நானாக நானில்லை

மகனாய் 
அண்ணனாய் 
ஒன்று விட்ட தம்பியாய் 
தாய் மாமனாய் 
பேரனாய்
மச்சானாய் 
சித்தப்பனாய் 
நண்பனாய் 
தூரத்து உறவினனாய் 
யாருக்கும் தெரியா வழிப்போக்கனாய் 
இருந்து அலுத்துப்போய்
முதல் முறை
நான் நானாய் 
இருக்க எண்ணி 
எழ எத்தனித்தேன் 
படுக்க வைத்தான்
வெட்டியான்,
முட்டிகளைத்தட்டி.
உணருமா இதை?
எரியூட்டப்பட்ட என் 
சிதை?

Comments

  1. nice lines.. "உணருமா இதை?
    எரியூட்டப்பட்ட என்
    சிதை?"

    ReplyDelete
  2. இரைவில ஆரம்பிச்சு நானாக நானில்லை வரை எல்லா பிளாக்கும் படிச்சாச்சு.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க :-)

      Delete
  3. உங்கள் இறைவி, சு கல்யாணம் பற்றிய பதிவுகளை முன்னே படித்தேன். இன்னைக்கு ரம்யா முரளி முக புத்தகத்தில் பகிர்ந்த ப்ளாக் பாத்துட்டு தான் உங்களுக்கு அழைப்பு கொடுத்தேன். உடனே ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. உங்க ப்ளாக் முதலில் இருந்து படிக்க ஆரம்பிக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂