததும் மருதன், "கண்டேன் ஜான்சியை" என்றான்.


"என்ன சொல்கிறாய் மருதா? நின் கூற்று மெய்யா?" என ஆச்சரியமும் மகிழ்வும் கலந்த குரலில் கேட்ட சந்துருவிடம், மீண்டும் தன் சட்டை பிளந்து, அவன் பதிவு செய்தவை அனைத்தையும் காணொளியாக ஓடவிட்டான். 


அதைக் கண்டதும், "உடன் மீட்போம் நாயகியை" என்று கிளம்பினர். எதிரில் வந்த காவலர்களைப் பந்தாடியபடி சென்றனர். பந்தாடப்பட்ட காவலர்கள் கட்டிடங்களுக்குள் சென்று சொருகினர்



அரண்மனைக்குள் நுழையவும், ஏகப்பட்ட தலைகளுடன் மிகப் பிரம்மாண்டமான ஓருருவம் அவர்கள் முன் வந்து நின்றது




"இது என்ன ப்ரீடென்றே தெரியவில்லையே" என்றவாறு ஆக்ரோஷமாக அதனைத் தாக்கி, அதனிடம் கைதியாயிருந்த சூரியன் முதலியவற்றை விடுவித்தான். பலத்த சண்டைக்குப்பின் அவ்வுருவத்தைச் சாய்த்துஜான்சியின் முன் நின்றான் சந்துரு. 


அவர்களின் இருவரின் பார்வையும் ஒன்றையொன்று பிணைந்திருந்ததையும், ஏக்கம் நிம்மதி கவலை சோகம் எனப் பல்வேறு உணர்வுகள் ஒன்றாய்க் கொந்தளிக்கப் பார்த்துக் கொண்டிருந்ததையும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தபடி மருதன் கண்டான். 


அத்தனை நேரம் பார்த்தவிழி பார்த்தபடி இருந்த ஜான்சி , தன் திருவாய் மலர்ந்து சந்துருவிடம்  கேட்டாள், "சில்லிபீஃப் எங்கே?"


இதைக்கேட்டதும் களுக்கென்று சிரித்த சந்துரு, அதுவரை தன் இடுப்பில் பாதுகாத்து வைத்திருந்த மிளகுப்புலாலை எடுத்து அவளிடம் தந்தான். "கடல் நீரும் உப்புத்தான், அது பட்டு இக்கறியும் கண்டம்தான், இதோ, உப்புக்கண்டமாகிவிட்டது" என்றான். 


புன்னகைத்தபடி அவனை அணைக்கச் சென்றபோது, அவள் வீட்டில் தவற விட்டுச்சென்ற வெளிர்பச்சை நிற மேலாடையை அவளிடம் அளித்து, "இதில்லாமல் இருக்கவே  மாட்டீர்களே, துப்பட்டாடை அணியுங்கள் சகி" என்றான்.


பிறகு நால்வரும் அங்கிருந்து கிளம்பினர். மீண்டும் கரையை அடைந்தபோது அப்பக்கம் கண்களில் தீக்கனல் எரிய ஆவேசத்தோடு நடந்து சென்ற பெண் ஒருத்தியைக் கண்டனர். 


"அன்னையே, யார் நீஉனக்கு என்ன நேர்ந்தது" எனக்கேட்டனர். 


யாரோ திருடிய கழலுக்காக எனது கணவனுக்கு தண்டனை அளித்துவிட்டனர். அக்கழலை இவ்வூரில் விற்றதாய்க் கேள்விப்பட்டு வந்தேன் எனக்கூறினாள்.


"எல்லா சட்டவிரோத விடயங்களும் இங்குதான் வந்துசேர்கிறது போலும். இது நாடா க்லோக் ரூமா?"  எனக்கேட்டான் மருதன்



வந்தவளின் நெற்றிப்பொட்டில் எரிந்து கொண்டிருந்த சிறுபொறியைத் தன் விரலால் தொட்டெடுத்து, தன்னைக் கடத்திய அந்நாட்டை நோக்கிச் சுண்டி விட்டாள் ஜான்சி . அச்சிறு பொறி ஊரெங்கும் பரவி அந்நாடு பற்றி எரிந்தது. அதைக்கண்ட தீப்பொறியாள், விண்ணதிர, எண்திசைகளதிர, பூமி அதிர அண்டமதிரக் கொக்கரித்தாள். 




படகுப்போக்குவரத்து துவங்கியிருந்தமையால் அதிலேறி மறுகரை வந்து சேர்ந்தனர் நால்வரும். 


அங்கே அவர்களை வணங்கி விடைபெற்றான் மருதன்.


"மருதா, நீ செய்த இவ்வுதவிக்கு கைம்மாறு செய்ய முடியாது. நீ என் சகோதரனுக்குச் சமம்" என அவனை வாழ்த்தி வழியனுப்பினர் சந்துருவும் லக்கியும். 


பிறகு அங்கிருந்து சேது மன்னரின் புகையிரத வண்டியிலேறி மதுராசநகர் நோக்கிச்சென்றனர்.


ஜான்சியின் கோலத்தைப் பார்த்த சந்துரு, "ஏனிப்படி இருக்கிறாய்? சிக்குப் பிடித்த சடையும் புழுத்த வீச்சம் வீசும் ஆடையுமாய்?" எனக்கேட்டான்.


"கடத்திக்கொண்டு போனவன் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு தந்திரம் செய்து என்னை இணங்க வைக்கத் துடித்தான். முதலில் ஆசையாகப் பேசி, பின் மயக்கும் வார்த்தை கூறி, அதற்கும் படியாததால் என்னை மிரட்டி, அவ்வளவு ஏன், நான் அவனின் ஆசைக்கு உடன்படாவிடில் உங்களையே கொலை செய்துவிடுவதாகக்கூடக் கூறினான்." 


"அவனுக்கு ஒரு சாபம் உண்டாம், யாரின் ஒப்புதலுமின்றி அவளைத் தொட்டால் அவன் தலை வெடித்துவிடுமாம். அதனால் தான் என்னை இணங்க வைக்கக் காம தாப பேத தண்ட முறைகளைக் கைக்கொண்டான்." 


"என் சிறு அசைவில் கூட அவனுக்கு சம்மதம் இருந்துவிடக் கூடாதென்றுதான் முகத்தைக் கழுவாமலும் சிகைதிருத்தாமலும் இருந்தேன். அவனிடம், இல்லை எனில் இல்லை என என்னாலான அத்தனை வகையிலும் தெரிவித்தேன்." 


"நீங்கள் எனை மீட்க வந்து,  என் கரம் பற்றிய பின்னரே மரிக்க வேண்டுமென்பதற்காக, உயிர் மட்டும் ஒட்டியிருக்கும்படி மிகச்சிறியளவு நீரை மட்டும் அருந்தி உயிர் பிடித்திருந்தேன்" என்று நடந்தவற்றை கண்களில் ஈரத்தோடு பகிர்ந்தாள் ஜான்சி. 


அவளை அணைத்துக்கொண்ட சந்துரு, "பசியில் மிகவும் வாடினாயா ஜானு?" 


அவளை இறுக அணைத்திருந்ததால், அவளின் தலை ஆம் என அசைவதை அவனால் உணர முடிந்தது.


அதனால் தான் எனைக் கண்டதும் பீஃப் எங்கே என்றாயா? ஹ்ஹாஹ்ஹா.” 


சந்துருவின் தொடையில் சுரீர் எனக்கிள்ளினாள் ஜான்சி. அத்தனை நாட்கள் வெட்டாத நகம் ஆழப்பதிந்து குருதி வந்தது. 


இப்படியே விளையாட்டும் கதைகளுமாய்ப் பேசி புகையிரதம் மதுராசநகரை அடைந்தது.


சந்துரு  ஜான்சியை மீட்டதையறிந்ததும் அந்த ஒன்றிணைந்த குடில்களில் குடியிருக்கும் ஏனையோர் அனைவரும் அங்கே குழுமியிருந்தனர். மூவரின் முகமும் உடலும் களைப்பின் உச்சத்தில் இருந்ததால் தளர்ந்தபடி அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் கூறியபடி தங்கள் குடிலை நோக்கி நடந்தனர். 


அவர்கள் குடிலுக்குள் நுழைய முற்படுமுன், 'ஒரு நிமிஷம்...' என்றவாறு ஒரு வயதான, வன்மத்தைச் சுமந்த மாமன் வந்தார். 


"உங்கள் மனையாள் கடத்தப்பட்டது, பிறகு நீங்கள் பெரும் பாடுபட்டு அவரை மீட்டது எல்லாம் நாங்கள் செயலிவழியே கண்டோம். அவர் மீண்டது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான். நீங்கள் திரும்பி வந்ததும் மகிழ்ச்சியே. இருப்பினும் நீங்கள் உங்கள் குடிலுக்குள் செல்லுமுன் ஒரு விஷயம். கடத்தப்பட்டு இத்தனை நாட்கள் ஆனதால் இங்கே வசிப்போரில் சிலர் உங்கள் மனையாளின் குற்றமிலாத் தன்மையைக் குறித்து ஐயமெழுப்பியுள்ளனர். எனக்கும் அவ்வையம் உண்டுதான். அதை உங்களிடம் தெரிவித்துவிட்டு…" என இழுத்தார். 


"தெரிவித்துவிட்டு?" எனக்கேட்பதுபோல் அவரைப் பார்த்தான் சந்துரு . 


அதிகாரத் தோரணையுள்ள ஒரு பெண் முன் வந்து, "எதற்காக நீங்கள் சுற்றி வளைக்கிறீர்கள்? நேரடியாகவே கூறுங்கள். இது பல குடும்பங்கள் இருக்கும் குடில். உங்கள் மனைவி பரிசுத்தமாகத்தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்கச் சொல்லுங்கள். அவர் அசுத்தமாக இருக்கும் நிலையில் இங்கே தொடர்ந்து தங்குவது எங்கள் அனைவரையுமே பாதிக்கும்" என்றாள். 


'இவர்கள் சொல்வதைக் கேட்காதே, வா குடிலுக்குள் செல்வோம்' எனச் சைகை செய்தவாறு குடிலுக்குள்ளே செல்ல முற்பட்டான் சந்துரு .


அப்போது கூட்டத்தில் ஒளிந்தபடி தலை மட்டும் வெளிப்பட்ட நிலையில் மற்றுமொரு வயதான மாமா, "இத்தனை பேர் கூறியும் அதைச் செவியேற்க மறுத்து மீறிச் செல்வது எங்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதுக்கொப்பு. மாமாவும் மாமியும் கூறியபடி அவளை நிரூபிக்கச் சொல், அஃதில்லாது ஒரு எட்டும் எடுத்து வைக்கக்கூடாது" என்று கூறிவிட்டு மீண்டும் கூட்டத்திற்குள் தன்னை ஒளித்துக் கொண்டார்.


அங்கே ஒரு பெண் வெளிப்பட்டு. "இது எங்கள் அனைவரின் நன்மையை நாடித்தான் கூறுகிறோம், அவர் பரிசுத்தமாக இருக்கும் பட்சத்தில் யாருக்கும், ஏன் அவளுக்குமே எந்த பாதகமும் நேரப்போவதில்லை. அப்படியில்லாத பட்சத்தில் அவதியுறப்போவது நாம் அனைவரும் தான். முன்னோர்கள் சொல்வதில் நிச்சயம் பல பொருள்கள் பொதிந்திருக்கும். ஆகவே பெரியோர் சொல்படி, இந்த ஃபர்னஸுக்குள் சென்று வந்து  தன் பரிசுத்தத்தன்மையை நிரூபித்தபின் அவள் வீட்டுக்குள் செல்லலாம்" என்றாள் கண்டிப்புடன்.


மேலும் எதையோ கூற வாயெடுத்த வேறொரு மாமாவையும் அதுவரை நான்கு விதமாய்ப் பேசிய நான்கு பேரையும் நோக்கி ஆவேசமாகத்திரும்பிய சந்துரு, 


திருட்டுத்தேவ்டியாமவனே, குஷ்டக்கூதிமவனே, ஒழுக்குப் புண்டா மவனே, வேசக் கூதிமவனே நீ சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பேன்னு நெனக்கியோ
இன்னிமேல் நீ என்ற அம்மையப் பத்தியோ குடும்பத்தப் பத்தியோ பேசுனன்னா ஒம்பொண்டாட்டிய நா வச்சிருந்தேம்பேன்லேஒன் அக்காதங்கச்சி எல்லார்கூடயும் போனாளுகனு 
சொல்லுவன்லேஓட்டர் லிஸ்ட்ல இருக்க ஒவ்வொருத்தங்கூடயும் ங்கொம்மா ஓல் 
போட்டான்னு சொல்லுவன்லேஎச்சப் புண்டைலோலி மவனே, நீ இங்க நிக்கியே,  
ஒம்மூட்ல ஓம்பொண்டாட்டி இப்ப யார்கூடயும் ஓத்துக்கிட்டிருக்காம்பியாடா 
தேவ்டியாமவனேநாய மசுரு பேசுறேன்னு ஊம்ப வண்ட்டான்வெறியாவக்குள்ள போயிரு.


ஏண்டி சில்றத்தொண்டு கொசு ஓத்தத்தேவுடியாளேநாங்க எங்க போய்ட்டு வந்தா ஒனக்கென்னடி நாறமுண்ட, ணொம்மாளறிய சொல்றி முண்டநீ யோக்கியத் தேவிடியாதான்னு
புள்ளக்குட்டிக இருக்கேனு பாக்குறேன், வார்த்த பேச வெக்காத, நானும் பாத்துட்டே 
இருக்கேன் ஊலூஊலுன்னுட்டு இருக்க களுதமுண்டஊருக்கு நல்லது நடக்கணும்னா 
ஊரூராப்போயி ஊம்புடி கண்டாரோலிமண்டி போட்டு முட்டி தேஞ்ச மூலிமுண்ட, ஒம்பட 
மொழுக்கு புண்டைக்கி சுன்னி கெடைக்கலனு என்வ்வூட்டு செவுத்துல தேச்சிட்டுப் போலாம்னு வந்தியோசண்ட போடுற சாக்குல சாட்டு போடலாம்னு பாத்தியோ
கண்டார ஓலிக்குப்பொறந்த புண்டாரஓலி, இதுக்கு மேல எதுனா பேசுனீனா சூத்துல 
சுன்னிய உட்டு காதுல எடுத்துருவேன், ஓடிரு.


டே பொட்டச்சி பின்னால பதுங்கற பொண்டுகப்பயலேஓத்தா ஓப்பனிங்லயே 
திட்ட வேணாம்னு பாத்தா என் வாய்லயும் கொஞ்சம் ஓலுன்னு கெளம்பி வரியா
கொட்டையூம்பி எடுபுடித்தாயளிநாய்க்கி நார்ற எடத்துல நாக்கு போட்ட வேசாமவனே, 
ஓம்பொண்டாட்டி புள்ளைய கூட்டிட்டு போயி டெஸ்ட்டெடுறா ங்கொப்பத்தாப்புண்ட
ஒலுக்குப்பீய சோத்துக்குத் தொட்டுத்திங்கற பாடுகுப்பத்தொட்டில ஓட்டயப்போட்டு 
குஞ்ச உடுற கூதியானேபொண்டாட்டிய போட வக்கில்லாம அவளப்போடுறவன் சுன்னி 
எந்திரிக்கக்கூடாதுன்னு மந்திரிச்சு மை வாங்கப்போன தேவ்டியாப்பயலே, ஓன் வழிக்கி 
இதுவரைக்கும் நான் வந்தனாமானங்கட்ட புண்டாமவனே அப்புறம் ஏன்ல ஏன் வழிக்கி 
வார? ஒம்மைய ஊர்மேல உட்டு சோறு வாங்கித் திங்கிற நாயேஅதுக்கு செத்தவன் 
பேண்ட பீய எடுத்து தின்றாத் தாயளி.


ஏண்டி குசுமுண்டஇந்தக்கூதியானுக நல்லது செய்யிறானுகனு நீயும் அவனுக கூட ஒத்தூத வந்தியாநீயும் பொம்பளதானஇத்தன நேரம் திட்டுனதுல எத்தன திட்டு அவனுகள திட்டுச்சுஎத்தன அவனச் சுத்தி இருக்க பொம்பளைகள பேசுச்சுனு பாத்தியாதிட்றதுக்குக் 
கூட பொம்பளைகளப் பேசறாப்லதான் இவனுக வச்சிருக்கானுகஇந்தக்கூட்டத்துக்கு நீ வக்காலத்து வாங்கிட்டு வரநா ஒன்னய ஏசுதேன்னு நெனைக்காதஇன்னக்கி நாம்பேசுறது எம்பொண்டாட்டிக்காக மட்டுமில்லஒங்க எல்லாவளுக்கும் சேத்துத்தான்இந்த 
சுன்னிவெறிக்கூதியானுக சொல்றானுகன்னு இன்னக்கி எம்பொண்டாட்டிய குண்டத்துல 
எறங்கச் சொன்னேன்னு வையிஇங்கருக்க அத்தன கூதிமவனுகளும் இனிமே அவனுக 
பொண்டாட்டிவப்பாட்டிஅக்காஅம்மெதங்கச்சிமவமச்சினிதொடுப்பு தொறவுன்னு அத்தன பொம்பளைகளையும் அதுக வெளிய போய்ட்டு வந்தாலே சந்தேகப்பட்டு வெரல 
உட்டு சோதிக்க ஆரமிச்சிருவானுகஇன்னக்கி நாஞ்சொன்னத ஏசுனதா நெனைக்காத
மந்தரமா நெனச்சுக்கஇனிமே எவனும் கற்ப நிருவி பொச்ச பொலுவின்னான்னா அவனுகள அங்கனயே தூக்கிப்போட்டு மிதி.


நாலுவிதமாய்ப் பேசிய நாலு பேரையும் வரிசைக்கிரமமாய் அருச்சித்த பின், ஜானுவை இழுத்துக்கொண்டு ஆவேசமாக வீட்டிற்குள் சென்றான் சந்துருசந்துருவால் மந்திரிக்கப்பட்டோர் வெளியே பஸ்பமாகிக் கிடந்தனர்.


அன்றிரவு ஜானுவும் சந்துருவும் அளவளாவிக்கொண்டிருந்தனர். 


தங்களுக்கு என்மேல் சந்தேகமே வரவில்லையா நாதா?”


“சந்தேகமா? என்ன உளறுகிறாய்? அவன் உன்னைக் கடத்திக்கொண்டல்லவா சென்றான். அப்டியே எதுவும் ஆகியிருந்தாலும் அது பலாத்காரம் தானே, அதற்கு நீ என்ன செய்ய முடியும்? நீ எப்படிப் பொறுப்பாவாய்?”


நீங்கள் ஒரு யுகப்புருஷர்


"புரிந்தால் சரி."


"இருப்பினும் நீங்கள் அவர்களை அப்படிப் பேசியிருக்கக்கூடாது."  


“தவறுதான். என்னை மன்னி. கடவுளே ஆயினும், சில விடயங்களை அவர்களுக்குப் புரியும் மொழியில்தானே சொல்லவேண்டியிருக்கிறது. ப்ச் அது கிடக்கிறது. பல மண்டலம் ஆகிவிட்டது நாம் கூடி. நீ வா, மிஸ்ட் யூ செக்ஸ் செய்யலாம்.”

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂