காதல்...

(நேரம் பகல் சுமார் 11:30ish) 


"எங்கப்பா எது சொன்னாலும் அத நம்பாத, சீரியசா எடுத்துக்காத." 


"எத்தனவாட்டிடா அதையே சொல்லுவ? இன்னும் எத்தன ஃப்லோர் ஏறனும்?"


"நாலாவது மாடின்னு சொன்னன்ல." 


அந்த 7G ரெயின்போ காலனித்தோற்ற கட்டடங்களில் ஒன்றில் படியேறினர் இருவரும். 


நான்காம் மாடியில் ஒரு அரக்கு நிறக்கதவுக்கு முன் போடப்பட்டிருக்கும் கருப்பு இரும்புக் கேட்டைத் திறந்து கதவைத் தட்டினான் சரவணன். 


"இரு நாம்போறேன்" என உள்ளிருந்து அவனின் அப்பாவின் குரல் கேட்டது. (Imagine படவா கோபி)


ஒரு கதவைத் திறந்தார் கோபி. வெளியே மகன் சரவணன் நின்றுகொண்டிருந்தான். கோபியின் கையில் காய் நறுக்கிக்கொண்டிருந்த கத்தி. 

'என்ன?' எனக்கேட்பதைப்போல் தலையை (மற்றும் புருவத்தை) மட்டும் அசைத்தார். 

இவர் வழியை மறித்துக்கொண்டிருக்க, "ம்மா" என சற்றே கடுப்பில் வெளியிலிருந்தே சத்தமாக அழைத்தான் சரவணன்.


"ஏ வசு, எதோ பிச்சக்காரன் வந்துருக்கான் பாரு. எதாச்சு பழசு இருந்தா போடு" எனக்கூறியபடி அங்கிருந்து நகர்கிறார்.


ஒரு பழுப்பு நிற ரௌண்ட் நெக் பனியன், நீல நிற லுங்கி சகிதம் நடு ஹாலில் அமர்ந்து மீதமுள்ள காய்களை நறுக்கத் தொடர, டிவியில் எதுவோ ஓடிக்கொண்டிருக்க, சரவணன் உள்ளே நுழைகிறான். அவனைத் தொடர்ந்து (செருப்பை வெளியே கழட்டிவிட்டு) நுழைகிறாள் அகிலா. 

அவளிடம் "வ்வா" என்கிறான் சரவணன்.


அவன் வா என்றதும், காய் நறுக்கிக்கொண்டே யாரென நிமிர்ந்து பார்க்கிறார் கோபி. அகிலாவைப் பார்த்ததும், "உள்ள வாம்மா, உக்காரு" எனக்கூறி, "ஏய் வசூ இங்க பாரு ஒம்பையன் இந்த மாசமும் ஒரு பொண்ண கூட்டியாந்துருக்கான்" எனக்கூறி காய் வெட்டலைத் தொடர்கிறார். 

அதைக்கேட்டதும் அதிர்ச்சியும் கடுங்கோபமுமாய் சரவணனை முறைக்கிறாள் அகிலா. 'நாந்தான் சொன்னேன்ல, அவர் சொல்றது எதையும் நம்பாதன்னு' என்பதைப்போல் ரியாக்சன் கொடுக்கிறான் சரவணன்.

கிச்சனில் குக்கர் விசில் கேட்கிறது. உள்ளிருந்து வெளியே வருகிறாள் வசுமதி (கீதா கைலாசம்). அப்பாவின் குரல் கேட்டதும் தர்சினியும் (சரவணன் தங்கை) 'ஹலோ' என்றவாறு ரூமிலிருந்து வருகிறாள்.


"வாம்மா, உக்காரு, டீ சாப்டுறியா" எனக்கேட்கிறாள் வசு. 


"இல்ல பரவால்ல ஆண்ட்டி"


"சாப்டும்மா" எனக்கூறி, "ஒங்களுக்கு...?" என கோபியிடம் வசு கேட்க, "ஆஃப் டம்ளர் போதும்" என்கிறார் கோபி. 


டீ போட அவள் உள்ளே செல்ல, "உக்காருங்கக்கா, நின்னுட்டே இருக்கீங்களே" என்கிறாள் தர்சினி. 


பல்வேறு ரத்தச்சிவப்பில் பூப்போடப்பட்ட அந்த கம்பி சோபாவில் தயக்கத்தோடு அகிலா அமர, அவளோடு பக்கத்திலமர்ந்து, "அவன் க்லாஸ்மேட்டா நீங்க?" எனக்கேட்கிறாள் தர்சினி.


"காலேஜ் மேட்" என அகிலா கூற, "ஓ ஸ்கூல்மேட் கூட்டிட்டு வரதுலருந்து இப்ப காலேஜா, நல்ல முன்னேற்றம்" என தலை நிமிராது நறுக்குவதைத் தொடர்ந்தபடி கோபி சொல்ல, "ப்பா..." என செல்லக்கண்டிப்பும் கெஞ்சலுமாக அவரை நிறுத்தக் கேட்கிறாள் தர்சினி.


"நாட்டு நடப்ப சொன்னேம்மா. பொரிக்கி பசங்க பாப்புலேசன் ஜாஸ்தி ஆகிருச்சு அதனால சொன்னேன்" என்றபடி நறுக்கியதை எடுத்து எழுந்து கிச்சனுக்குள் சென்றார்.


'ஏன் இப்பிடி பண்றீங்க?' என்பதுபோல அங்கே அவருக்கு எதோ மெதுவசவு விழுந்தது. குக்கரொலியில் அவ்வளவாகக் கேட்கவில்லை.


"அவர் அப்டிதாங்க்கா சும்மா கலாய்ப்பாரு. சீரியசா எடுத்துக்காதீங்க. ரொம்ப நல்லவரு." என்றாள் தர்சினி.


"ஆமா. அதயேதான் உங்க அண்ணனும் சொன்னார்."


"ஆனா எங்கண்ணன் நல்லவன் இல்ல" எனக்கூறிச் சிரித்தாள் தர்சினி. 


"காண்டாக்காம போயிடு சிக்குனா செத்துடுவ" என அவளிடம் பாய்ந்தான் சரவணன். 


ஹாலுக்கு டீயோடு வந்த கோபி, ஒரு டம்ளரை அகிலாவிடம் "சூடா இருக்குமா, பாத்து" என்றபடி நீட்டினார்.  


"Thanks uncle" என்றபடி அதை வாங்கிக்கொண்டு ஊதி ஊதிக்குடித்தாள். 


(நக்கலாக) "சாரு ஓங் க்ளாசாமா?"


"இல்ல uncle, ஒரே department. அவர் ஃபைனல் இயர். நான் third year."


"Third இயரா? ஏம்மா போன செமஸ்டர் அரியருக்கு உங்கிட்ட டூசன் படிக்கிறானா?" 


ரூமுக்குள் சென்றிருந்த சரவணன், அங்கிருந்தே சத்தமாக "ம்மா அவ்ளதான் சொல்ட்டேன்" எனக் கத்த, "பாரு, பொறுமையே இல்ல. எதுக்கெடுத்தாலும் இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசறது. நம்மகிட்ட பேசற மாதிரி வெளிய பேசுவாரா சாரு? பல்ல பேத்துட மாட்டானுக? இவனையும் நம்பி நாளைக்கி ஒரு பொண்ணு வரப்போகுது பாது, அத நெனச்சுதாம்மா பாவமா இருக்கு" என அகிலாவிடம் கூறினார் கோபி.


நெளிந்தபடி அகிலா அமர்ந்திருக்க, "அது வரப்போற பொண்ணுக்குதானம்மா கஷ்டம். நீ டீ சாப்டும்மா, ஆறிடப்போகுது" என கோபி கூறினார்.


"ஏங்க..." என வசு கிச்சனிலிருந்து அதட்டலோடு கூப்பிட, "எங்கிட்ட பேசலன்னா அவங்கம்மாக்கு லோ பீபி வந்துடும், இரு கேட்டு வரேன்" என அங்கிருந்து நகர்கிறார்.


தர்சினியும் அகிலாவும் பேச்சைத் தொடர்ந்தனர்.


கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்து, "நான் வெஜ் சாப்டுவியாம்மா?" என அகிலாவிடம் அம்மா கேட்க, "இல்ல பரவால்ல ஆண்ட்டி" என அகிலா சொல்ல, "அட பெருசாலாம் யோசிக்காத, ஆம்லேட் தான் போடப்போறா. அததான் நான்வெஜ்ஜுன்னு பில்டப் பண்றா" என கோபி கூற, சிரித்து விடுகிறாள் அகிலா. 

"சாப்டுவேன் ஆண்ட்டி. ஆனா எதுக்கு கஷ்டம்" எனக்கூற, "இருக்கட்டும் இருமா தோ சாப்பாடு ரெடியாகிடுச்சு" என்கிறாள் வசு.


எல்லோரும் தரையில் சாப்பிட அமர்கிறார்கள். 


"எம்பையன் சாப்டுறமாரி கூச்சப்படாம சாப்டும்மா." - கோபி


"ப்ச் ஏங்க..." என்கிறாள் வசு.


"கலகலப்பா பேசக்கூட முடீல இந்த வீட்ல" என அங்கலாய்க்கிறார். 


சற்று நேரம் அனைவரும் அமைதியாக உண்ண, வாட்சைப் பார்க்கிறார் கோபி. 


"என்னாச்சு?" என வசு கேட்க. "இல்ல இன்னேரம் ஆரமிச்சிருக்கணுமே" என கோபி சொல்ல, "என்னது?" என வசு கேட்க, "ஆரமிக்கும் பாரு" என்கிறார்.


அகிலா திருட்டு முழியோடு மெதுமெதுவாக சோற்றை உள்ளே தள்ளினாள்.


"ஃப்ரை எடுத்துக்கோங்கக்கா" என அவளுக்கு எடுத்து வைத்தாள் தர்சினி.


"ஒங்ககிட்ட ஒன்னு சொல்லணும்" என உண்டுகொண்டே பேச்சைத் துவக்கினான் சரவணன்.


"என்னப்பா ஆச்சு? சாப்பாடுல உப்பு ஜாஸ்தி இருக்கா?" என கோபி மறுமொழிய, "ப்பா, சீரிசா பேசிட்டிருக்கேன். கொஞ்சம் கேக்கறீங்களா?" என சரவணன் கடுப்பாக,


"அந்த அரியர்ச க்லியர் பண்ணுன்னு எத்தினிவாட்டி நா சீரிசா சொல்லிருக்கேன். ஒருதடவயாச்சும் கேட்ருக்கியாடா நீ?"


"அதுலாம் ஒரே அட்டம்ப்ட்ல பண்ணுவோம்."


"இப்டிதான் நீ ஒவ்வொரு அட்டம்ப்ட்லயும் சொல்ற. எல்லா செமஸ்டர்லயும் அந்த அரியர் கிரீடம் பெருசாதான் ஆவுது. கொறஞ்சபாடில்ல."


"இப்ப நா அதப்பத்தி பேச வரல." 


"அதான, அதலாம் பேசவந்தா நீதான் உருப்பட்ருவியே."


"ஏங்க, என்ன சொல்றான்னு கேளுங்களேன் கொஞ்சம்" என அதட்டி அவருக்கு குழம்பு ஊற்றினாள் வசு.


"அகிலாவும் நானும் லௌ பண்றோம்."


"சரி..." (என சர்காசமாக இழுக்கிறார் கோபி)


"என்ன சரி?" - சரவணன்


"ஒரு பொண்ண கூட்னு வந்து இப்டி சொல்றது ஒனக்கும் புதுசில்ல, கேக்கற எங்களுக்கும் புதுசில்ல. இன்னும் எத்தன பேர கூட்டிட்டு வரப்போறியோ."


"ப்பா நா சீரியசா சொல்லிட்டிருக்கேன். நீ வெளாடிட்டிருக்க." எனக்கூறி அகிலாவிடம் திரும்பி, "ஏ அவர் சும்மா சொல்றார்டி, நம்பாத. அவர் வெளாட்றாரு."


"ஆமா இவுரு கோந்த புள்ள இவுர கொஞ்ஞ்ஞ்ஞ்சி வெளாட்றாங்க ('கொஞ்சி' எனும்போது கையை நீட்டி கொஞ்சுவதுபோல் செய்கை)


"இல்ல uncle, நெஜமாதான் லௌ பண்றோம்."  - அகிலா


"இவனயாம்மா பண்ற? என்னம்மா ஆச்சு ஒனக்கு? எதும் ப்லாக்மெய்ல் பண்றானா? லௌ பண்லன்னா கழுத்தறுத்துப்பேன்னு எதும் மெரட்றானா? எதாருந்தாலும் எங்கிட்ட சொல்லு டேசன் எஸ்ஸை தெரிஞ்சவர்தான். உள்ள வச்சு பொள்ந்துர்ரேன்." 


"அய்யோ uncle அப்டிலாம் எதுவும் இல்ல. நெஜமா புடிச்சுப்போய்தான் லௌ பண்ணோம்." 


"புடிச்சுப்போயா? எது இவனப்பாத்தா? ஹய்யோ" எனக்கூறி தலையில் கையை வைத்துக்கொள்கிறார்.


"சரி சாப்ட்டு முடிங்க தெம்பா பேசலாம்" என்கிறார். 

 

"சார் நீங்க கொஞ்சம் ஜாஸ்தியாவே சாப்டுக்கோங்க. அடியெல்லாம் வாங்கணும்ல" என சரவணனிடம் கூறி, "என் பெல்ட் எங்கருக்கு?" என வசுமதியிடம் கேட்கிறார்.


(continued...) 

Comments

  1. The initial lines are exactly from a shortflim but couldn't recall and get the link

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂