ரம்ஜான் நோம்பு

பாய்களின் ரெண்டே ரெண்டு விசேசத்தில் கொஞ்சம் லெந்த்தியானது ரம்ஜான் நோம்பு. நோன்புதான் சரியான பதமென்றாலும் சொல்வழக்கில் மருவி நோம்பானது. நோம்பின் குதூகலம் ஆரம்பிப்பது நோம்பு எப்போது ஆரம்பிப்பது எனும் குழப்பம் ஆரம்பிப்பதில்.

முதல் பிறையைப்பார்த்து நோன்பு மாதத்தை(ரம்ஜான்) துவங்க & முடிக்க வேண்டும். எலிகாப்டர் வசதி இல்லாததாலோ என்னவோ அரசியல்வாதிகள் போல ஒரே நாளில் எல்லா ஊருக்கும் விசிட் அடிக்க முடியாமல் சில ஊர்களில் பிறை ஒரு நாள் முந்திப் பிந்தி தெரியும். அதை வைத்து அவ்வூர்களில் நோன்பு துவக்கப்படும். Technology has improved so much you know என்று சொல்லப்படும் காலத்தில் இன்னும் இந்தக்குளறுபடிகள் ஏன் நீடிக்கின்றன என்பது நிலாவுக்கே வெளிச்சம்.

காலைலருந்து தண்ணி கூட குடிக்காம எப்டி பாஸ் இருக்கீங்க என பலர் கேட்பதுண்டு. முதல் நாள் மட்டும் லேசாகத்தலை வலிக்கும். ரெண்டாம் நாளிலிருந்து கங்காரு குதியாக கடைசி நாள் வரை ஹ்ஹுய்க் என நோன்பு ஜம்ப்பிவிடும். இந்த நாட்களில் ஒன்றுமே தெரியாது.

ஒரு சிலர் கெத்தாக, "எச்சில் கூட விழுங்கமாட்டோம் தெரிமா" என சொல்வதுண்டு. எச்சில் விழுங்கவெல்லாம் அனுமதியுண்டு. என்ன, தாகத்தை நிவர்த்தி செய்யுமளவு அரை லிட்டர் எச்சியை வாயில் ஃபிக்சட் டெபாசிட் செய்து வட்டியோடு ”க்களுக்”கென முழுங்கி அல்லாவை டபாய்த்தல் சர்வ நிச்சயமாகத் தடுக்கப்பட்டது.

”கால்லருந்து பட்னியா இருக்கறதுதான் நோம்பா அத்தம்மா?” (அத்தாவின்(அப்பா) அம்மா) என சிறுவயதில் நான் கேட்டதற்கு, ”நாய் கூடத்தேன் சோறு கெடைக்கலன்னா  பட்னி கெடக்கும். அது நோம்பாய்ருமாடா?” என பதில் கேள்வி கேட்டு என் அறிவுக்கண்ணைப்படாரென்று திறந்து வைத்தார் பாட்டி. ”சூரியன் உதிக்கிறதுலருந்து மறையிர வரைக்கும் சோறு தண்ணி மட்டுமில்ல, பொரணி பேசுறது, கெட்டவிசயம் செய்றதுன்னு எல்லாத்தையும்அல்லாவுக்காக கட்டுப்படுத்திட்டு இருக்கணும்டா, அதான் உண்மையான நோம்பு” என்றவரிடம், ”அப்ப நோம்பு தொறந்ததும் எல்லா கெட்ட வேலையும் பண்ணிக்கலாமா?” எனக்கேட்டதற்கு அவரின் பதில் unparliamentary words என்பதால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி ரம்ஜான் மாதம் முழுவதும் ஷைத்தான்களுக்கு விலங்கு பூட்டப்படுகிறது. அதனால் மக்கள் தீமை செய்யாமல் நிறைய நன்மைகளைச் செய்யமுடியும் என நம்பப்படுகிறது. ஆனால் இந்த மாதத்திலும் சிலர் செய்யும் சிலாவலி வேலைகளை ஏட்டில் எழுத முடியாது. இது குறித்து அத்தம்மாவிடம் கேட்டதற்கு, “என்ன செய்றது, எப்புடிக்கட்டிப்போட்டாலும் ஒன்னு ரெண்டு சைத்தானுங்க சங்கிலிய அத்துகிட்டு தப்புச்சு வந்துடுதுங்க” என்றார்.

இதே மாதத்தில்தான் ஏழைவரி எனப்படும் ஜகாத்தும் கொடுக்கப்படும். (வருடத்தின் எந்த மாதத்திலும் கொடுக்கலாம் என்றாலும் இந்த மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கு அதிக நன்மை என்பதால் இந்த டாக்டிஸ். பாய்களா கொக்கா?). ஏழைகள் முன்னேற நம் செல்வத்தில் ஒரு பங்கை அவர்களுக்கு கொடுத்து அவர்களை முன்னேற்ற செய்யப்பட்ட ஏற்பாடு இது. பலர், தானம் செய்யும் பணத்தை 1,2,5,10 ரூபாய்களாக மாற்றி ஏழை & யாசகர்களுக்குக்கொடுத்து நன்மைகளை மல்ட்டிப்ளை செய்துகொள்வர். சின்ன கல்லு. ஆனாலு நிறைய கல்லு. அதனாலு பெத்த லாபம்லு. அப்டின்னு இவங்க அஷம்ப்ஷன்லு. வருடாவருடம் இவர்கள் கொடுக்கும் பணத்தின் அளவும் ஏழைகளின் எண்ணிக்கையும் கூடியபடியேதான் இருக்கிறது.

15 நாள் இல்லாத நாசாவைக்கூட பார்க்க முடியும். நோம்புக்கஞ்சி இல்லாத ரம்ஜானை...ம்ம்ஹூம்... புள்ளயார் சதுர்த்தி கொழுக்கட்டை போல், கிறிஸ்மஸ் கேக் போல் மாணிக் பாஷாவையும்  மார்க் அந்தோணியையும் ஒட்ட வைப்பதில் நோம்புக்கஞ்சியின் பங்கு பெரிது. ஹைதையின் ஹலீம் போல ஒவ்வொரு இடத்திலும் லோக்கல் நோன்பு உணவு ஐட்டம் இருந்தாலும் கஞ்சியில் இருக்கும் ஈரம் அவற்றுள் இருப்பதாய்த்தெரியவில்லை. (காக்கைக்கும் தன் கஞ்சி பொன் கஞ்சி).

ரம்ஜான் பண்டிகையன்று கிடைக்கும் புதுத்துணி, கறிச்சோறு,பெரியோர் தரும் பெருநாள் காசு (முப்பது ரூபாய தாண்டினா அவன் அன்னைக்கு மினி மல்லைய்யா) என சிறு வயதில் அது கொடுத்த கிளுகிளுப்பே தனிதான்.

பெருநாள் வாழ்த்துகளை ஒருவரை ஒருவர் அணைத்து பரிமாறிக்கொள்வதை முசாபா என்பர். பெருநாள் தொழுகை தொழுது முடித்த வேகத்தில் அத்தை மகள்கள் (இருந்தது ஒருத்திதான், படிப்பவர்கள் வயிறெரிய எஸ்ட்டா பிட்டு இந்த ”மகள்கள்” பன்மை) வீட்டுக்குப் போய் 3 நொடியில் முடிந்துவிடும் கட்டிப்பிடி வாழ்த்தை அ.ம க்கு மட்டும் 3.75 நொடிக்கு நீட்டித்து ஒரு வருச ஆசையை தீர்த்துக்கொண்டதெல்லாம் அவர்கள் எட்டாம் வகுப்பு போனதும் கட்டானது :'(

அது ஏம்பாஸ் எட்டாங்ளாஸோட எட்டாமப்போச்சுன்னு க்ராஸ் கேள்வி கேட்பவர்களுக்கு செய்வினை வைக்கப்படும்.

என் அன்புத்தாத்தா (அப்பா என்று அழைப்போம்), பெருநாளன்று பேரன் பேத்திகளை ஒன்றாய்ப்பார்த்ததும் உணர்வுக்கொந்தளிப்பில் ”அடுத்த ரம்ஜானுக்கு உங்களையெல்லாம் பாக்க நான் உயிரோடிருக்க மாட்டேன்” எனக்கூறி கண்ணீர் வடிப்பார், ஒவ்வொரு வருடமும்.

ரம்ஜான் நோன்பு முடிந்ததும் கட்டவிழ்த்து விடப்பட்ட ஷைத்தான்கள் நேரே வருவது நம் வாய்தானே, ஒரு முறை அவர் எதார்த்தமாக இதே டயலாகை சேம் மாடுலேசனில் சொல்ல, ”போங்கப்பா, இதத்தான் வருசாவருசம் சொல்றீங்க ஆனா செயல்ல இல்லியே” என நான் பதார்த்தமாக சொல்ல குடும்பமே கூடி என்னைக் கும்மியடித்தது எஸ்டீடி எனும் வரலாறு. (BTW, அந்தத்தாத்தா இன்னும் இருக்கிறார். ;-) கிகிகி)

நோன்பு துவக்கம் போலவே ரம்ஜான் பண்டிகையும் என்று கொண்டாடவேண்டுமென இன்னும் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டுதான் உள்ளன. ”கோடிக்கணக்குல கடவுள வெச்சிருக்கவன்லாம் நிம்மதியா பண்டிக கொண்டாடுறான். ஒத்த கடவுள வெச்சுகிட்டு இவங்க படுத்துற பாடு இருக்கே அய்யுய்யுய்யூ” என யாரும் பிற்கால சினிமாவில் பஞ்ச்சு வைக்கக்கூடும். அவர்களுக்கெதிராய் 276 சங்கங்கள் கொடி பிடிக்கக்கூடும். அந்தப்படம் படு மொக்கையாயிருந்தாலும் ஆந்திரா, சீமாந்திரா, ராமாந்திரா என ஆல் ஏரியாசிலும் பிச்சுக்கிட்டு ஓடி ஹிட்டடிக்கும்.

இப்ப எதுக்கு திடீர்னு ரம்ஜான் புராணம் பாடுற? எதும் மதமாற்றம் செய்றியான்னு கேட்போருக்கு... அப்டிலாம் இல்ல... இன்னும் ரெண்டொரு நாள்ல ரம்ஜான் நோம்பு தொடங்குது... அதான் ஒரு டீசர்...

Comments

  1. இந்த வருஷ ரம்ஜான உங்க ஊட்ல கொண்டாடோனும்ன்னு ஆசை...

    ReplyDelete
    Replies
    1. sure. நேத்து சொன்ன ப்ளானை எக்ஸிக்யூட் செஞ்சுடுவம்

      Delete
  2. நீங்க தீபாவளி கொண்டாடியதையே நான் இன்னும் சிரிச்சு முடிக்கல .அதுக்குள்ள ரம்ஜானா !வழக்கம் போல நகைச்சுவை விருந்து :)சிரிச்சிட்டே இருக்கேன் :) குறிப்பா "பிறை தேதி "குழப்பமும் "கோடிக்கணக்குல கடவுள் வெச்சிருக்கிறவன் எல்லா ....." சூப்பரோ சூப்பர்:):)
    shaan_64
    shaanthi surendiran

    ReplyDelete
  3. உங்க பாட்டி சொன்ன அட்வைஸ் நெத்தியடி :)
    shaan_64
    shaanthi surendiran

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா. அவங்களோட பஞ்ச்செல்லாம் அபரிமிதமா இருக்கும். போற போக்குல நாவல் அளவுக்கான மேட்டர ஒரு வரில சொல்லிட்டு அடுத்த மேட்டருக்கு போய்டுவாங்க. எங்கூரு பாட்டிங்க பேசுறத கேக்குறது அலாதி இன்பம்

      Delete
  4. Replies
    1. இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் படித்து கமெண்டியதற்கு நன்றி சென்னியாரே!

      Delete
  5. nice :-) நோம்பைப் பற்றிய நல்ல தொகுப்பு. கொஞ்சம் நகைச்சுவைல அடக்கி வாசிச்சிருக்கீங்க ஆனா நல்லதுக்கு தான். நோன்புப் பிடித்து ரம்ஜானை இனிதே கொண்டாட வாழ்த்துகள் :-)

    நிற்க: வரும் மாதம் ட்விட் எல்லாம் சைவமாக இருக்கும், யார் காலையும் வார மாட்டீர்கள் என்று அறிந்து சந்தில் பலர் நிம்மதி பெருமூச்சு விடுவது இங்குக் கேட்கிறது.

    amas32

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா. முக்கிமுக்கிப்பாத்தேன் நகைச்சுவை எதுவும் வரல. வலிந்து திணிக்கவேணாம்னு விசயத்த மட்டும் எழுதிட்டேன்.

      நின்னுட்டேன்: என் டுவிட் எப்பவுமே சைவம்தான். நீங்க இப்டி சொன்னா வக்கிரம்ப்ரோ கோஷ்டியச்சேந்தவன்னு நெனச்சுக்கப்போறாங்க. நான் எங்க கால வாருறேன்? நீங்க எல்லாரும்தான் என்னைய ஏரியல் கூட போடாம தொவைக்குறீங்க.

      Delete
  6. ஷோக்கா ஜோக்கா எழுதுறீங்க! பிரியாணி ஏமாத்திறக் கூடாது. அது சரி; நோண்பா , நோன்பா நண்பா?

    ReplyDelete
    Replies
    1. :-) நன்றி சார். பிரியாணிதானே..நிச்சயமா போட்டுடுவம். நோன்புன்னுதான் படிச்சிருக்கேன்.

      Delete
  7. ஹாஹா.. அருமை:-)))

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. சைன்ஸ் கதை எழுதறதில்லயா இப்போ?

      Delete
  8. :):)..Well written Muthalib.Liked it very much :):):)

    ReplyDelete
  9. பாய்,

    பின்றீருங்காணும்.

    அங்கங்கே வாழைப்பழ ஊசியாய் இறங்கும் சமுதாய எள்ளல்கள்.

    சமகால அரசியல், சினிமா காமெடிகளை நோக்கி, ஒரு சிறு கேலிப்புன்னகை.

    தொடரட்டும் இந்த நகைச்சுவை இழையோடும் வாழ்வியல் அனுபவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஙே!!! ”எள்ளல், சமகால அரசியல், வாழ்வியல்” - என்னங்க இது? இது மாதிரி வார்த்தைலாம் அலர்ஜி.

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  10. எவர் மனமும் நோகாத உங்கள் எள்ளல் ,சூப்பர் பாய்

    ReplyDelete
  11. அருமை. இப்தார் பார்டியில் இருந்து காலை உணவு (சுஹூர்) வரை பரிமாறப்படும் வகைகளை பற்றி ஒரு பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா கடவுள்!

      தங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

      Delete
  12. Advance Ramadan wishes. ...

    ReplyDelete
  13. வாவ்வ்வ்... என்ன அருமையான ஃப்லோ. தூள் கிளப்புறீங்க சகோ :-))

    ReplyDelete
    Replies
    1. நன்றி பட்டிக்காரே!

      Delete
  14. உங்களது ஏனைய பதிவுகள் போலவே அருமையான எழுத்துநடை.
    சிறந்த வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி...
    Dr.S.Pakeerathan @karadi_kathai

    ReplyDelete
  15. ரோப்பாலிக்கா ஆஃப் தி ரம்ஜான்.

    ReplyDelete
    Replies
    1. :-) தாங்ஸ் ஏலகைவரே!

      Delete
  16. செய்வினைகளில் நம்பிக்கை இல்லாததாலும் செய்யும் வினைகளில் நம்பிக்கை உள்ளதாலும் சொல்கிறேன்... அன்று நீரு ஒரு டேபிள் அல்லது சேர் போட்டு முயற்சித்திருந்தால் எல்லாமும் "வாய் முன்" இல்லையானாலும் "கண்முன்னேயாவது" எட்டியிருக்கும்...!!
    இன்னும் "வளர" வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைய ஒத்துக்கங்க... நீங்க ..டொக் டொக்.. டேபிள் மேட் டிஸ்ட்ரிப்யூஷன் எடுத்திருக்கீங்க தான? ஐ கேச் யுவர் குர்யீட்ஸ்.

      Delete
  17. அட்டகாசம் போ.

    அத்தம்மாவோட அன்பார்லிமெண்டரி பதில். செய்வினை வைக்கிறதுன்னு ஒரு அட்டகாசம்.

    நாளைல இருந்து ரமலான் நோம்பு தொடங்குது. இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இறையருள் துணையிருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிண்ணே! நம் அனைவருக்கும் இறையருள் கிடைக்க, வல்ல இறைவன் கருணை செய்யட்டும்.

      Delete
  18. ரம்ஜான் நோம்பு..
    http://muthaliblogs.blogspot.com/2014/06/ramzan-fasting.html

    வாசித்து முடித்தப் பின்னும் நினைவில் வந்து வந்து போகும் எழுத்து ஆளுமை . தொடர்ந்து எழுதுங்க பாஸ். இதை ஃபேஸ்புக்கிலும் எல்லோரும் படிக்கணும். நீங்கள் உங்கள் பகுதியில் போடுங்கள் நான் ஷேர் பண்ணிக்கிறேன். அல்லது எனக்கு அனுமதி தாங்க பாஸ். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. Thanks Abdul Kader ji.

      Feel free to share. Why asking for permissions?

      Delete
  19. எந்த ஊரு பாஸ் உங்களுக்கு? இவ்ளோ அழகா எழுதுறீங்க..

    - பிராங்க்ளின் அஜய்

    ReplyDelete
    Replies
    1. அழகா எழுதுறதுக்கு ஊரு காரணமில்லீங்க. Google அவ்ளோ அழகான fonts தருது. என் கையெழுத்து ரொம்ப மோசமாருக்கும். சொந்த ஊரு வீரசோழன்.

      Delete
  20. பிரமிச்சு நிக்கிறேன்னு சொல்லுறதுக்கான அர்த்தத்தை உணர்ந்தேன்.

    What a flow :)))

    அட்டகாசம்!

    ReplyDelete
  21. Asusual pineteenga... Semma.. :) :) :) antha thatha matteru semma :) :) :D:D:D LOL

    ReplyDelete
  22. HA ha
    muthalib Attakasam .,
    neenga eppovum ippadi thana ., ila ippadi than eppavum ah

    ReplyDelete
  23. வழக்கம் போல பட்டாசு.
    அட்டகாசமான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂